LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

இரண்டாம் பாகம்-புயல்-யார் அங்கே

 

சீதாவுக்குத் திடீரென்று தைரியம் பிறந்தது. சீ! குழாயிலிருந்து தண்ணீர் விழுந்தால்அதற்காகப் பயப்படுவதா? ஒருவேளை தானே குழாயைத் திறந்துவிட்டு மறதியாக மூடாமல் வந்திருக்கலாம். ஆபீஸ் அறையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது அதைக் கவனியாமல் இருந்திருக்கலாம். இப்போது ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் சத்தம் கேட்கிறது. இந்தச் சின்ன விஷயத் துக்கு இவ்வளவு பயமா? சீதா தன்னுடைய அசட்டுத்தனத்தை நினைத்துத்தானே புன்னகை புரிந்து கொண்டாள். குழாயை நிறுத்திவிட்டுக் கொல்லைப்புறக் கதவையும்பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு நடந்தாள். நாலடி வைப்பதற்குள்ளே குழாய்த்தண்ணீரின் ஓசை நின்றது. அப்போது திடீரென்று ஏற்பட்ட நிசப்தம் சீதாவை முன்னைக்காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்தில் ஆழ்த்திற்று. குழாயிலிருந்து தண்ணீர் விழும் ஓசை நின்றதுஎன்றால், அதன் பொருள் என்ன? திறந்திருந்த குழாயை யாரோ திருகி மூடியிருக்க வேண்டும்!மூடியது யார்? ஜன்னல் வழியாகப் பார்த்தபோது செடிகளுக்குள்ளே புகுந்து சென்ற முக்காடிட்டஉருவம் சீதாவுக்கு நினைவு வந்தது. யாரோ கொல்லைப்புறமாக வந்து வீட்டுக்குள் நுழைந்து ஸ்தான அறைக்குள்ளே புகுந்திருக்க வேண்டும் அது யாராயிருக்கும்? 
 
     "யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக இப்படிப் பயப்படுகிறோம்?" என்று எண்ணிச்சீதா மறுபடியும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை வீட்டுவேலைக்காரிக்குப் புத்தி வந்து திரும்பி வந்தாலும் வந்திருக்கலாம். வாசல் வழியாக வரவெட்கப்பட்டுக் கொண்டு கொல்லைப்புறமாக வந்திருக்கலாம். ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும்! இதற்காகவா இவ்வளவு பயப்பட்டோம்! நின்றிருந்த குழாய் மறுபடியும்தண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தையும் கலக்கத்தையும் அதற்கு மேல் சீதாவினால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் சரி போய்ப் பார்த்தே தீருவது எனஉறுதி கொண்டாள். தடுமாறிய கால்களைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஸ்நானஅறைக்குப் பக்கமாக வந்து சேர்ந்தாள்; கதவு சாத்தியிருந்தது. ஆனால் உட்புறம் தாளிடவில்லைஎன்று தெரிந்தது. நடுங்கிய கையினால் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளே குழாய்ச் சத்தம்மறுபடியும் நின்றது. அந்த நிசப்தத்தில் சீதா, "யார் அங்கே?" என்று கேட்டாள், கேட்டவள் சீதாதான்; ஆனால் அவளுக்கே அந்தக் குரல் தன்னுடைய தாகத் தெரியவில்லை! ஸ்நான அறைக்குஉள்ளே காலடிச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கேட்ட காலடி சத்தத்துக்கும் ஒன்பதுதடவை சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்டது. 
 
     ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து,; கதவு உட்பக்கமிருந்து திறந்து கொண்டது.திறந்த வாசற்படியருகில் ஒரு உருவம் நின்றது! அது தன் கையில் ஒரு கத்தி வைத்துக்கொண்டிருந்தது. இது என்ன பேயா, பிசாசா? அல்லது மனித ஜன்மந்தானா? இதன் முகத்தில்உள்ளவை கண்களா? அல்லது ஜொலிக்கும் கொள்ளிகளா? அல்லது சிகப்பு வர்ண எலெக்ட்ரிக்பல்புகளா? இந்த உருவத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? எங்கே எங்கே? எப்போது?ஐயோ! இது என்ன? தலையை ஏன் இப்படிச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லையே! மூளை குழம்புகிறது என்பது இது தானோ? இங்கே வந்து நாம் நின்று எத்தனை நேரம் ஆயிற்று? இந்தஉருவத்தைப் பார்க்கத் தொடங்கி எத்தனை நேரம் ஆயிற்று? ஒரு வருஷம் இருக்குமோ? ஆயிரம்வருஷம் இருக்குமோ? இந்த உருவம் ஏன் இப்படியே நின்று கொண்டிருக்கிறது? ஏன்தன்னுடைய கொள்ளிக் கண்களால் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஐயோ! மயக்கமாய் வருகிறதே! இல்லை; மயக்கம் வரவில்லை அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது.கண்ணும் நன்றாய்த் தெரிகிறது. அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? அதோ வாயைத் திறந்து பேசுகிறதே! "சீதா! நான் யார் என்று தெரிகிறதா?ஞாபகம் வருகிறதா?" இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சீதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்து விட்டது, சீ! இவள் பேயுமில்லை; பிசாசுமில்லை பம்பாயில் தன் தாயார் படுத்த படுக்கையாயிருந்த சமயம் மர்மமாக வந்து ரத்தின மாலையும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான் இவள்! மனப்பிராந்தியினால் எப்படி யெல்லாமோ தோன்றிவிட்டது. 
 
