|
||||||||
நான்காம் திருமுறை-104 |
||||||||
4.104.திருநாகைக்காரோணம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
993 வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை
வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக்
காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற்
கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ
லெம்மிறையே.
4.104.1
அழகிய பார்வதி பாகனே! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த, கடலையடுத்த நாகைக் காரோணனே! எம்தலைவனே! பெண்யானை, மதமுடைய ஆண்யானை, விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய, இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர்வதன் காரணம் என்ன?
994 கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங்
கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி
வியன்கரமே
நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர
நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல்
செப்புமினே.
4.104.2
கற்றவர்கள் பெருகிய, கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானே! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே, நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள்.
995 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி
தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக்
காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும்
மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள்
சங்கரனே.
4.104.3
தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே! எங்கள் சங்கரனே! உன் திருப்பெயரை முன்நின்று துதித்து நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக.
996 பழிவழி யோடிய பாவிப் பறிதலைக்
குண்டர் தங்கள்
மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக்
காத்துக்கொண்டாய்
கழிவழி யோத முலவு கடனாகைக்
காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ண மருளெங்கள்
வானவனே.
4.104.4
உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே! எங்கள் தேவனே! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான, தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான, சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய். வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது? அதனை அடியேற்கு அருளுவாயாக.
997 செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத்
தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநட மாட
மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா
ரோணமென்றும்
சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந்
திருமங்கையே.
4.104.5
சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும், வெள்ளிய பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.
998 பனைபுரை கைம்மத யானை யுரித்த
பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங்
கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர்
மயக்க நீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
யான்செயுமிச்சைகளே.
4.104.6
பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மதயானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண்டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது?
999 சீர்மலி செல்வம் பெரிது டையசெம்பொன்
மாமலையே
கார்மலி சோலை சுலவு கடனாகைக்
காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி வந்திடச்
சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொ டுண்பது மாதிமை
யோவுரையே.
4.104.7
சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா? செல்வாயாக.
1000 வங்க மலிகட னாகைக்கா ரோணத்தெம்
வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்ப முண்டது
கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை
மௌளவுமை
நங்கை யறியிற்பொல் லாதுகண் டாயெங்க
ணாயகனே.
4.104.8
கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே! எங்கள் பெருமானே! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது. அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக. எங்கள் தலைவரே! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும்.
1001 கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக்
காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன்
றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும்
பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்தில
னெம்மிறையே.
4.104.9
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும்தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது, அன்று, அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை.
திருச்சிற்றம்பலம்
4.104.திருநாகைக்காரோணம் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். தேவியார் - நீலாயதாட்சியம்மை.
993 வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய் கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே பிடிமதவாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே. 4.104.1
அழகிய பார்வதி பாகனே! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த, கடலையடுத்த நாகைக் காரோணனே! எம்தலைவனே! பெண்யானை, மதமுடைய ஆண்யானை, விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய, இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர்வதன் காரணம் என்ன?
994 கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே. 4.104.2
கற்றவர்கள் பெருகிய, கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானே! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே, நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள்.
995 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின் நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும் சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே. 4.104.3
தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே! எங்கள் சங்கரனே! உன் திருப்பெயரை முன்நின்று துதித்து நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக.
996 பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள் மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய் கழிவழி யோத முலவு கடனாகைக் காரோணவென் வழிவழி யாளாகும் வண்ண மருளெங்கள் வானவனே. 4.104.4
உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே! எங்கள் தேவனே! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான, தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான, சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய். வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது? அதனை அடியேற்கு அருளுவாயாக.
997 செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார் வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்த செல்வக் கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா ரோணமென்றும் சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே. 4.104.5
சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும், வெள்ளிய பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.
998 பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்க நீக்கி எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயுமிச்சைகளே. 4.104.6
பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மதயானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண்டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது?
999 சீர்மலி செல்வம் பெரிது டையசெம்பொன் மாமலையே கார்மலி சோலை சுலவு கடனாகைக் காரோணனே வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து ஊர்மலி பிச்சைகொ டுண்பது மாதிமை யோவுரையே. 4.104.7
சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா? செல்வாயாக.
1000 வங்க மலிகட னாகைக்கா ரோணத்தெம் வானவனே எங்கள் பெருமானொர் விண்ணப்ப முண்டது கேட்டருளீர் கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மௌளவுமை நங்கை யறியிற்பொல் லாதுகண் டாயெங்க ணாயகனே. 4.104.8
கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே! எங்கள் பெருமானே! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது. அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக. எங்கள் தலைவரே! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும்.
1001 கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான் இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான் பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்தில னெம்மிறையே. 4.104.9
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும்தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது, அன்று, அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|