|
|||||
வாக்குப்பதிவு எந்திரத்தில் 49ஓ-வை சேர்க்க அண்ணா குழு கோரிக்கை |
|||||
வாக்குப்பதிவு எந்திரத்தில் 49ஓ-வை சேர்க்க அண்ணா குழு கோரிக்கை:
தேர்தல் சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ள அண்ணா ஹஜாரே குழு, வாக்குப்பதிவு எந்திரங்களில் 'நிராகரிக்கும் உரிமை'யை பதிவு செய்தவற்குரிய 49ஓ-வுக்கென தனி பட்டனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை அண்ணா ஹஜாரே, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, அண்ணா ஹஜாரே குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது.
இதில் முக்கியமாக, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும், 49ஓ-வில் வாக்கினைப் பதிவு செய்வதற்கு, வாக்குப் பதிவு எந்திரத்தில் தனி பட்டனைச் சேர்க்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரைப் போன்றே மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் அரசியலமைப்பு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் ஹஜாரே வலியுறுத்தினார்.
தேர்தலில் நிராகரிக்கும் உரிமை என்பது மிக முக்கியமானது. தேர்தல் முறையைத் தூய்மையாக்குவதற்கு இது உறுதுணைபுரியும்," என்றார் அண்ணா ஹஜாரே. |
|||||
by Swathi on 16 Mar 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|