LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-10

 

6.010.திருப்பந்தணைநல்லூர் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பசுபதீசுவரர். 
தேவியார் - காம்பன்னதோளியம்மை. 
2182 நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் 
நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் 
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார் 
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங்கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார் 
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.1
பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும், மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர். அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து, கையில் தீயினைக் கொண்டு, பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர்.
2183 காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்.
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.2
பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து, களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து, மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு, ஒற்றியூரை உகந்து, அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து, பிடவம், மொந்தை, குடமுழா, கொடுகொட்டி, குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது, அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர்.
2184 பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.3
தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர். விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர். வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர். திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.
2185 நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.4
கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர். மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று, ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று, பிச்சையிட வந்த மகளிரின் நிறை எனற பண்பினைக் கவர்ந்தவர். அவர் மழு ஏந்தி, உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர்.
2186 தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.5
அண்டங்களையும் கடந்த எங்கும் பரவியிருப்பவராய், எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர். நடுங்காத அழகிய தலையை உடையவர். தூய நீறணிந்தவர். சடையில் முடிமாலை சூடியவர். இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர். அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.
2187 கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.6
கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும், உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான், மத யானைத் தோலைப் போர்த்தவர். எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர். மான் தோலைத் தோளில் அணிந்து, நாகத்தைத் திருமேனியிற் பூண்டு, முடியிலும் பாம்பினைச் சூடி, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதுகின்ற நாவினை உடையவர். அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர்.
2188 முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.7
பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர். அவர் பிறை சூடிய சடையினர். மூவுலகும் துதிக்கும் முதல்வர். சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர். பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர். வெள்ளியநீறு அணிபவர். தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர். பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார்.
2189 கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப் 
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார் 
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.8
தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும், பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும், நில உலகத்தவரும் வானுலகத்தவரும், பிரமன் உபபிரமர்களும், உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர். கண் பொருந்திய நெற்றியை உடையவர். கையில் மழு ஏந்தியவர். காட்டிலும், நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார்.
2190 ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.9
பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர். தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர். நீறணிந்த மேனியர். விடத்தை உண்டவர். வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர். உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர். கங்கை தங்கு சடையினர். ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர். தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர். புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர்.
2191 கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
6.010.10
ஞானத்தை அடியார்க்கு வழங்கு பவராய்த் தாமே ஞானவடிவாகி, நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய், நாகை, குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான்.அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர். வலிமை மிகுந்த அழகிய கயிலாயமலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன்தலைகள் சிதறுமாறு கோபித்த அப்பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர். அவர் பைங்கண் ஏறுஇவர்ந்து பணி ஏற்றவர்.
திருச்சிற்றம்பலம்

 

6.010.திருப்பந்தணைநல்லூர் 

திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - பசுபதீசுவரர். 

தேவியார் - காம்பன்னதோளியம்மை. 

 

 

2182 நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் 

நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்

பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் 

பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி

ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார் 

அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங்கொண்டார்

பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார் 

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.1

 

  பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும், மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர். அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து, கையில் தீயினைக் கொண்டு, பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர்.

 

 

2183 காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்

களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக

ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்

உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்

பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை

குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்

பாடலா ராடலார் பைங்க ணேற்றார்.

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.2

 

  பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து, களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து, மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு, ஒற்றியூரை உகந்து, அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து, பிடவம், மொந்தை, குடமுழா, கொடுகொட்டி, குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது, அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர்.

 

 

2184 பூதப் படையுடையார் பொங்கு நூலார்

புலித்தோ லுடையினார் போரேற் றினார்

வேதத் தொழிலார் விரும்ப நின்றார்

விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி

ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்

உம்பரோ டம்பொன் னுலக மாண்டு

பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.3

 

  தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர். விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர். வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர். திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.

 

 

2185 நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்

நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்

ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்

ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்

வாருலா முலைமடவாள் பாக மேற்றார்

மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்

பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.4

 

  கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர். மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று, ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று, பிச்சையிட வந்த மகளிரின் நிறை எனற பண்பினைக் கவர்ந்தவர். அவர் மழு ஏந்தி, உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர்.

 

 

2186 தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்

துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்

இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த

இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்

அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்

அருக்கனா யாரழலா யடியார் மேலைப்

பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.5

 

  அண்டங்களையும் கடந்த எங்கும் பரவியிருப்பவராய், எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர். நடுங்காத அழகிய தலையை உடையவர். தூய நீறணிந்தவர். சடையில் முடிமாலை சூடியவர். இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர். அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.

 

 

2187 கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்

கானப்பேர் காதலார் காதல் செய்து

மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்

மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண

நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்

நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்

படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.6

 

  கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும், உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான், மத யானைத் தோலைப் போர்த்தவர். எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர். மான் தோலைத் தோளில் அணிந்து, நாகத்தைத் திருமேனியிற் பூண்டு, முடியிலும் பாம்பினைச் சூடி, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதுகின்ற நாவினை உடையவர். அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர்.

 

 

2188 முற்றா மதிச்சடையார் மூவ ரானார்

மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்

கற்றார் பரவுங் கழலார் திங்கள்

கங்கையாள் காதலார் காம்பேய் தோளி

பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்

பான்மையா லூழி யுலக மானார்

பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.7

 

  பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர். அவர் பிறை சூடிய சடையினர். மூவுலகும் துதிக்கும் முதல்வர். சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர். பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர். வெள்ளியநீறு அணிபவர். தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர். பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார்.

 

 

2189 கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்

கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப் 

பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்

பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார் 

மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்

மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்

பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.8

 

  தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும், பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும், நில உலகத்தவரும் வானுலகத்தவரும், பிரமன் உபபிரமர்களும், உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர். கண் பொருந்திய நெற்றியை உடையவர். கையில் மழு ஏந்தியவர். காட்டிலும், நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார்.

 

 

2190 ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்

இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்

நீறேறு மேனியார் நீல முண்டார்

நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்

ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி

யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்

பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.9

 

  பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர். தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர். நீறணிந்த மேனியர். விடத்தை உண்டவர். வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர். உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர். கங்கை தங்கு சடையினர். ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர். தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர். புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர்.

 

 

2191 கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்

காரோணங் காதலார் காதல் செய்து

நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்

நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்

மல்லூர் மணிமலை யின்மே லிருந்து

வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்

பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்

பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.010.10

 

  ஞானத்தை அடியார்க்கு வழங்கு பவராய்த் தாமே ஞானவடிவாகி, நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய், நாகை, குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான்.அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர். வலிமை மிகுந்த அழகிய கயிலாயமலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன்தலைகள் சிதறுமாறு கோபித்த அப்பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர். அவர் பைங்கண் ஏறுஇவர்ந்து பணி ஏற்றவர்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.