LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-107

 

2.107.திருக்கேதீச்சரம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதீச்சுவரர். 
தேவியார் - கௌரிநாயகியம்மை. 
2627 விருது குன்றமா மேருவில் நாணர 
வாஅனல் எரிஅம்பாப் 
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் 
றுறைபதி யெந்நாளும் 
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் 
பொழிலணி மாதோட்டம் 
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் 
கடுவினை யடையாவே.
2.107. 1
வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர், ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட, மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா. 
2628 பாடல் வீணையர் பலபல சரிதையர் 
எருதுகைத் தருநட்டம் 
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் 
சுண்டிருள் கண்டத்தர் 
ஈட மாவது விருங்கடற் கரையினில் 
எழில்திகழ் மாதோட்டம் 
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் 
கெடுமிடர் வினைதானே.
2.107. 2
வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினைகெடும். 
2629 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் 
அறைகழல் சிலம்பார்க்கச் 
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் 
அகந்தொறும் இடுபிச்சைக் 
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் 
உயர்தரு மாதோட்டத் 
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் 
கருவினை யடையாவே.
2.107.3
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறை தவழ் சடையின. திருநீற்றை விரும்பிப்பூசி. கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர். பாடுபவர், உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர். அவ்விறைவர் எழுந்தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடைபவரை இருவினைகள் அடையா. 
2630 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் 
விரிதரு கரத்தேந்தும் 
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் 
மறிகடல் மாதோட்டத் 
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் 
பரிந்தசிந் தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
2.107. 4
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர். விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர். முப்புரி நூல் அணிந்தவர். மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும். 
2631 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் 
மடைந்தவர்க் கருளீய 
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் 
மலிகடல் மாதோட்டத் 
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் 
இராப்பகல் நினைந்தேத்தி 
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் 
அன்பராம் அடியாரே.
2.107.5
மிகவும் நல்லவர். ஞானம் நன்கு உடையவர். தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர. நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர். 
2632 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் 
பொருந்தவைத் தொருபாகம் 
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய 
பொருளினர் குடிவாழ்க்கை 
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற 
மருவிய மாதோட்டக் 
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே 
தீச்சரம் பிரியாரே.
2.107. 6
பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் திருமேனியின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமையம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில், பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார். 
2633 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் 
லுலகினில் உயிர்வாழ்க்கை 
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் 
காதலித் துறைகோயில் 
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை 
நடமிடு மாதோட்டம் 
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே 
தீச்சர மதுதானே.
2.107.7
முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார், கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும், சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும். 
2634 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் 
தெடுத்தவன் முடிதிண்தோள் 
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த 
தலைவனார் கடல்வாயப் 
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் 
பொருந்திய மாதோட்டத் 
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே 
தீச்சரத் துள்ளாரே.
2.107. 8
தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன்முடி, தோள் ஆகியன அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள்செய்த தலைவனார், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார். 
2635 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் 
புவியிடந் தெழுந்தோடி 
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா 
வித்தக மென்னாகும் 
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா 
தோட்டநன் னகர்மன்னித் 
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் 
திருந்தஎம் பெருமானே.
2.107.9
மா, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ? இஃது எதிர் நிரல் நிறை. 
2636 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் 
புறனுரைச் சமணாதர் 
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய 
ஏழைமை கேளேன்மின் 
மத்த யானையை மறுகிட வுரிசெய்து 
போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே 
தீச்சரம் அடைமின்னே.
2.107.10
புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள். 
2637 மாடெ லாமண முரசெனக் கடலின 
தொலிகவர் மாதோட்டத் 
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் 
தடிகளை யணிகாழி 
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் 
நவின்றெழு பாமாலைப் 
பாட லாயின பாடுமின்ப த்தர்கள் 
பரகதி பெறலாமே.
2.107. 11
அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம். 
திருச்சிற்றம்பலம்

2.107.திருக்கேதீச்சரம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் ஈழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதீச்சுவரர். தேவியார் - கௌரிநாயகியம்மை. 

2627 விருது குன்றமா மேருவில் நாணர வாஅனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.2.107. 1
வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர், ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட, மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா. 

2628 பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.2.107. 2
வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினைகெடும். 

2629 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.2.107.3
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறை தவழ் சடையின. திருநீற்றை விரும்பிப்பூசி. கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர். பாடுபவர், உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர். அவ்விறைவர் எழுந்தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடைபவரை இருவினைகள் அடையா. 

2630 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்மொய்த்தெழும் வினைபோமே.2.107. 4
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர். விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர். முப்புரி நூல் அணிந்தவர். மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும். 

2631 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் மடைந்தவர்க் கருளீய வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத் தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.2.107.5
மிகவும் நல்லவர். ஞானம் நன்கு உடையவர். தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர. நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர். 

2632 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம் மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.2.107. 6
பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் திருமேனியின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமையம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில், பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார். 

2633 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கை கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு மாதோட்டம் தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தீச்சர மதுதானே.2.107.7
முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார், கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும், சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும். 

2634 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத் துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.2.107. 8
தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன்முடி, தோள் ஆகியன அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள்செய்த தலைவனார், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார். 

2635 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும் மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித் தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.2.107.9
மா, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ? இஃது எதிர் நிரல் நிறை. 

2636 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர் எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின் மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.2.107.10
புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள். 

2637 மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத் தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின்ப த்தர்கள் பரகதி பெறலாமே.2.107. 11
அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.