|
||||||||
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப் உளுத்தம்பருப்பு - 1 கப் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஆப்ப சோடா - 1 சிட்டிகை கடுகு - 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் கடலைபருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பில்லை - சிறிது பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி - ஒரு துண்டு செய்முறை : 1.அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள். 2.புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா,நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும். 3.ஒரு கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை இஞ்சி, கறிவேப்பில்லை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள். 4.எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி. |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|