|
||||||||
ஐந்தாம் திருமுறை-74 |
||||||||
5.074.திருஎறும்பியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எறும்பீசுவரர்.
தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.
1810 விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.1
அறியாமை உடைய நெஞ்சமே! வெண்தலையைக் கையில் உடையவனும், எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன், கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான். அவனை விடாது விரும்பியுறுவாயாக.
1811 பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.2
எங்கள் இறைவன், விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும், பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும், நெற்றிக்கண்ணனும் ஆகி, மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1812 மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.3
எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும், தானவர்க்கு இன்சுவையாகவும், முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும், நெற்றிக்கண்ணனாகவும், பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1813 நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.4
எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும், மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும், ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன்.
1814 நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.5
நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும், நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து, விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன், எறும்பியூர் மலையினன்.
1815 கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே. 5.074.6
சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில், மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1816 மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே.
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த வியற்கையே. 5.074.7
அறிவற்ற நெஞ்சமே! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே; புறத்தேகோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1817 இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகு மெறும்பியூ ரீசனே. 5.074.8
எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும், "அன்பனே! அரனே!ழு என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .
1818 கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாயுயி ராயவன்
எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே. 5.074.9
எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன், கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும், விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும், உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன்.
1819 நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே. 5.074.10
எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன், நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும், அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான்.
திருச்சிற்றம்பலம்
5.074.திருஎறும்பியூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - எறும்பீசுவரர். தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.
1810 விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் இரும்பி னூறல றாததோர் வெண்தலை எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.1
அறியாமை உடைய நெஞ்சமே! வெண்தலையைக் கையில் உடையவனும், எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன், கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான். அவனை விடாது விரும்பியுறுவாயாக.
1811 பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.2
எங்கள் இறைவன், விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும், பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும், நெற்றிக்கண்ணனும் ஆகி, மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1812 மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.3
எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும், தானவர்க்கு இன்சுவையாகவும், முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும், நெற்றிக்கண்ணனாகவும், பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1813 நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய் அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.4
எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும், மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும், ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன்.
1814 நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.074.5
நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும், நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து, விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன், எறும்பியூர் மலையினன்.
1815 கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் திறம்பி யூர்வன மற்றும் பலவுள குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை எறும்பி யூரரன் செய்த இயற்கையே. 5.074.6
சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில், மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1816 மறந்து மற்றிது பேரிடர் நாடொறும் திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே. புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை எறும்பி யூரரன் செய்த வியற்கையே. 5.074.7
அறிவற்ற நெஞ்சமே! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே; புறத்தேகோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1817 இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு துன்ப மும்முட னேவைத்த சோதியான் அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் கின்ப னாகு மெறும்பியூ ரீசனே. 5.074.8
எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும், "அன்பனே! அரனே!ழு என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .
1818 கண்நி றைந்த கனபவ ளத்திரள் விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான் உள்நி றைந்துரு வாயுயி ராயவன் எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே. 5.074.9
எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன், கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும், விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும், உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன்.
1819 நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே. 5.074.10
எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன், நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும், அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|