     இவளை மறுபடி எங்கோ பார்த்தோமே? அது எங்கே?... இதோ ஞாபகம் வருகிறதுஇரண்டு மாதத்துக்கு முன்னால் இந்தச் சாலை திரும்பும் முடுக்கில் மரத்தின் பின்னால் கையில்கத்தியுடன் இவள் நின்றதைப் பார்த்தோம். யாரிடமோ இவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே? ஆம்; தாரிணியிடம் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி இவளுடைய வளர்ப்பு மகள் இவள் பெயர் ரஸியாபேகம். "சீதா! ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்?என்னைத் தெரிகிறதா, இல்லையா?" சீதா மிக முயன்று வாயைத் திறந்து இரகசியம் பேசும்குரலில், "தெரிகிறது!" என்றாள். "தெரிகிறது! நான் யார்?" சீதா சிறிது யோசித்துத் தன்னுடையகழுத்தில் அணிந்திருந்த இரத்தின மாலையைத் தொட்டு, "இதைக் கொடுத்தவள்!" என்றாள்."நீ நல்ல பெண்; ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். வீட்டில் நீ மட்டும் தனியேஇருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று அந்த ஸ்திரீ கேட்டாள். இந்தக் கேள்விசீதாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவளுடைய கண்ணும் கவனமும் அதற்குள் வேறொருபொருளிடத்தில் சென்று விட்டன. அந்த ஸ்திரீயின் இடுப்பிலிருந்து தொங்கியகைக்குட்டைதான் அந்தப் பொருள். அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச்செவேலென்று இருந்தது. அதைச் சீதா பார்த்து மிரள விழித்துக் கொண்டே, "ஐயோ! இரத்தம், இரத்தம்!" என்று அலறினாள். திடீரென்று அவளுக்கு எப்படியோ விம்மலும் அழுகையும் கலந்து வந்தன. ரஸியாபேகம் இரண்டு அடி எடுத்து முன்னால் வைத்துச் சீதாவை நெருங்கி வந்தாள்.அவளுடைய ஒரு தோளைப் பிடித்து "இதோ பார், சீதா! நீ சமர்த்தாயிருப்பாய் என்றுநினைத்தேன். எல்லாப் பெண்களையும் போல் மூடத்தனமாய்த் தானிருக்கிறாய். நீ அழுது கூச்சல் போட்டு, இப்படி ஏதாவது பண்ணினாயோ, என்ன செய்வேன் தெரியுமா? 
 
      சற்று முன்னால் சாலையில் ஒரு பைத்தியம் பிடித்த நாயை இந்தக் கத்தியினால் குத்திக்கொன்றேன். அது மாதிரி உன்னையும் கொன்றுவிடுவேன்!" என்றாள். சீதாவின் விம்மல் உடனேநின்றது இன்னமும் அந்தக் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டு, "அது நாயின் இரத்தமா?"என்றாள். "ஆமாம்; உன்னை இது ரொம்பப் பயப்படுத்துகிறது போலிருக்கிறது! கொஞ்சம் இரு! குழாயில் அலம்பிக் கொண்டு வருகிறேன்." இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ குழாயடிக்குப்போய்த் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கைக்குட்டையை நனைத்துக் கசக்கினாள் ஆனால் கறைபோகிற வழியாயில்லை. "இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்த வேண்டியதுதான்!" என்றுசொல்லிக் கீழே எறிந்துவிட்டுத் திரும்பி வந்தாள். சீதாவின் மனது இதற்குள் வேலை செய்துகொண்டே இருந்தது. இவள் நாயைக் கொன்றதாகச் சொன்னது உண்மைதானா? நாயைக்கொன்றிருந்தால், எதற்காகக் கொல்லைப்புறமாக வந்தாள்? நாம் இங்கே இருப்பது தெரிந்து வந்தாளா? தற்செயலாக வந்தாளா? திடீரென்று அவர் இப்போது வந்து விட்டால் என்ன செய்வது?...அதற்குள் இவளை எப்படியாவது நல்ல வார்த்தைச் சொல்லிப் போகச் சொல்லிவிடவேண்டும்! இல்லாவிட்டால் என்ன ஆகுமோ? கடவுளே! எதற்காக இந்த வீட்டுக்கு வந்துசேர்ந்தாள்? வேறு எங்கேயாவது போயிருக்கக் கூடாதா? அதற்குள் அந்த ஸ்திரீ சீதாவைநெருங்கி வந்து, "வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டாள். "இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார். சாயங்காலமே வந்திருக்க வேண்டும் எதனாலோ இன்று இன்னும் வரவில்லை.""ஊர்லே எந்தப் பெண் பிள்ளையைச் சுற்றிக்கொண்டு அலைகிறானோ? யார் கண்டது?அயோக்கியன்!" 
 
      இந்த வார்த்தைகள் சீதாவின் இருதயத்தை ஊசியால் குத்துவதுபோல தைத்தன. பயங்கரமான பல சந்தேகங்கள் உதித்தன. "என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவதுதெரியுமா?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள். "அசடே! எனக்கு உன் புருஷனைப்பற்றிஎன்னமாய்த் தெரியும்? புருஷர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று என் எண்ணம்.அதனால் பொதுப்படையாகச் சொன்னேனே தவிர உன்னுடைய புருஷர்களைப் பற்றிக்குறிப்பாகச் சொல்லவில்லை. உன் அபிப்பிராயம் என்ன? உன் புருஷன் எப்படி?" "எப்படி என்றால்நான் என்னத்தைச் சொல்வது? மொத்தத்தில் நல்லவர்தான் ஆனால் கொஞ்சம்முன்கோபக்காரர். இந்த நிலையில் உங்களைப் பார்த்தால் ஏதாவது தொந்தரவாய் முடியலாம்.அவர் வருவதற்குள் நீங்கள்..." என்று சீதா தயங்கினாள். "நீ சொல்வது எனக்குத் தெரிகிறது.உன் புருஷன் வருவதற்குள் நான் போய்விட்டால் நல்லது என்கிறாய். அப்படித்தானே? நல்ல புண்ணியவதி நீ! எனக்கு ஒருவேளை சாப்பாடு போடக்கூட உனக்கு மனதில்லை!" "ஐயோ!அப்படிச் சொல்லாதீர்கள்; என் கலியாணத்துக்கு நீங்கள் செய்த உதவியைப் பற்றிஎத்தனையோ தடவை எண்ணிப்பார்த்துக்கொண்டி ருக்கிறேன். ஒருவேளை சாப்பாடுதானாபெரிது? அவர் வந்துவிட்டால் யார், இன்னார் என்று தெரிவிக்கும்படி நேருமே என்றுயோசித்தேன் பேஷாகச் சாப்பிட்டு விட்டுப் போங்கள்." 
 
