LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-2

 

3.002.திருப்பூந்தராய் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
2812 பந்து சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி 
னாள்பனி மாமதி போன்முகத் 
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் 
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந் 
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே
3.002.1
பந்து வந்தணைகின்ற விரல்களையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், குளிர்ந்த முழுமதி போன்ற முகத்தையும், அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும். அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால், நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர். அத்தலத்தினை நாம் வணங்குவோமாக! 
2813 காவி யங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே
3.002.2
நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும், பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம், மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2814 பைய ராவரும் அல்குன் மெல்லியல்
பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த்
தேற லூறலிற் சேறுல ராதநற்
பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே
3.002.3
பாம்பின் படம் போன்ற அல்குலையும், பஞ்சு போன்ற மென்மையான அடியையும், வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், செங்கழுநீர்ப் பூக்கள், தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும், பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2815 முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்
மேவி னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே
3.002.4
தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திரு முலைகளையுடைய உமாதேவியாரை, திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலைபோல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2816 பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் 
பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு
நீல மல்கிய காமரு வாவிநற்
புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே
3.002.5
பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழியாளாய், நிறைந்த கூந்தலையும், பசுந்தளிர் போன்ற மேனியையுமுடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம், வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும், பசு புண்ணியங்கள், பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2817 வாணி லாமதி போல்நுத லாள்மட
மாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகை
பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்
சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே
3.002.6
ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும், மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும், பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமா தேவியோடு, வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது, உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2818 காரு லாவிய வார்குழ லாள்கயற்
கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடை
வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீரு லாவிய சென்னி யன்மன்னி
நிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதி
போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் 
போற்றுதுமே
3.002.7
கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும், கயல்மீன் போன்ற கண்களையும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும், கச்சணிந்த மென்மையான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு, கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி, பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த, போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த, சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2819 காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்
கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க. 
தீசன் மேவும் இருங்கயி லையெடுத் 
தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே
3.002.8
காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும், கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும், மூங்கில் போன்ற தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும், உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2820 கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனு மாமல ரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே
3.002.9
மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய், கார்மேக வண்ணனான திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம், வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 
2821 கலவ மாமயி லார்இய லாள்கரும்
பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே
3.002.10
தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க், கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும், கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும், வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமா தேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான். கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும், சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே. அப்பெருமானை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக. 
2822 தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணி யோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என்
றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை 
யாவினையே
3.002.11
மெலிந்த சிற்றிடையையும், செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய். அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ், நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா. 
திருச்சிற்றம்பலம்

3.002.திருப்பூந்தராய் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 




2812 பந்து சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி னாள்பனி மாமதி போன்முகத் தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந் நிறைந் துவலஞ் செய்து மாமலர்புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே3.002.1
பந்து வந்தணைகின்ற விரல்களையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், குளிர்ந்த முழுமதி போன்ற முகத்தையும், அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும். அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால், நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர். அத்தலத்தினை நாம் வணங்குவோமாக! 

2813 காவி யங்கருங் கண்ணி னாள்கனித்தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்தேவி யும்திரு மேனியோர் பாகமாய்ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதிபூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே3.002.2
நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும், பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம், மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2814 பைய ராவரும் அல்குன் மெல்லியல்பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த்தேற லூறலிற் சேறுல ராதநற்பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே3.002.3
பாம்பின் படம் போன்ற அல்குலையும், பஞ்சு போன்ற மென்மையான அடியையும், வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், செங்கழுநீர்ப் பூக்கள், தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும், பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2815 முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலைவெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்மேவி னார்பதி வீமரு தண்பொழிற்புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே3.002.4
தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திரு முலைகளையுடைய உமாதேவியாரை, திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலைபோல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2816 பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர்கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர்பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார்கண்ணி யன்றெழு காவிச் செழுங்கருநீல மல்கிய காமரு வாவிநற்புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே3.002.5
பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழியாளாய், நிறைந்த கூந்தலையும், பசுந்தளிர் போன்ற மேனியையுமுடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம், வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும், பசு புண்ணியங்கள், பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2817 வாணி லாமதி போல்நுத லாள்மடமாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகைபாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ்போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே3.002.6
ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும், மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும், பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமா தேவியோடு, வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது, உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2818 காரு லாவிய வார்குழ லாள்கயற்கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடைவாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்நீரு லாவிய சென்னி யன்மன்னிநிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதிபோரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே3.002.7
கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும், கயல்மீன் போன்ற கண்களையும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும், கச்சணிந்த மென்மையான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு, கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி, பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த, போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த, சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2819 காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க. தீசன் மேவும் இருங்கயி லையெடுத் தானை அன்றடர்த் தானிணைச் சேவடிபூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே3.002.8
காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும், கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும், மூங்கில் போன்ற தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும், உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2820 கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமைபங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்மங்குல் வண்ணனு மாமல ரோனும்மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழுபொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே3.002.9
மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய், கார்மேக வண்ணனான திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம், வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக! 

2821 கலவ மாமயி லார்இய லாள்கரும்பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே3.002.10
தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க், கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும், கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும், வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமா தேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான். கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும், சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே. அப்பெருமானை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக. 

2822 தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ் சேலனகண்ணி யோடண்ணல் சேர்விடம் தேன்அமர்பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என்றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறைஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே3.002.11
மெலிந்த சிற்றிடையையும், செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய். அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ், நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.