LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-34

 

6.034.திருவாரூர் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
2425 ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.1
ஒப்பற்ற தலைவனாய், உலகங்கள் துதிக்க நின்றவனே! ஒரே உருவம் அரி, அயன், அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும், தேவர் உலகையும் படைத்தவனே! மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ, செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய்?
2426 மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.2
அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே! வில்லால் மும் மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2427 பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.3
பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2428 ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.4
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும், திருமாலும், 'பெருமானே! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக' என்று துதித்து, தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2429 பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.5
பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே! நீலகண்டனே! பெருந்தோள்களை உடையவனே! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே! நுண்ணறிவு உடையவனே! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே! அருளுருவம் கொண்டவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2430 திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.6
உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே! அறம்பலவும் உரைத்தவனே! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2431 நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.7
மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே! சலந்தரனை அழித்தவனே! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2432 பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.8
அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே! பூத கணங்களை உடைய நந்தி தேவர், தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி, புனிதனாகிய பிரமன், பொய்யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! நீ இச் செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2433 புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டு
ம்திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.9
சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள், எண்வகைக் குற்றங்கள், எண்புலன்கள், எண்வகை உலகங்கள், எண்வகைத் தீவுகள், எண்வகைக் கடல்கள், எண்வகை அரண்கள், தீவுகள் எட்டின்எண்வகைப்பட்ட இயல்புகள், உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக்கிட்டும் பயன்கள் எட்டு, எண்வகை ஒளிகள், ஒன்றும்பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள், எட்டுநன்மைகள், ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின்மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள்,எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன்முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக்கோயிலாகக் கொண்டாய்?
2434 ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6.034.10
உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே! சூடிய மலர் மாலையைச் சண்டி கேசுவரருக்குக் கொடுத்தவனே! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
திருச்சிற்றம்பலம்

6.034.திருவாரூர் 

திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 

தேவியார் - கரும்பனையாளம்மை. 

 

 

2425 ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ

ஓருருவே மூவுருவ மான நாளோ

கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ

காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ

மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ

மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.1

 

  ஒப்பற்ற தலைவனாய், உலகங்கள் துதிக்க நின்றவனே! ஒரே உருவம் அரி, அயன், அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும், தேவர் உலகையும் படைத்தவனே! மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ, செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய்?

 

 

2426 மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ

வானவரை வலியமுத மூட்டி யந்நாள்

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ

நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ

அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ

அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ

சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.2

 

  அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே! வில்லால் மும் மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

 

 

2427 பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்

நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்

வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ

விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ

மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.3

 

  பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?

 

 

2428 ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ

ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ

தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த

தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ

நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு

நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி

வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ

வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.4

 

  ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும், திருமாலும், 'பெருமானே! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக' என்று துதித்து, தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

 

 

2429 பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே

பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே

நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே

நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்

சீலமே சிவலோக நெறியே யாகுஞ்

சீர்மையே கூர்மையே குணமே நல்ல

கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ

குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.5

 

  பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே! நீலகண்டனே! பெருந்தோள்களை உடையவனே! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே! நுண்ணறிவு உடையவனே! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே! அருளுருவம் கொண்டவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

 

 

2430 திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்

சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ

மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து

மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ

பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்

பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ

அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.6

 

  உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே! அறம்பலவும் உரைத்தவனே! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?

 

 

2431 நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ

நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்

கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ

காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று

வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ

வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ

தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.7

 

  மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே! சலந்தரனை அழித்தவனே! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்?

 

 

2432 பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்

பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ

கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்

கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ

பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்

பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ

விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.8

 

  அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே! பூத கணங்களை உடைய நந்தி தேவர், தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி, புனிதனாகிய பிரமன், பொய்யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! நீ இச் செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?

 

 

2433 புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்

கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டு

ம்திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.9

 

  சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள், எண்வகைக் குற்றங்கள், எண்புலன்கள், எண்வகை உலகங்கள், எண்வகைத் தீவுகள், எண்வகைக் கடல்கள், எண்வகை அரண்கள், தீவுகள் எட்டின்எண்வகைப்பட்ட இயல்புகள், உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக்கிட்டும் பயன்கள் எட்டு, எண்வகை ஒளிகள், ஒன்றும்பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள், எட்டுநன்மைகள், ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின்மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள்,எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன்முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக்கோயிலாகக் கொண்டாய்?

 

 

2434 ஈசனா யுலகேழும் மலையு மாகி

இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ

வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ

மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ

தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ

சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ

தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.034.10

 

  உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே! சூடிய மலர் மாலையைச் சண்டி கேசுவரருக்குக் கொடுத்தவனே! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.