     "சீதா! எனக்குச் சாப்பாடு வேண்டாம். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகுஇன்றைக்குத்தான் எனது மனது குளிர்ந்து வயிறும் நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று ராத்திரிநான் எங்கேயும் போக முடியாது. உடம்பு களைப்பாயிருக்கிறது, நன்றாகத் தூங்கிப் பலநாளாயிற்று. இன்று ராத்திரி இங்கே படுத்துத் தூங்கிவிட்டுத்தான் போக வேண்டும். யார், இன்னார் என்று உன் புருஷனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் இருப்பதே தெரியவேண்டியதில்லை. இந்த வீட்டு மாடியில் அறை இருக்கிறதா?" "அதுதானே இல்லை? இந்தப் புது டில்லியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளெல்லாம் மாடியில்லாத வீடுகள்!" அந்த ஸ்திரீ சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்நான அறைக்கு எதிர்ப்புறம் இருந்த அறையைச் சுட்டிக்காட்டி, "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள்."விறகு, கரி, தட்டுமுட்டுச் சாமான்கள்" என்றாள் சீதா. அறையை அந்த ஸ்திரீ திறந்து பார்த்து விட்டு, "சரி இதில் நான் படுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் தெரிய வேண்டாம்; வெளிக்கதவை நீ பூட்டிக்கொண்டு விடு!" என்றாள். "இதில் எப்படிப் படுத்துக் கொள்வீர்கள்? காற்றே வராதே? சாமான்களைக் கன்னாபின்னாவென்று போட்டிருக்கிறதே!" "பாதகமில்லை, சீதா! இதைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான இடங்களில் நான் இருந்திருக்கிறேன்." 
 
     இதைக் கேட்ட சீதாவின் மனம் இளகிற்று அந்த ஸ்திரீயின் வரலாறு எப்படியிருக்கும்என்று தான் கற்பனை செய்து கொண்டதெல்லாம் நினைவு வந்தது. வாழ்க்கையில் ரொம்பவும்கஷ்டங்களை அனுபவித்தவள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கஷ்டங்கள் அவளுக்கு ரஜினிபூர் ராஜாவினால் நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அவை என்ன மாதிரிக்கஷ்டங்கள்? அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையுண்டாயிற்று. அதற்கு இப்போதுஅவகாசம் இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் கணவர் திரும்பி வந்து விடலாம். வந்தால் பைத்தியக்காரியைப்போல் தோன்றும் இவளைக் கட்டாயம் விரட்டி அடித்து விடுவார். "இதோ ஒருஜமக்காளமும் தலையணையுமாவது கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச்சீதா விடுவிடு என்று உள்ளே போனாள். ஜமக்காளமும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இத்தனை நேரமும் அவளுடைய உள் மனது "எதையோ மறந்துவிட்டோம் முக்கியமான விஷயம் அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அது இப்போது நினைவு வந்தது. மறந்து போய் நினைவு வந்த விஷயம் தாரிணியின் கோரிக்கைதான். 
 
     ஜமக்காளத்தையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "நிச்சயமாகச்சாப்பாடு வேண்டாமா? பூரியும் சப்பாத்தியும் இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறேனே;நீங்கள் சாவகாசமாகப் பசித்தபோது சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றாள் சீதா. "வேண்டாம்,வேண்டாம் இன்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமைதானே?" "ஆமாம்". "செவ்வாய் இரவு நான்சாப்பிடும் வழக்கம் இல்லை அப்படி விரதம். இன்றைக்கு நிச்சயமாய்ச் சாப்பிடமாட்டேன். இனிமேல் நீ போய் உன் காரியத்தைப் பார். உன் புருஷன் தினம் காலையில் எத்தனை மணிக்குஎழுந்திருப்பான்?" "சாதாரணமாய் ஏழு மணிக்குத்தான்; நான் ஆறு மணிக்கே விழித்துக் கொண்டு விடுவேன்." "அப்படியானால் நீ எழுந்ததும் வந்து கதவைத் திறந்து விட்டுவிடு." "நான் வருவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அறைக்கு இன்னொரு கதவு இருக்கிறது, அது கொல்லைப்புறம் திறக்கும். இராத்திரி தாள் போட்டுக்கொள்ளுங்கள்.காலையில் இஷ்டமானபோது எழுந்து போகலாம்." "ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; உனக்குஎத்தனை குழந்தை?" "ஒரே ஒரு குழந்தைத்தான்! வயது மூன்று ஆகப்போகிறது. வசந்தி என்றுபெயர்; இப்போதுதான் கால் மணிக்கு முன்னால் தூங்கினாள்." 
 
