LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-65

 

4.065.திருச்சாய்க்காடு 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாயவனேசுவரர். 
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை. 
629 தோடுலா மலர்கள் தூவித்
தொழுதெழுமார்க்கண் டேயன்
வீடுநா ளணுகிற் றென்று
மெய்கொள்வான்வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப்
பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.1
இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக, அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார்.
630 வடங்கெழு மலைமத் தாக
வானவ ரசுரரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங்
கண்டு பஃறேவரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன
வருள்பெரிதுடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.2
பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய, எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவபெருமானை அடைந்து 'நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம்' என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்டபிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார்.
631 அரணிலா வெளிய நாவ
லருநிழ லாகவீசன்
வரணிய லாகித் தன்வாய்
நூலினாற்பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்னனாக்கித்
தரணிதா னாள வைத்தார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.3
காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக, தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச்செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறுசெய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான்.
632 அரும்பெருஞ் சிலைக்கை வேட
னாய்விறற்பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி
யொள்ளமர்செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி
வாளமர் முகத்தின்மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.4
பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய், ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன்தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர் செய்து, பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார்.
633 இந்திரன் பிரம னங்கி
யெண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
வானவர்வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்
வேள்வியைத்தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.5
இந்திரன், பிரமன், அக்கினி, எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த, எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான்.
634 ஆமலி பாலு நெய்யு
மாட்டியர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
பொறாததன்றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக்
குளிர்சடைக்கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.6
பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைச் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட, அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே, அவரை சண்டீசன் ஆக்கித் தாம் சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான்.
635 மையறு மனத்த னாய
பகீரதன்வரங்கள் வேண்ட
ஐயமி லமர ரேத்த
வாயிர முகம தாகி
வையக நௌயப் பாய்வான்
வந்திழி கங்கையென்னுந்
தையலைச் சடையி லேற்றார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.7
குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில், சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற, ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ்வுலகமே நௌயுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான்.
636 குவப்பெருந் தடக்கை வேடன்
கொடுஞ்சிலையிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித்
தூயவாய்க்கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர
வொருகணை யிடந்தங்கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.8
திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார், ஒரு கையில் வளைந்த வில்லும், மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப்பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப்பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க, அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய, ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே, திண்ணனாரை மிகப்பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான்.
637 நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன்ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
மென்மலரொன்று காணா
தொக்குமென் மலர்க்க ணென்றங்
கொருகணை யிடந்துமப்பச்
சக்கரங் கொடுப்பர்போலுஞ்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.9
விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம் கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான்.
638 புயங்கமைஞ் ஞான்கும் பத்து
மாயகொண்டரக்க னோடிச்
சிவன்றிரு மலையைப் பேர்க்கத்
திருமலர்க்குழலி யஞ்ச
வியன்பெற வெய்தி வீழ
விரல்சிறிதூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்
சாய்க்காடுமேவி னாரே.
4.065.10
இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க, அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச, அப்போது அவன் வலிமை நிலைவேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி, அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்கு இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார். புயங்கம் ஐந்நான்கும் - பாடம்.
திருச்சிற்றம்பலம்

 

4.065.திருச்சாய்க்காடு 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சாயவனேசுவரர். 

தேவியார் - குயிலின்நன்மொழியம்மை. 

 

 

629 தோடுலா மலர்கள் தூவித்

தொழுதெழுமார்க்கண் டேயன்

வீடுநா ளணுகிற் றென்று

மெய்கொள்வான்வந்த காலன்

பாடுதான் செலலு மஞ்சிப்

பாதமே சரண மென்னச்

சாடினார் காலன் மாளச்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.1

 

  இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக, அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார்.

