LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-2

 

2.002.திருவலஞ்சுழி 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர். 
தேவியார் - மங்களநாயகியம்மை. 
1480 விண்டெ லாமல ரவ்விரை 
நாறுதண் டேன்விம்மி 
வண்டெ லாம்நசை யால்இசை 
பாடும்வ லஞ்சுழித் 
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் 
போல்ஒளி யீர்சொலீர் 
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி 
பாடல்ப யின்றதே.
2.002. 1
 மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 
1481 பாரல் வெண்குரு கும்பகு 
வாயன நாரையும் 
வாரல் வெண்டிரை வாயிரை 
தேரும்வ லஞ்சுழி 
மூரல் வெண்முறு வல்நகு 
மொய்யொளி யீர்சொலீர் 
ஊரல் வெண்டலை கொண்டுல 
கொக்கவு ழன்றதே.
2.002.2
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக. 
1482 கிண்ண வண்ணமல ருங்கிளர் 
தாமரைத் தாதளாய் 
வண்ண நுண்மணன் மேலனம் 
வைகும்வ லஞ்சுழிச் 
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் 
பூசவல் லீர்சொலீர் 
விண்ண வர்தொழ வெண்டலை 
யிற்பலி கொண்டதே.
2.002. 3
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 
1483 கோடெ லாநிறை யக்குவ 
ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண 
நாறும்வ லஞ்சுழிச் 
சேடெ லாமுடை யீர்சிறு 
மான்மறி யீர்சொலீர் 
நாடெ லாமறி யத்தலை 
யில்நற வேற்றதே.
2.002.4
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக. 
1484 கொல்லை வென்றபுனத் திற்குரு 
மாமணி கொண்டுபோய் 
வல்லை நுண்மணன் மேலனம் 
வைகும்வ லஞ்சுழி 
முல்லை வெண்முறு வன்னகை 
யாளொளி யீர்சொலீர் 
சில்லை வெண்டலை யிற்பலி 
கொண்டுழல் செல்வமே.
2.002.5
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக. 
1485 பூச நீர்பொழி யும்புனற் 
பொன்னியிற் பன்மலர் 
வாச நீர்குடை வாரிடர் 
தீர்க்கும்வ லஞ்சுழித் 
தேச நீர்திரு நீர்சிறு 
மான்மறி யீர்சொலீர் 
ஏச வெண்டலை யிற்பலி 
கொள்வ திலாமையே
2.002.6
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக. 
1486 கந்த மாமலர்ச் சந்தொடு 
காரகி லுந்தழீஇ 
வந்த நீர்குடை வாரிடர் 
தீர்க்கும்வ லஞ்சுழி 
அந்த நீர்முத னீர்நடு 
வாமடி கேள்சொலீர் 
பந்த நீர்கரு தாதுல 
கிற்பலி கொள்வதே.
2.002.7
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக. 
1487 தேனுற் றநறு மாமலர்ச் 
சோலையில் வண்டினம் 
வானுற் றநசை யாலிசை 
பாடும்வ லஞ்சுழிக் 
கானுற் றகளிற் றின்னுரி 
போர்க்கவல் லீர்சொலீர் 
ஊனுற் றதலை கொண்டுல 
கொக்கவு ழன்றதே.
2.002.8
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக. 
1488 தீர்த்த நீர்வந் திழிபுனற் 
பொன்னியிற் பன்மலர் 
வார்த்த நீர்குடை வாரிடர் 
தீர்க்கும்வ லஞ்சுழி 
ஆர்த்து வந்தவ ரக்கனை 
அன்றடர்த் தீர்சொலீர் 
சீர்த்த வெண்டலை யிற்பலி 
கொள்வதுஞ் சீர்மையே.
2.002.9
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன்மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக. 
1489 உரம னுஞ்சடை யீர்விடை 
யீரும தின்னருள் 
வரம னும்பெற லாவது 
மெந்தைவ லஞ்சுழிப் 
பிரம னுந்திரு மாலும 
ளப்பரி யீர்சொலீர் 
சிரமெ னுங்கல னிற்பலி 
வேண்டிய செல்வமே.
2.002. 10
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 
1490 வீடும் ஞானமும் வேண்டுதி 
ரேல்விர தங்களால் 
வாடின் ஞானமென் னாவது 
மெந்தைவ லஞ்சுழி 
நாடி ஞானசம் பந்தன 
செந்தமிழ் கொண்டிசை 
பாடும் ஞானம்வல் லாரடி
சேர்வது ஞானமே.
2.002.11
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞான சம்பந்தர் ஓதி யருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும். 
திருச்சிற்றம்பலம்

2.002.திருவலஞ்சுழி 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர். தேவியார் - மங்களநாயகியம்மை. 

1480 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித் தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே.2.002. 1
 மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 

1481 பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும் வாரல் வெண்டிரை வாயிரை தேரும்வ லஞ்சுழி மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர் ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.2.002.2
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக. 

1482 கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய் வண்ண நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழிச் சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவல் லீர்சொலீர் விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.2.002. 3
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 

1483 கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழிமாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச் சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர் நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.2.002.4
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக. 

1484 கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய் வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர் சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.2.002.5
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக. 

1485 பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர் வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித் தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர் ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே2.002.6
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக. 

1486 கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர் பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.2.002.7
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக. 

1487 தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம் வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக் கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர் ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.2.002.8
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக. 

1488 தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர் வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர் சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.2.002.9
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன்மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக. 

1489 உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள் வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப் பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர் சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.2.002. 10
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 

1490 வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால் வாடின் ஞானமென் னாவது மெந்தைவ லஞ்சுழி நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை பாடும் ஞானம்வல் லாரடிசேர்வது ஞானமே.2.002.11
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞான சம்பந்தர் ஓதி யருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.