      "வசந்தி சௌக்கியமாயிருக்கட்டும்; புருஷர்களின் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கட்டும்." "நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட் டிருப்பீர்கள் போலிருக்கிறது." "அதைப்பற்றிச் சொல்ல இப்போது நேரமில்லை நீ போய் உன் காரியத்தைப் பார்!" "உங்களிடம் ஒரு விஷயம்கேட்கவேண்டும்." "சீக்கிரம் கேள்; ரொம்ப அலுப்பாயிருக்கிறது." "உங்கள் பெயர் என்ன?" "என்பெயர் எதுவாயிருந்தால் என்ன இப்போது?" "நீங்கள் சொல்லா விட்டால் எனக்குத்தெரியாதா?" "தெரிந்தால் சொல்லேன்." "ரஸியா பேகம்!" வியப்புடனும் கோபத்துடனும் அந்த ஸ்திரீ சீதாவைப் பார்த்து "உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டாள். "அதை அப்புறம்சொல்கிறேன் உங்கள் பெயர் ரஸியாபேகமா, இல்லையா?" என்றாள் சீதா. "உண்டு இல்லை, இரண்டும்; என்னுடைய பெயர் ரமாமணி. ஒரு காரியத்துக்காகச் சில காலம் ரஸியாபேகம் என்று மாறு பெயர் வைத்துக் கொண்டேன். அதை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.சொல்லியது யாராக இருக்கும்? ஒருவேளை அந்த அசட்டுப் பிராமணர்தானா?" 
 
     எந்த அசட்டுப் பிராமணரைக் குறிப்பிடுகிறாள் என்று சீதாவுக்குத் தெரியவில்லை.சட்டென்று, "வேறு யாரும் இல்லை உங்கள் குமாரி தாரிணிதான் சொன்னாள்" என்றாள். சீதாஎதிர்பார்த்தது போலவே அவள் பதில் அந்த ஸ்திரீயைத் தூக்கிவாரிப் போட்டது. சற்று நேரம்சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு, "நிஜமாகவா? தாரிணியா சொன்னாள்?" என்று கேட்டாள்."ஆமாம்; தாரிணிதான்." "அவளை எங்கே பார்த்தாய்? எப்போது?" "கொஞ்ச நாளைக்கு முன்புஆக்ராவுக்கு போயிருந்தோம் அப்போது சந்தித்தோம்." "அப்புறம்?" "ஆக்ராவிலிருந்து ரஜினிபூருக்குச் சென்றோம்.." அந்த ஸ்திரீயின் உள்ளத்தில் ஏதேனும் கொந்தளிப்புஏற்பட்டிருந்தால், அதை அவள் முகம் சற்றும் காட்டவில்லை. மரத்தினால் செய்த முகம்போல்ஆகிவிட்டது. சீதா மேலும் சொன்னாள்; "ரஜினிபூரில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்.தாரிணியை அவளுடைய தாய் தகப்பன் யார் என்று கேட்டேன். அப்போது தன்னை வளர்த்தவள்என்பதாக உங்களைப் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னதிலிருந்தும் எனக்குத் தெரிந்ததைக்கொண்டும் நீங்களாய்த்தானிருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்." "நீயும் தாரிணியும் ரொம்பசிநேகமாகிவிட்டீர்களா?" என்று ரமாமணி என்கிற ரஸியாபேகம் கேட்டாள். 
 
      "சிநேகமாகாமல் எப்படியிருக்க முடியும்? படகிலிருந்து நான் ஏரியில் விழுந்து விட்டேன். தாரிணிதான் உடனே தண்ணீரில் குதித்து நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினாள்." ரஸியாபேகத்தின் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "என் மகளே மகள்!" என்று குதூகலமாகக் கூறினாள். "மகளிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே? ஆனால் சந்தித்து வருஷக் கணக்கு ஆயிற்றாமே? உங்களைக் கண்டால் உடனே தனக்குத் தெரிவிக்கும்படிசொல்லியிருக்கிறாள்." "தாரிணி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா?" "இந்தஊரிலேதான் இருப்பதாகச் சொன்னாள், விலாசம் கூடத் தந்திருக்கிறாள். நாளைக் காலையில்சொல்லி அனுப்பட்டுமா? நீங்கள் இங்கேயே நாளைக்கும் இருந்து தாரிணியைப் பார்த்து விட்டுப்போகலாமே? என் அகத்துக்காரரிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டால் போகிறது!" ரஸியாபேகம் ஜமக்காளத்தையும் தலையணையையும் கீழே போட்டுவிட்டு, "சீதா! எங்கே! என்கை மேலே உன் கையை வை!" என்று அதட்டும் குரலில் கூறினாள். சீதா அவ்விதமே செய்தாள். 
 
      "நான் இன்று இரவு இங்கு வந்ததைப்பற்றி தாரிணியிடமாவது உன் புருஷனிடமாவது நீசொல்லவே கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே கூடாது. அப்படி என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதுபோல் உன்னை இந்த நிமிஷமே கொன்று போட்டுவிடுவேன்" என்று கூறி ரஸியாபேகம் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் எடுத்துத் தூக்கிக்காட்டினாள். சற்று முன்னால் சிறிது அமைதியடைந்திருந்த அவளுடைய முகத்தில் மறுபடியும்கொலை வெறி கூத்தாடியது. சீதா மிரண்டு போய் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தாள். இந்த வெறி பிடித்த ஸ்திரீயிடம் எதற்காக இவ்வளவு பேச்சுக் கொடுத்தோம் என்று தோன்றியது.அந்தச் சமயத்தில் வாசலில் 'பாம்' 'பாம்' என்று மோட்டாரின் சத்தம் கேட்டது. அது அந்த வீட்டுமோட்டார்க் குழலின் சத்தந்தான். "அவர் வந்துவிட்டார்; நீங்கள் சீக்கிரம் அறைக்கு உள்ளேபோங்கள்!" என்றாள் சீதா. "ஜாக்கிரதை! ஞாபக மறதியாகக் கூட என்னைப்பற்றிப் பேச்சுஎடுக்காதே!" என்று சொல்லிக் கொண்டே ரஸியாபேகம் சாமான் அறைக்குள்ளே பிரவேசித்தாள். சீதா அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். பிறகு வாசற்கதவைத் திறக்க விரைந்து சென்றாள்.

