|
||||||||
ஐந்தாம் திருமுறை-50 |
||||||||
5.050.திருவாய்மூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர்.
தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
1569 எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ. 5.050.1
தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1570 மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி
என்னை வாவென்று போனார தென்கொலோ. 5.050.2
எம்பெருமானையே நினைந்து, நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக்காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1571 தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே. 5.050.3
தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன்; "அஞ்சாதே! உன்னை அழைக்க வந்தேன்" என்று அருளினார்; 'உய்ந்தேன்' என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன்; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ?
1572 கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தெனகொலோ. 5.050.4
அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை; கண்ணெதிரே கண்டேன்; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை; ஒக்கவே ஓடிவந்தேன்; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ?
1573 ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத்
தௌளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே. 5.050.5
ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு, திருவாய் மூரின்கண் தௌந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே.
1574 யாதே செய்துமி யாமலோ நீயென்னில்
ஆதே யேயு மளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ. 5.050.6
எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும். அளவில்லாத பெருமையுடையான் அவன், மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ?
1575 பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொள்ளித்தவா றென்கொலோ. 5.050.7
பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய்மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னேயோ?
1576 திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. 5.050.8
வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர்.
1577 தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ. 5.050.9
தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள்வாயாக என்று வேண்டினும், பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன், எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ?
1578 தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை
வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே. 5.050.10
பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான்.
திருச்சிற்றம்பலம்
5.050.திருவாய்மூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர். தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
1569 எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடை யாள மருளினார் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனா ரதென்கொலோ. 5.050.1
தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1570 மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ. 5.050.2
எம்பெருமானையே நினைந்து, நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக்காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1571 தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார் உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே. 5.050.3
தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன்; "அஞ்சாதே! உன்னை அழைக்க வந்தேன்" என்று அருளினார்; 'உய்ந்தேன்' என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன்; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ?
1572 கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தெனகொலோ. 5.050.4
அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை; கண்ணெதிரே கண்டேன்; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை; ஒக்கவே ஓடிவந்தேன்; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ?
1573 ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென் றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத் தௌளி யாரிவர் போலத் திருவாய்மூர்க் கள்ளி யாரவர் போலக் கரந்ததே. 5.050.5
ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு, திருவாய் மூரின்கண் தௌந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே.
1574 யாதே செய்துமி யாமலோ நீயென்னில் ஆதே யேயு மளவில் பெருமையான் மாதே வாகிய வாய்மூர் மருவினார் போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ. 5.050.6
எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும். அளவில்லாத பெருமையுடையான் அவன், மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ?
1575 பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா ஓடிப் போந்திங் கொள்ளித்தவா றென்கொலோ. 5.050.7
பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய்மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னேயோ?
1576 திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. 5.050.8
வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர்.
1577 தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன் எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப் புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ. 5.050.9
தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள்வாயாக என்று வேண்டினும், பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன், எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ?
1578 தீண்டற் கரிய திருவடி யொன்றினால் மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே. 5.050.10
பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|