LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-122

 

2.122.திருப்புகலி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம் 
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2791 விடைய தேறி வெறிஅக் கரவார்த்த 
விமலனார் 
படைய தாகப் பரசு தரித்தார்க் 
கிடமாவது 
கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம் 
மறையோர்கள்தாம் 
புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும் 
புகலியே.
2.122. 1
விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல அந்தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும். 
2792 வேலை தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள் 
கண்டனார் 
ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார் 
நகராவது 
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப் 
பதங்களைச் 
சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும் 
புகலியே.
2.122. 2
கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை, உண்டு இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும். 
2793 வண்டு வாழுங் குழல்மங்கை யோர்கூ 
றுகந்தார்மதித் 
துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் 
கிடமாவது 
கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை 
மாதவி 
புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் 
புகலியே.
2.122. 3
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட புகலியாகும். 
2794 திரியு மூன்று புரமும் எரித்துத் 
திகழ்வானவர்க் 
கரிய பெம்மான் அரவக் குழையார்க் 
கிடமாவது 
பெரிய மாடத் துயருங் கொடியின் 
மிடைவால்வெயிற் 
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ் 
தண்புகலியே.
2.122. 4
வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும். 
2795 ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் 
றருள்செய்தவர் 
நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க் 
கிடமாவது 
மாவி லாருங் கனிவார் கிடங்கில் 
விழவாளைபோய்ப் 
பூவி லாரும் புனற்பொற்கை யில்வைகும் 
புகலியே.
2.122. 5
கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும் புகலிப்பதியாகும். 
2796 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் 
தையலாளொடும் 
ஒக்க வேயெம் முரவோ னுறையும் 
மிடமாவது 
கொக்கு வாழை பலவின் கொழுந்தண் 
கனிகொன்றைகள் 
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும் 
புகலியே.
2.122. 6
தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத்தோன்றும் புகலியாகும். 
2797 தொலைவி லாத அரக்கன் உரத்தைத் 
தொலைவித்தவன் 
தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க் 
கிடமாவது 
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் 
கரப்பிலார் 
பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் 
புகலியே.
2.122. 8
அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவனது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவபிரானுக் குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையயோ விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும். 
2798 கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் 
கேழலன்னமாய்க் 
காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க் 
கிடமாவது. 
நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை 
செறுவினிற் 
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் 
புகலியே.
2.122. 9
கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால், அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும். 
2799 தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு 
சாக்கியர் 
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற் 
கிடமாவது 
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் 
வானுளோர் 
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண் 
புகலியே.
2.122.10
ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர்களும் இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தணரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும். 
2800 எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற 
புகலியைக் 
கைதவ மில்லாக் கவுணியன் ஞான 
சம்பந்தன்சீர் 
செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார் 
சிவலோகத்தில் 
எய்தி நல்ல விமையோர்க ளேத்த 
இருப்பார்களே.
2.122.11
உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர். 
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்

2.122.திருப்புகலி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம் 

திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2791 விடைய தேறி வெறிஅக் கரவார்த்த விமலனார் படைய தாகப் பரசு தரித்தார்க் கிடமாவது கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம் புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும் புகலியே.2.122. 1
விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல அந்தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும். 

2792 வேலை தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது சால நல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.2.122. 2
கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை, உண்டு இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும். 

2793 வண்டு வாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை மாதவி புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.2.122. 3
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட புகலியாகும். 

2794 திரியு மூன்று புரமும் எரித்துத் திகழ்வானவர்க் கரிய பெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது பெரிய மாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.2.122. 4
வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும். 

2795 ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் றருள்செய்தவர் நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது மாவி லாருங் கனிவார் கிடங்கில் விழவாளைபோய்ப் பூவி லாரும் புனற்பொற்கை யில்வைகும் புகலியே.2.122. 5
கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும் புகலிப்பதியாகும். 

2796 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்க வேயெம் முரவோ னுறையும் மிடமாவது கொக்கு வாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும் புகலியே.2.122. 6
தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத்தோன்றும் புகலியாகும். 

2797 தொலைவி லாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன் தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க் கிடமாவது கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.2.122. 8
அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவனது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவபிரானுக் குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையயோ விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும். 

2798 கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது. நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை செறுவினிற் பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.2.122. 9
கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால், அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும். 

2799 தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற் கிடமாவது மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண் புகலியே.2.122.10
ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர்களும் இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தணரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும். 

2800 எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற புகலியைக் கைதவ மில்லாக் கவுணியன் ஞான சம்பந்தன்சீர் செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார் சிவலோகத்தில் எய்தி நல்ல விமையோர்க ளேத்த இருப்பார்களே.2.122.11
உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர். 


திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.