LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-56

 

4.056.திருஆவடுதுறை 
திருநேரிசை : பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர். 
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை. 
538 மாயிரு ஞால மெல்லா
மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்
படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.1
ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர். அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர். மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர்.
539 மடந்தைபா கத்தர் போலும்
மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
கொல்புலித் தோலர் போலும்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.2
பார்வதி பாகராய், மான்குட்டியை ஏந்திய கையினராய், கும்பகோணப்பதியில் இளையவராய், தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய், கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்டவராய், கூற்றுவனை வெகுண்டவராய்த் தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடுதுறையனார்.
540 உற்றநோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை யாவர் போலும்
செற்றவர் புரங்கண் மூன்றுந்
தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி யேத்திக்
கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.3
அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் அவர்களுக்கு மேம்பாடான துணைவராய், பகைத்த அசுரரின் மும்மதில்களையும் தீக்கிரையாக்கியவராய், ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்ற கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடிவந்து அலந்து பாடுவோராய்த் தம்மிடமே அற்றுத் தீர்ந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறையனார்.
541 மழுவமர் கையர் போலும்
மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
என்புகொண் டணிவர் போலும்
தொழுதெழுந் தாடிப் பாடித்
தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.4
கையில் மழுப்படையை ஏந்தியவராய், பார்வதி பாகராய், கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய், எலும்பினை மாலையாக அணிபவராய், தொழுது எழுந்து ஆடிப்பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
542 பொடியணி மெய்யர் போலும்
பொங்குவெண் ணூலர் போலும்
கடியதோர் விடையர் போலுங்
காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை 1ஆள்வர் போலும
ஆவடு துறைய னாரே.
4.056.5
நீறணிந்த மேனியராய், ஒளி வீசும் வெள்ளிய பூணூலை அணிந்தவராய், விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய், மன்மதனை வெகுண்டவராய், சூட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய், விருப்பத்தோடு முன்நின்று துதிக்கும் அடியவர்களுடைய அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
543 வக்கர னுயிரை வவ்வக்
கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்
தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர் தம்மைத்
துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.6
வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய், தானம் புரிபவர்களுக்குத் தலைவராய், அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய், அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான். 
544 விடைதரு கொடியர் போலும்
வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
உலகமு மாவர் போலும்
அடைபவ ரிடர்க டீர்க்கும்
ஆவடு துறையனாரே.
4.056.7
காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய், வெள்ளிய பூணூலை அணிந்தவராய், மழுப்படையை ஏந்தியவராய், பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய், கீள் உடையை அணிபவராய், உலகங்களை ஆள்பவராய், தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
545 முந்திவா னோர்கள் வந்து
முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
நடுவுடை யார்க ணிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்
திரிபுர மெரிப்பர்போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
ஆவடு துறைய னாரே.
4.056.8
மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான், முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க, சிவபாதங்களைத்தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்திமாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்.
546 பானம ரேன மாகிப்
பாரிடந் திட்ட மாலும்
தேனமர்ந் தேறு மல்லித்
திசைமுக முடைய கோவும்
தீனரைத் தியக் கறுத்த
திருவுரு வுடையர் போலும்
ஆனரை யேற்றர் போலும்
ஆவடு துறைய னாரே.
4.056.9
தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும், தேன்மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம்தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய், வெண்ணிறக் காளை வாகனமுடையவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
547 பார்த்தனுக் கருள்வர் போலும்
படர்சடை முடியர் போலும்
ஏத்துவா ரிடர்கள் தீர
வின்பங்கள்கொடுப்பர் போலும்
கூத்தராய்ப் பாடி யாடிக்
கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவா யலறு விப்பார்
ஆவடு துறைய னாரே.
4.056.10
ஆவடுதுறைப் பெருமானார் அருச்சுனனுக்கு அருள் புரிந்தவராய், விரிந்து பரவிய சடைமுடியை உடையவராய், தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர அவர்களுக்கு இன்பம் நல்குபவராய், கூத்தாடுபவராய்ப் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார். அவர், கொடிய வலிமையை உடைய இராவணனை, அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலைமலையைப் பெயர்க்கவந்த அளவில், அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் அலறுமாறு செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்

 

4.056.திருஆவடுதுறை 

திருநேரிசை : பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர். 

தேவியார் - ஒப்பிலாமுலையம்மை. 

 

 

538 மாயிரு ஞால மெல்லா

மலரடி வணங்கும் போலும்

பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலும்

காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல வூரர்க் கம்பொன்

ஆயிரங் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.1

 

  ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர். அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர். மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர்.

 

 

539 மடந்தைபா கத்தர் போலும்

மான்மறிக் கையர் போலும்

குடந்தையிற் குழகர் போலுங்

கொல்புலித் தோலர் போலும்

கடைந்தநஞ் சுண்பர் போலுங்

காலனைக் காய்வர் போலும்

அடைந்தவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.2

 

  பார்வதி பாகராய், மான்குட்டியை ஏந்திய கையினராய், கும்பகோணப்பதியில் இளையவராய், தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய், கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்டவராய், கூற்றுவனை வெகுண்டவராய்த் தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடுதுறையனார்.