சீதாவுக்குத் திடீரென்று தைரியம் பிறந்தது. சீ! குழாயிலிருந்து தண்ணீர் விழுந்தால்அதற்காகப் பயப்படுவதா? ஒருவேளை தானே குழாயைத் திறந்துவிட்டு மறதியாக மூடாமல் வந்திருக்கலாம். ஆபீஸ் அறையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது அதைக் கவனியாமல் இருந்திருக்கலாம். இப்போது ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் சத்தம் கேட்கிறது. இந்தச் சின்ன விஷயத் துக்கு இவ்வளவு பயமா? சீதா தன்னுடைய அசட்டுத்தனத்தை நினைத்துத்தானே புன்னகை புரிந்து கொண்டாள். குழாயை நிறுத்திவிட்டுக் கொல்லைப்புறக் கதவையும்பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு நடந்தாள். நாலடி வைப்பதற்குள்ளே குழாய்த்தண்ணீரின் ஓசை நின்றது. அப்போது திடீரென்று ஏற்பட்ட நிசப்தம் சீதாவை முன்னைக்காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்தில் ஆழ்த்திற்று. குழாயிலிருந்து தண்ணீர் விழும் ஓசை நின்றதுஎன்றால், அதன் பொருள் என்ன? திறந்திருந்த குழாயை யாரோ திருகி மூடியிருக்க வேண்டும்!மூடியது யார்? ஜன்னல் வழியாகப் பார்த்தபோது செடிகளுக்குள்ளே புகுந்து சென்ற முக்காடிட்டஉருவம் சீதாவுக்கு நினைவு வந்தது. யாரோ கொல்லைப்புறமாக வந்து வீட்டுக்குள் நுழைந்து ஸ்தான அறைக்குள்ளே புகுந்திருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?       "யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக இப்படிப் பயப்படுகிறோம்?" என்று எண்ணிச்சீதா மறுபடியும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை வீட்டுவேலைக்காரிக்குப் புத்தி வந்து திரும்பி வந்தாலும் வந்திருக்கலாம். வாசல் வழியாக வரவெட்கப்பட்டுக் கொண்டு கொல்லைப்புறமாக வந்திருக்கலாம். ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும்! இதற்காகவா இவ்வளவு பயப்பட்டோம்! நின்றிருந்த குழாய் மறுபடியும்தண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தையும் கலக்கத்தையும் அதற்கு மேல் சீதாவினால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் சரி போய்ப் பார்த்தே தீருவது எனஉறுதி கொண்டாள். தடுமாறிய கால்களைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஸ்நானஅறைக்குப் பக்கமாக வந்து சேர்ந்தாள்; கதவு சாத்தியிருந்தது. ஆனால் உட்புறம் தாளிடவில்லைஎன்று தெரிந்தது. நடுங்கிய கையினால் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளே குழாய்ச் சத்தம்மறுபடியும் நின்றது. அந்த நிசப்தத்தில் சீதா, "யார் அங்கே?" என்று கேட்டாள், கேட்டவள் சீதாதான்; ஆனால் அவளுக்கே அந்தக் குரல் தன்னுடைய தாகத் தெரியவில்லை! ஸ்நான அறைக்குஉள்ளே காலடிச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கேட்ட காலடி சத்தத்துக்கும் ஒன்பதுதடவை சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்டது.       ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து,; கதவு உட்பக்கமிருந்து திறந்து கொண்டது.திறந்த வாசற்படியருகில் ஒரு உருவம் நின்றது! அது தன் கையில் ஒரு கத்தி வைத்துக்கொண்டிருந்தது. இது என்ன பேயா, பிசாசா? அல்லது மனித ஜன்மந்தானா? இதன் முகத்தில்உள்ளவை கண்களா? அல்லது ஜொலிக்கும் கொள்ளிகளா? அல்லது சிகப்பு வர்ண எலெக்ட்ரிக்பல்புகளா? இந்த உருவத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? எங்கே எங்கே? எப்போது?ஐயோ! இது என்ன? தலையை ஏன் இப்படிச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லையே! மூளை குழம்புகிறது என்பது இது தானோ? இங்கே வந்து நாம் நின்று எத்தனை நேரம் ஆயிற்று? இந்தஉருவத்தைப் பார்க்கத் தொடங்கி எத்தனை நேரம் ஆயிற்று? ஒரு வருஷம் இருக்குமோ? ஆயிரம்வருஷம் இருக்குமோ? இந்த உருவம் ஏன் இப்படியே நின்று கொண்டிருக்கிறது? ஏன்தன்னுடைய கொள்ளிக் கண்களால் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஐயோ! மயக்கமாய் வருகிறதே! இல்லை; மயக்கம் வரவில்லை அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது.கண்ணும் நன்றாய்த் தெரிகிறது. அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? அதோ வாயைத் திறந்து பேசுகிறதே! "சீதா! நான் யார் என்று தெரிகிறதா?ஞாபகம் வருகிறதா?" இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சீதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்து விட்டது, சீ! இவள் பேயுமில்லை; பிசாசுமில்லை பம்பாயில் தன் தாயார் படுத்த படுக்கையாயிருந்த சமயம் மர்மமாக வந்து ரத்தின மாலையும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான் இவள்! மனப்பிராந்தியினால் எப்படி யெல்லாமோ தோன்றிவிட்டது.       