LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-118

 

2.118.திருத்திலதைப்பதி 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர். 
தேவியார் - பொற்கொடியம்மை. 
2747 பொடிகள்பூசிப் பலதொண்டர் 
கூடிப் புலர்காலையே 
அடிகளாரத் தொழுதேத்த 
நின்ற அழகன்னிடம் 
கொடிகளோங்கிக் குலவும் 
விழவார் திலதைப்பதி 
வடிகொள்சோலைம் மலர் 
மணங்கமழும் மதிமுத்தமே.
2.118. 1
வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும். 
2748 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு 
சாந்துங்கமழ் துணையலும் 
கொண்டுகண்டார் குறிப்புணர 
நின்ற குழகன்னிடம் 
தெண்டிரைப்பூம் புனலரிசில் 
சூழ்ந்த திலதைப்பதி 
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் 
சோலைம் மதிமுத்தமே.
2.118. 2
தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும். 
2749 அடலுளேறுய்த் துகந்தான் 
அடியார் அமரர்தொழக் 
கடலுள்நஞ்ச அமுதாக 
வுண்ட கடவுள்ளிடம் 
திடலடங்கச் செழுங்கழனி 
சூழ்ந்த திலதைப்பதி 
மடலுள்வாழைக் கனிதேன் 
பிலிற்றும் மதிமுத்தமே.
2.118. 3
திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும். 
2750 கங்கைதிங்கள் வன்னிதுன் 
எருக்கின்னொடு கூவிளம் 
வெங்கண்நாகம் விரிசடையில் 
வைத்த விகிர்தன்னிடம் 
செங்கயல்பாய் புனலரிசில் 
சூழ்ந்த திலதைப்பதி 
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் 
தழகார் மதிமுத்தமே.
2.118. 4
கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும். 
2751 புரவியேழும் மணிபூண் 
டியங்குங்கொடித் தேரினான் 
பரவிநின்று வழிபாடு 
செய்யும்பர மேட்டியூர் 
விரவிஞாழல் விரிகோங்கு 
வேங்கைசுர புன்னைகள் 
மரவமவ்வல் மலருந் 
திலதைம் மதிமுத்தமே.
2.118. 5
ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும். 
2752 விண்ணர்வேதம் விரித்தோத 
வல்லார் ஒருபாகமும் 
பெண்ணர்எண்ணார் எயில் 
செற்றுகந்த பெருமானிடம் 
தெண்ணிலாவின் ஒளிதீண்டு 
சோலைத் திலதைப்பதி 
மண்ணுளார்வந் தருள்பேண 
நின்றம் மதிமுத்தமே.
2.118. 6
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும். 
2753 ஆறுசூடி யடையார்புரஞ் 
செற்றவர் பொற்றொடி 
கூறுசேரும் முருவர்க் 
கிடமாவது கூறுங்கால் 
தேறலாரும் பொழில் 
சூழ்ந்தழகார் திலதைப்பதி 
மாறிலாவண் புனலரிசில் 
சூழ்ந்தம் மதிமுத்தமே.
2.118. 7
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும். 
2754 கடுத்துவந்த கனன்மேனி 
யினான்கரு வரைதனை 
எடுத்தவன்றன் முடிதோள் 
அடர்த்தார்க் கிடமாவது 
புடைக்கொள்பூகத் திளம்பாளை 
புல்கும் மதுப்பாயவாய் 
மடுத்துமந்தி யுகளுந் 
திலதைம் மதிமுத்தமே.
2.118. 8
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும். 
2755 படங்கொணாகத் தணையானும் 
பைந்தா மரையின்மிசை 
இடங்கொணால்வே தனுமேத்த 
நின்ற இறைவன்னிடம் 
திடங்கொள்நாவின் இசைதொண்டர் 
பாடுந் திலதைப்பதி 
மடங்கல்வந்து வழிபாடு 
செய்யும் மதிமுத்தமே.
2.118. 9
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும். 
2756 புத்தர்தேரர் பொறியில் 
சமணர்களும் வீறிலாப் 
பித்தர்சொன்னம் மொழிகேட்கி 
லாத பெருமானிடம் 
பத்தர்சித்தர் பணிவுற் 
றிறைஞ்சுந் திலதைப்பதி 
மத்தயானை வழிபாடு 
செய்யும் மதிமுத்தமே.
2.118. 10
புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும். 
2757 மந்தமாரும் பொழில் 
சூழ்திலதைம் மதிமுத்தமேற் 
கந்தமாருங் கடற்காழி 
யுள்ளான் தமிழ்ஞானசம் 
பந்தன்மாலை பழிதீர 
நின்றேத்த வல்லார்கள்போய்ச் 
சிந்தைசெய்வார் சிவன்சேவடி 
சேர்வது திண்ணமே.
2.118. 11
தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி. 
திருச்சிற்றம்பலம்

2.118.திருத்திலதைப்பதி 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர். தேவியார் - பொற்கொடியம்மை. 

2747 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.2.118. 1
வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும். 

2748 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும் கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம் தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைம் மதிமுத்தமே.2.118. 2
தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும். 

2749 அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக் கடலுள்நஞ்ச அமுதாக வுண்ட கடவுள்ளிடம் திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.2.118. 3
திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும். 

2750 கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம் செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.2.118. 4
கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும். 

2751 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான் பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் மரவமவ்வல் மலருந் திலதைம் மதிமுத்தமே.2.118. 5
ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும். 

2752 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும் பெண்ணர்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம் தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி மண்ணுளார்வந் தருள்பேண நின்றம் மதிமுத்தமே.2.118. 6
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும். 

2753 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி கூறுசேரும் முருவர்க் கிடமாவது கூறுங்கால் தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.2.118. 7
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும். 

2754 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய் மடுத்துமந்தி யுகளுந் திலதைம் மதிமுத்தமே.2.118. 8
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும். 

2755 படங்கொணாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை இடங்கொணால்வே தனுமேத்த நின்ற இறைவன்னிடம் திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடுந் திலதைப்பதி மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.2.118. 9
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும். 

2756 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம் பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.2.118. 10
புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும். 

2757 மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேற் கந்தமாருங் கடற்காழி யுள்ளான் தமிழ்ஞானசம் பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள்போய்ச் சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.2.118. 11
தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.