|
||||||||
உழவுக்கும் தொழிலுக்கும் .... |
||||||||
அன்று பொங்கல் திருநாள் ... வழக்கம் போல் வாழ்த்துச் செய்திகள் .... “ உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் “ அர்த்தம் புரியாது பரிமாரிக் கொள்ளும் மரபுவழி வாழ்த்துக்கள் ... இந்த ஆண்டு தப்பாது .... “ பொங்கலோ பொங்கலென்று “ மஞ்சள் பானையோடு ஒரு குடும்பத்தின் புகைப்படம் ... “ பெருந்தலை யோன்றின் வாரிசென்று மாட்டிற்க்கு போங்கலூட்டிய காட்சி “ . அரைப்பக்க விளக்கத்தோடு வண்ணப் புகைப்படம் ... இவையெல்லாம் நாம் நாளிதழின் முதல் பக்கச் செய்திகள் .... பாதி டீ குடித்த கையோடு டீக்கடை பேப்பரின் கடைசி பக்கம் புரட்டினேன் .... சினிமா விளம்பரம் பார்க்கும் ஆசையில் ... கையில் தட்டோடும் .. ஒட்டிய வயிற்றோடும் ... குழிவிழுந்த கண்களோடும் ... உழவுக்கு முதுகு கொடுக்கும் நமது ஊர் விவசாயிகள் .... “ பருவமழை பொய்த்துப் போனதால் பட்டினிச் சாவைத் தடுக்க குடும்பத்தில் ஒரு வருக்கு மாத்திரம் ஒரு நேர உணவு “ அரசு ஆணையோடு புகைப்படம் .... இது வெறும் கற்பனையல்ல ... இது மிகைப்படுத்தப்பட்ட பொய்யுமல்ல ... இது நடந்தேறிய உண்மை ....... ஆம் ... அன்று பொங்கல் திருநாள் .... அன்று தமிழர் பெருநாள் .. அன்று உழவர் பெருநாள் .... கையில் தட்டோடும் ... ஒட்டிய வயிற்றோடும் .... குழிவிழுந்து கண்களோடும் ..... ................................................................. ................................................................. - குகன் |
||||||||
by Guhan on 06 Dec 2011 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|