|
||||||||
கார அடை (kara adai) |
||||||||
தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 மிளகு - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 2.துவரம்பருப்பு, பாசிப்பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலையுடன் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். 3.இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் உப்பு போட்டுக் கலக்கவும். 4.கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|