இவளை மறுபடி எங்கோ பார்த்தோமே? அது எங்கே?... இதோ ஞாபகம் வருகிறதுஇரண்டு மாதத்துக்கு முன்னால் இந்தச் சாலை திரும்பும் முடுக்கில் மரத்தின் பின்னால் கையில்கத்தியுடன் இவள் நின்றதைப் பார்த்தோம். யாரிடமோ இவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே? ஆம்; தாரிணியிடம் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி இவளுடைய வளர்ப்பு மகள் இவள் பெயர் ரஸியாபேகம். "சீதா! ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்?என்னைத் தெரிகிறதா, இல்லையா?" சீதா மிக முயன்று வாயைத் திறந்து இரகசியம் பேசும்குரலில், "தெரிகிறது!" என்றாள். "தெரிகிறது! நான் யார்?" சீதா சிறிது யோசித்துத் தன்னுடையகழுத்தில் அணிந்திருந்த இரத்தின மாலையைத் தொட்டு, "இதைக் கொடுத்தவள்!" என்றாள்."நீ நல்ல பெண்; ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். வீட்டில் நீ மட்டும் தனியேஇருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று அந்த ஸ்திரீ கேட்டாள். இந்தக் கேள்விசீதாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவளுடைய கண்ணும் கவனமும் அதற்குள் வேறொருபொருளிடத்தில் சென்று விட்டன. அந்த ஸ்திரீயின் இடுப்பிலிருந்து தொங்கியகைக்குட்டைதான் அந்தப் பொருள். அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச்செவேலென்று இருந்தது. அதைச் சீதா பார்த்து மிரள விழித்துக் கொண்டே, "ஐயோ! இரத்தம், இரத்தம்!" என்று அலறினாள். திடீரென்று அவளுக்கு எப்படியோ விம்மலும் அழுகையும் கலந்து வந்தன. ரஸியாபேகம் இரண்டு அடி எடுத்து முன்னால் வைத்துச் சீதாவை நெருங்கி வந்தாள்.அவளுடைய ஒரு தோளைப் பிடித்து "இதோ பார், சீதா! நீ சமர்த்தாயிருப்பாய் என்றுநினைத்தேன். எல்லாப் பெண்களையும் போல் மூடத்தனமாய்த் தானிருக்கிறாய். நீ அழுது கூச்சல் போட்டு, இப்படி ஏதாவது பண்ணினாயோ, என்ன செய்வேன் தெரியுமா?        சற்று முன்னால் சாலையில் ஒரு பைத்தியம் பிடித்த நாயை இந்தக் கத்தியினால் குத்திக்கொன்றேன். அது மாதிரி உன்னையும் கொன்றுவிடுவேன்!" என்றாள். சீதாவின் விம்மல் உடனேநின்றது இன்னமும் அந்தக் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டு, "அது நாயின் இரத்தமா?"என்றாள். "ஆமாம்; உன்னை இது ரொம்பப் பயப்படுத்துகிறது போலிருக்கிறது! கொஞ்சம் இரு! குழாயில் அலம்பிக் கொண்டு வருகிறேன்." இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ குழாயடிக்குப்போய்த் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கைக்குட்டையை நனைத்துக் கசக்கினாள் ஆனால் கறைபோகிற வழியாயில்லை. "இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்த வேண்டியதுதான்!" என்றுசொல்லிக் கீழே எறிந்துவிட்டுத் திரும்பி வந்தாள். சீதாவின் மனது இதற்குள் வேலை செய்துகொண்டே இருந்தது. இவள் நாயைக் கொன்றதாகச் சொன்னது உண்மைதானா? நாயைக்கொன்றிருந்தால், எதற்காகக் கொல்லைப்புறமாக வந்தாள்? நாம் இங்கே இருப்பது தெரிந்து வந்தாளா? தற்செயலாக வந்தாளா? திடீரென்று அவர் இப்போது வந்து விட்டால் என்ன செய்வது?...அதற்குள் இவளை எப்படியாவது நல்ல வார்த்தைச் சொல்லிப் போகச் சொல்லிவிடவேண்டும்! இல்லாவிட்டால் என்ன ஆகுமோ? கடவுளே! எதற்காக இந்த வீட்டுக்கு வந்துசேர்ந்தாள்? வேறு எங்கேயாவது போயிருக்கக் கூடாதா? அதற்குள் அந்த ஸ்திரீ சீதாவைநெருங்கி வந்து, "வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டாள். "இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார். சாயங்காலமே வந்திருக்க வேண்டும் எதனாலோ இன்று இன்னும் வரவில்லை.""ஊர்லே எந்தப் பெண் பிள்ளையைச் சுற்றிக்கொண்டு அலைகிறானோ? யார் கண்டது?அயோக்கியன்!"        இந்த வார்த்தைகள் சீதாவின் இருதயத்தை ஊசியால் குத்துவதுபோல தைத்தன. பயங்கரமான பல சந்தேகங்கள் உதித்தன. "என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவதுதெரியுமா?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள். "அசடே! எனக்கு உன் புருஷனைப்பற்றிஎன்னமாய்த் தெரியும்? புருஷர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று என் எண்ணம்.அதனால் பொதுப்படையாகச் சொன்னேனே தவிர உன்னுடைய புருஷர்களைப் பற்றிக்குறிப்பாகச் சொல்லவில்லை. உன் அபிப்பிராயம் என்ன? உன் புருஷன் எப்படி?" "எப்படி என்றால்நான் என்னத்தைச் சொல்வது? மொத்தத்தில் நல்லவர்தான் ஆனால் கொஞ்சம்முன்கோபக்காரர். இந்த நிலையில் உங்களைப் பார்த்தால் ஏதாவது தொந்தரவாய் முடியலாம்.