 

 

630 வடங்கெழு மலைமத் தாக

வானவ ரசுரரோடு

கடைந்திட வெழுந்த நஞ்சங்

கண்டு பஃறேவரஞ்சி

அடைந்துநுஞ் சரண மென்ன

வருள்பெரிதுடைய ராகித்

தடங்கட னஞ்ச முண்டார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.2

 

  பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய, எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவபெருமானை அடைந்து 'நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம்' என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்டபிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார்.

 

 

631 அரணிலா வெளிய நாவ

லருநிழ லாகவீசன்

வரணிய லாகித் தன்வாய்

நூலினாற்பந்தர் செய்ய

முரணிலாச் சிலந்தி தன்னை

முடியுடை மன்னனாக்கித்

தரணிதா னாள வைத்தார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.3

 

  காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக, தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச்செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறுசெய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான்.

 

 

632 அரும்பெருஞ் சிலைக்கை வேட

னாய்விறற்பார்த்தற் கன்று

உரம்பெரி துடைமை காட்டி

யொள்ளமர்செய்து மீண்டே

வரம்பெரி துடைய னாக்கி

வாளமர் முகத்தின்மன்னுஞ்

சரம்பொலி தூணி யீந்தார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.4

 

  பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய், ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன்தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர் செய்து, பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார்.

 

 

633 இந்திரன் பிரம னங்கி

யெண்வகை வசுக்க ளோடு

மந்திர மறைய தோதி

வானவர்வணங்கி வாழ்த்தத்

தந்திர மறியாத் தக்கன்

வேள்வியைத்தகர்த்த ஞான்று

சந்திரற் கருள்செய் தாருஞ்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.5

 

  இந்திரன், பிரமன், அக்கினி, எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த, எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான்.

 

 

634 ஆமலி பாலு நெய்யு

மாட்டியர்ச்சனைகள் செய்து

பூமலி கொன்றை சூட்டப்

பொறாததன்றாதை தாளைக்

கூர்மழு வொன்றா லோச்சக்

குளிர்சடைக்கொன்றை மாலைத்

தாமநற் சண்டிக் கீந்தார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.6

 

  பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைச் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட, அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே, அவரை சண்டீசன் ஆக்கித் தாம் சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான்.

 

 

635 மையறு மனத்த னாய

பகீரதன்வரங்கள் வேண்ட

ஐயமி லமர ரேத்த

வாயிர முகம தாகி

வையக நௌயப் பாய்வான்

வந்திழி கங்கையென்னுந்

தையலைச் சடையி லேற்றார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.7

 

  குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில், சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற, ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ்வுலகமே நௌயுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான்.

 

 

636 குவப்பெருந் தடக்கை வேடன்

கொடுஞ்சிலையிறைச்சிப் பாரம்

துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித்

தூயவாய்க்கலச மாட்ட

உவப்பெருங் குருதி சோர

வொருகணை யிடந்தங்கப்பத்

தவப்பெருந் தேவு செய்தார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.8

 

  திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார், ஒரு கையில் வளைந்த வில்லும், மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப்பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப்பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க, அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய, ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே, திண்ணனாரை மிகப்பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான்.

 

 

637 நக்குலா மலர்பன் னூறு

கொண்டுநன்ஞானத் தோடு

மிக்கபூ சனைகள் செய்வான்

மென்மலரொன்று காணா

தொக்குமென் மலர்க்க ணென்றங்

கொருகணை யிடந்துமப்பச்

சக்கரங் கொடுப்பர்போலுஞ்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.9

 

  விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம் கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான்.

 

 

638 புயங்கமைஞ் ஞான்கும் பத்து

மாயகொண்டரக்க னோடிச்

சிவன்றிரு மலையைப் பேர்க்கத்

திருமலர்க்குழலி யஞ்ச

வியன்பெற வெய்தி வீழ

விரல்சிறிதூன்றி மீண்டே

சயம்பெற நாம மீந்தார்

சாய்க்காடுமேவி னாரே.

4.065.10

 

  இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க, அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச, அப்போது அவன் வலிமை நிலைவேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி, அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்கு இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார். புயங்கம் ஐந்நான்கும் - பாடம்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.