|
||||||||
சேமியா இட்லி (semiya idli) |
||||||||
தேவையானவை: சேமியா - 2 கப் ரவா - 1 கப் தயிர் - 3 கப் உப்பு - 2 டீஸ்பூன் "ஈனோ" ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன் எண்ணை - 4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 அல்லது 3 இஞ்சி - ஒரு சிறு துண்டு முந்திரி பருப்பு - சிறிது செய்முறை: 1.ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். 2.பிறகு அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் சேமியா-ரவாக் கலவையை உப்பு சேர்த்து போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். 4.பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். 5.இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து வேக விட்டு எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|