அவர் வருவதற்குள் நீங்கள்..." என்று சீதா தயங்கினாள். "நீ சொல்வது எனக்குத் தெரிகிறது.உன் புருஷன் வருவதற்குள் நான் போய்விட்டால் நல்லது என்கிறாய். அப்படித்தானே? நல்ல புண்ணியவதி நீ! எனக்கு ஒருவேளை சாப்பாடு போடக்கூட உனக்கு மனதில்லை!" "ஐயோ!அப்படிச் சொல்லாதீர்கள்; என் கலியாணத்துக்கு நீங்கள் செய்த உதவியைப் பற்றிஎத்தனையோ தடவை எண்ணிப்பார்த்துக்கொண்டி ருக்கிறேன். ஒருவேளை சாப்பாடுதானாபெரிது? அவர் வந்துவிட்டால் யார், இன்னார் என்று தெரிவிக்கும்படி நேருமே என்றுயோசித்தேன் பேஷாகச் சாப்பிட்டு விட்டுப் போங்கள்."       "சீதா! எனக்குச் சாப்பாடு வேண்டாம். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகுஇன்றைக்குத்தான் எனது மனது குளிர்ந்து வயிறும் நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று ராத்திரிநான் எங்கேயும் போக முடியாது. உடம்பு களைப்பாயிருக்கிறது, நன்றாகத் தூங்கிப் பலநாளாயிற்று. இன்று ராத்திரி இங்கே படுத்துத் தூங்கிவிட்டுத்தான் போக வேண்டும். யார், இன்னார் என்று உன் புருஷனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் இருப்பதே தெரியவேண்டியதில்லை. இந்த வீட்டு மாடியில் அறை இருக்கிறதா?" "அதுதானே இல்லை? இந்தப் புது டில்லியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளெல்லாம் மாடியில்லாத வீடுகள்!" அந்த ஸ்திரீ சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்நான அறைக்கு எதிர்ப்புறம் இருந்த அறையைச் சுட்டிக்காட்டி, "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள்."விறகு, கரி, தட்டுமுட்டுச் சாமான்கள்" என்றாள் சீதா. அறையை அந்த ஸ்திரீ திறந்து பார்த்து விட்டு, "சரி இதில் நான் படுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் தெரிய வேண்டாம்; வெளிக்கதவை நீ பூட்டிக்கொண்டு விடு!" என்றாள். "இதில் எப்படிப் படுத்துக் கொள்வீர்கள்? காற்றே வராதே? சாமான்களைக் கன்னாபின்னாவென்று போட்டிருக்கிறதே!" "பாதகமில்லை, சீதா! இதைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான இடங்களில் நான் இருந்திருக்கிறேன்."       இதைக் கேட்ட சீதாவின் மனம் இளகிற்று அந்த ஸ்திரீயின் வரலாறு எப்படியிருக்கும்என்று தான் கற்பனை செய்து கொண்டதெல்லாம் நினைவு வந்தது. வாழ்க்கையில் ரொம்பவும்கஷ்டங்களை அனுபவித்தவள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கஷ்டங்கள் அவளுக்கு ரஜினிபூர் ராஜாவினால் நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அவை என்ன மாதிரிக்கஷ்டங்கள்? அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையுண்டாயிற்று. அதற்கு இப்போதுஅவகாசம் இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் கணவர் திரும்பி வந்து விடலாம். வந்தால் பைத்தியக்காரியைப்போல் தோன்றும் இவளைக் கட்டாயம் விரட்டி அடித்து விடுவார். "இதோ ஒருஜமக்காளமும் தலையணையுமாவது கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச்சீதா விடுவிடு என்று உள்ளே போனாள். ஜமக்காளமும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இத்தனை நேரமும் அவளுடைய உள் மனது "எதையோ மறந்துவிட்டோம் முக்கியமான விஷயம் அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அது இப்போது நினைவு வந்தது. மறந்து போய் நினைவு வந்த விஷயம் தாரிணியின் கோரிக்கைதான்.       ஜமக்காளத்தையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "நிச்சயமாகச்சாப்பாடு வேண்டாமா? பூரியும் சப்பாத்தியும் இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறேனே;நீங்கள் சாவகாசமாகப் பசித்தபோது சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றாள் சீதா. "வேண்டாம்,வேண்டாம் இன்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமைதானே?" "ஆமாம்". "செவ்வாய் இரவு நான்சாப்பிடும் வழக்கம் இல்லை அப்படி விரதம். இன்றைக்கு நிச்சயமாய்ச் சாப்பிடமாட்டேன். இனிமேல் நீ போய் உன் காரியத்தைப் பார். உன் புருஷன் தினம் காலையில் எத்தனை மணிக்குஎழுந்திருப்பான்?" "சாதாரணமாய் ஏழு மணிக்குத்தான்; நான் ஆறு மணிக்கே விழித்துக் கொண்டு விடுவேன்." "அப்படியானால் நீ எழுந்ததும் வந்து கதவைத் திறந்து விட்டுவிடு." "நான் வருவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அறைக்கு இன்னொரு கதவு இருக்கிறது, அது கொல்லைப்புறம் திறக்கும். இராத்திரி தாள் போட்டுக்கொள்ளுங்கள்.