 

 

540 உற்றநோய் தீர்ப்பர் போலும்

உறுதுணை யாவர் போலும்

செற்றவர் புரங்கண் மூன்றுந்

தீயெழச் செறுவர் போலும்

கற்றவர் பரவி யேத்திக்

கலந்துலந் தலந்து பாடும்

அற்றவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.3

 

  அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் அவர்களுக்கு மேம்பாடான துணைவராய், பகைத்த அசுரரின் மும்மதில்களையும் தீக்கிரையாக்கியவராய், ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்ற கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடிவந்து அலந்து பாடுவோராய்த் தம்மிடமே அற்றுத் தீர்ந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறையனார்.

 

 

541 மழுவமர் கையர் போலும்

மாதவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும்

என்புகொண் டணிவர் போலும்

தொழுதெழுந் தாடிப் பாடித்

தோத்திரம் பலவுஞ் சொல்லி

அழுமவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.4

 

  கையில் மழுப்படையை ஏந்தியவராய், பார்வதி பாகராய், கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய், எலும்பினை மாலையாக அணிபவராய், தொழுது எழுந்து ஆடிப்பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.

 

 

542 பொடியணி மெய்யர் போலும்

பொங்குவெண் ணூலர் போலும்

கடியதோர் விடையர் போலுங்

காமனைக் காய்வர் போலும்

வெடிபடு தலையர் போலும்

வேட்கையாற் பரவுந் தொண்டர்

அடிமையை 1ஆள்வர் போலும

ஆவடு துறைய னாரே.

4.056.5

 

  நீறணிந்த மேனியராய், ஒளி வீசும் வெள்ளிய பூணூலை அணிந்தவராய், விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய், மன்மதனை வெகுண்டவராய், சூட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய், விருப்பத்தோடு முன்நின்று துதிக்கும் அடியவர்களுடைய அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.

 

 

543 வக்கர னுயிரை வவ்வக்

கண்மலர் கொண்டு போற்றச்

சக்கரங் கொடுப்பர் போலுந்

தானவர் தலைவர் போலும்

துக்கமா மூடர் தம்மைத்

துயரிலே வீழ்ப்பர் போலும்

அக்கரை யார்ப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.6

 

  வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய், தானம் புரிபவர்களுக்குத் தலைவராய், அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய், அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான். 

 

 

544 விடைதரு கொடியர் போலும்

வெண்புரி நூலர் போலும்

படைதரு மழுவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்

உடைதரு கீளர் போலும்

உலகமு மாவர் போலும்

அடைபவ ரிடர்க டீர்க்கும்

ஆவடு துறையனாரே.

4.056.7

 

  காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய், வெள்ளிய பூணூலை அணிந்தவராய், மழுப்படையை ஏந்தியவராய், பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய், கீள் உடையை அணிபவராய், உலகங்களை ஆள்பவராய், தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.

 

 

545 முந்திவா னோர்கள் வந்து

முறைமையால் வணங்கி யேத்த

நந்திமா காள ரென்பார்

நடுவுடை யார்க ணிற்பச்

சிந்தியா தேயொ ழிந்தார்

திரிபுர மெரிப்பர்போலும்

அந்திவான் மதியஞ் சூடும்

ஆவடு துறைய னாரே.

4.056.8

 

  மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான், முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க, சிவபாதங்களைத்தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்திமாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்.

 

 

546 பானம ரேன மாகிப்

பாரிடந் திட்ட மாலும்

தேனமர்ந் தேறு மல்லித்

திசைமுக முடைய கோவும்

தீனரைத் தியக் கறுத்த

திருவுரு வுடையர் போலும்

ஆனரை யேற்றர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.056.9

 

  தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும், தேன்மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம்தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய், வெண்ணிறக் காளை வாகனமுடையவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.

 

 

547 பார்த்தனுக் கருள்வர் போலும்

படர்சடை முடியர் போலும்

ஏத்துவா ரிடர்கள் தீர

வின்பங்கள்கொடுப்பர் போலும்

கூத்தராய்ப் பாடி யாடிக்

கொடுவலி யரக்கன் றன்னை

ஆர்த்தவா யலறு விப்பார்

ஆவடு துறைய னாரே.

4.056.10

 

  ஆவடுதுறைப் பெருமானார் அருச்சுனனுக்கு அருள் புரிந்தவராய், விரிந்து பரவிய சடைமுடியை உடையவராய், தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர அவர்களுக்கு இன்பம் நல்குபவராய், கூத்தாடுபவராய்ப் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார். அவர், கொடிய வலிமையை உடைய இராவணனை, அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலைமலையைப் பெயர்க்கவந்த அளவில், அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் அலறுமாறு செய்தவராவர்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.