|
||||||||
ஐந்தாம் திருமுறை-48 |
||||||||
5.048.திருவேகம்பம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
1548 பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற்படவடி யோங்களே. 5.048.1
தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும், பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும்'யாங்களே பிரமம்' என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே! திருவேகம்பத்தை உடையவனே! நின் அடியோமாகிய யாங்கள் அல்லறபடுதலும் ஆமோ?
1549 அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே. 5.048.2
அரிய திறலை உடைய தேவர்களும், திருமாலும், பிரமனும் திருத்த முறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்ற வழிபடற்கு எழுவோமாக.
1550 கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே. 5.048.3
திருநீலகண்டனும், எட்டுத்தோள்களை உடைய இறைவனும், முக்கண்ணினனும், வேதம் ஓதும் நாவினனும், தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம்பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத்தொழுவோமாக.
1551 பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றுமமு தாயவ னேகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. 5.048.4
பொறிகளைப், புலன்களின்வழிப் போதல் தவிர்த்து, உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறம் அமுதாகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக.
1552 சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப்
புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே. 5.048.5
சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு, அந்தியாகவும், அனலாகவும், புனலாகவும், வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து, உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக.
1553 சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. 5.048.6
புத்தமும், சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல், மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக.
1554 மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழி லேகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே. 5.048.7
வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே, அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும்,காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக.
1555 ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே. 5.048.8
நெஞ்சமே! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக.
1556 பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. 5.048.9
அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம்.
1557 அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. 5.048.10
தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைழு சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும், அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள் புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக.
திருச்சிற்றம்பலம்
5.048.திருவேகம்பம் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர். தேவியார் - காமாட்சியம்மை.
1548 பூமே லானும் பூமகள் கேள்வனும் நாமே தேவ ரெனாமை நடுக்குறத் தீமே வும்முரு வாதிரு வேகம்பா ஆமோ அல்லற்படவடி யோங்களே. 5.048.1
தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும், பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும்'யாங்களே பிரமம்' என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே! திருவேகம்பத்தை உடையவனே! நின் அடியோமாகிய யாங்கள் அல்லறபடுதலும் ஆமோ?
1549 அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோ டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம் பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே. 5.048.2
அரிய திறலை உடைய தேவர்களும், திருமாலும், பிரமனும் திருத்த முறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்ற வழிபடற்கு எழுவோமாக.
1550 கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன் மறைகொள் நாவினன் வானவர்க் காதியான் உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம் முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே. 5.048.3
திருநீலகண்டனும், எட்டுத்தோள்களை உடைய இறைவனும், முக்கண்ணினனும், வேதம் ஓதும் நாவினனும், தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம்பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத்தொழுவோமாக.
1551 பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு றுமமு தாயவ னேகம்பம் குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. 5.048.4
பொறிகளைப், புலன்களின்வழிப் போதல் தவிர்த்து, உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறம் அமுதாகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக.
1552 சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப் புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம் எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே. 5.048.5
சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு, அந்தியாகவும், அனலாகவும், புனலாகவும், வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து, உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக.
1553 சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும் பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப் பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம் நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. 5.048.6
புத்தமும், சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல், மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக.
1554 மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை காப்ப தாய கடிபொழி லேகம்பம் சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே. 5.048.7
வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே, அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும்,காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக.
1555 ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும் சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே நீல மாமிடற் றண்ணலே கம்பனார் கோல மாமலர்ப் பாதமே கும்பிடே. 5.048.8
நெஞ்சமே! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக.
1556 பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. 5.048.9
அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம்.
1557 அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித் திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம் தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. 5.048.10
தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைழு சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும், அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள் புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|