|
||||||||
கடலைப் பருப்பு கார போளி (kadalai paruppu poli) |
||||||||
தேவையானவை: மேல்மாவு: மைதா – 1 1/2 கப் கோதுமை மாவு – 1/4 கப் ரவை – 2 டேபிள்ஸ்பூன் கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை எண்ணை – 1/2 கப் சமையல் சோடா – 1/4 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை கடலைப்பருப்பு – 2 கப் தேங்காய் – 1 கசகசா – 2 டீஸ்பூன் உருளைக் கிழங்கு – 1 பச்சை மிளகாய் – 8 பெருங்காயம் – 1 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிது நெய் – தேவையான அளவு செய்முறை: 1.மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். 2.பிறகு வெந்த கடலைப்பருப்போடு தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, வேகவைத்த உருளைக் கிழங்கு, உப்பு, அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறுக்கமாகக் கிளறி இறக்கவும். 4.மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். 5.இட்ட போளிகளை எண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|