|
||||||||
நான்காம் திருமுறை-109 |
||||||||
4.109.திருமாற்பேறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன
மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன
கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன
பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே றுடையான்
மலரடியே.
4.109.1
மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன. மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன. ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன. மாணிக்கம் போன்று ஒளி வீசுவன. மேலும் வீடுபேற்றை நல்குவன.
1027 கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன
காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன
கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம
லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான்
மலரடியே.
4.109.2
கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன. அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன.
திருச்சிற்றம்பலம்
4.109.திருமாற்பேறு திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மால்வணங்குமீசர். தேவியார் - கருணைநாயகியம்மை.
1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே. 4.109.1
மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன. மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன. ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன. மாணிக்கம் போன்று ஒளி வீசுவன. மேலும் வீடுபேற்றை நல்குவன.
1027 கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே. 4.109.2
கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன. அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|