|
||||||||
காரட் பொங்கல் (carrot pongal) |
||||||||
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் துவரம்பருப்பு - அரை கப் தக்காளி - ஒரு கப் கடுகு - ஒரு டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 புதினா இலைகள் - கால் கப் துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் காரட் துருவல் - 2 கப் பச்சை பட்டாணி - அரை கப் தேங்காய்ப் பால் - ஒரு கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானதும் கடுகைச் சேர்க்கவும். 2.கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து, அதன் பிறகு அரிந்த தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும். 3.பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, புதினாவை நன்கு அரைத்து, காரட் துருவல், பட்டாணி, மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு வதக்கவும். 4.ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள அரிசி, பருப்பினை எடுத்துகொண்டு, அத்துடன் வதக்கின கலவையைச் சேர்த்து, தேவையான உப்பு, நீர், தேங்காய் பால் சேர்த்து கிளறி, குக்கரில் வைத்து வேக வைக்கவும். 5.பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|