காலையில் இஷ்டமானபோது எழுந்து போகலாம்." "ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; உனக்குஎத்தனை குழந்தை?" "ஒரே ஒரு குழந்தைத்தான்! வயது மூன்று ஆகப்போகிறது. வசந்தி என்றுபெயர்; இப்போதுதான் கால் மணிக்கு முன்னால் தூங்கினாள்."        "வசந்தி சௌக்கியமாயிருக்கட்டும்; புருஷர்களின் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கட்டும்." "நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட் டிருப்பீர்கள் போலிருக்கிறது." "அதைப்பற்றிச் சொல்ல இப்போது நேரமில்லை நீ போய் உன் காரியத்தைப் பார்!" "உங்களிடம் ஒரு விஷயம்கேட்கவேண்டும்." "சீக்கிரம் கேள்; ரொம்ப அலுப்பாயிருக்கிறது." "உங்கள் பெயர் என்ன?" "என்பெயர் எதுவாயிருந்தால் என்ன இப்போது?" "நீங்கள் சொல்லா விட்டால் எனக்குத்தெரியாதா?" "தெரிந்தால் சொல்லேன்." "ரஸியா பேகம்!" வியப்புடனும் கோபத்துடனும் அந்த ஸ்திரீ சீதாவைப் பார்த்து "உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டாள். "அதை அப்புறம்சொல்கிறேன் உங்கள் பெயர் ரஸியாபேகமா, இல்லையா?" என்றாள் சீதா. "உண்டு இல்லை, இரண்டும்; என்னுடைய பெயர் ரமாமணி. ஒரு காரியத்துக்காகச் சில காலம் ரஸியாபேகம் என்று மாறு பெயர் வைத்துக் கொண்டேன். அதை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.சொல்லியது யாராக இருக்கும்? ஒருவேளை அந்த அசட்டுப் பிராமணர்தானா?"       எந்த அசட்டுப் பிராமணரைக் குறிப்பிடுகிறாள் என்று சீதாவுக்குத் தெரியவில்லை.சட்டென்று, "வேறு யாரும் இல்லை உங்கள் குமாரி தாரிணிதான் சொன்னாள்" என்றாள். சீதாஎதிர்பார்த்தது போலவே அவள் பதில் அந்த ஸ்திரீயைத் தூக்கிவாரிப் போட்டது. சற்று நேரம்சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு, "நிஜமாகவா? தாரிணியா சொன்னாள்?" என்று கேட்டாள்."ஆமாம்; தாரிணிதான்." "அவளை எங்கே பார்த்தாய்? எப்போது?" "கொஞ்ச நாளைக்கு முன்புஆக்ராவுக்கு போயிருந்தோம் அப்போது சந்தித்தோம்." "அப்புறம்?" "ஆக்ராவிலிருந்து ரஜினிபூருக்குச் சென்றோம்.." அந்த ஸ்திரீயின் உள்ளத்தில் ஏதேனும் கொந்தளிப்புஏற்பட்டிருந்தால், அதை அவள் முகம் சற்றும் காட்டவில்லை. மரத்தினால் செய்த முகம்போல்ஆகிவிட்டது. சீதா மேலும் சொன்னாள்; "ரஜினிபூரில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்.தாரிணியை அவளுடைய தாய் தகப்பன் யார் என்று கேட்டேன். அப்போது தன்னை வளர்த்தவள்என்பதாக உங்களைப் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னதிலிருந்தும் எனக்குத் தெரிந்ததைக்கொண்டும் நீங்களாய்த்தானிருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்." "நீயும் தாரிணியும் ரொம்பசிநேகமாகிவிட்டீர்களா?" என்று ரமாமணி என்கிற ரஸியாபேகம் கேட்டாள்.        "சிநேகமாகாமல் எப்படியிருக்க முடியும்? படகிலிருந்து நான் ஏரியில் விழுந்து விட்டேன். தாரிணிதான் உடனே தண்ணீரில் குதித்து நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினாள்." ரஸியாபேகத்தின் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "என் மகளே மகள்!" என்று குதூகலமாகக் கூறினாள். "மகளிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே? ஆனால் சந்தித்து வருஷக் கணக்கு ஆயிற்றாமே? உங்களைக் கண்டால் உடனே தனக்குத் தெரிவிக்கும்படிசொல்லியிருக்கிறாள்." "தாரிணி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா?" "இந்தஊரிலேதான் இருப்பதாகச் சொன்னாள், விலாசம் கூடத் தந்திருக்கிறாள். நாளைக் காலையில்சொல்லி அனுப்பட்டுமா? நீங்கள் இங்கேயே நாளைக்கும் இருந்து தாரிணியைப் பார்த்து விட்டுப்போகலாமே? என் அகத்துக்காரரிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டால் போகிறது!" ரஸியாபேகம் ஜமக்காளத்தையும் தலையணையையும் கீழே போட்டுவிட்டு, "சீதா! எங்கே! என்கை மேலே உன் கையை வை!" என்று அதட்டும் குரலில் கூறினாள். சீதா அவ்விதமே செய்தாள்.        "நான் இன்று இரவு இங்கு வந்ததைப்பற்றி தாரிணியிடமாவது உன் புருஷனிடமாவது நீசொல்லவே கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே கூடாது. அப்படி என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதுபோல் உன்னை இந்த நிமிஷமே கொன்று போட்டுவிடுவேன்" என்று கூறி ரஸியாபேகம் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் எடுத்துத் தூக்கிக்காட்டினாள். சற்று முன்னால் சிறிது அமைதியடைந்திருந்த அவளுடைய முகத்தில் மறுபடியும்கொலை வெறி கூத்தாடியது. சீதா மிரண்டு போய் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தாள். இந்த வெறி பிடித்த ஸ்திரீயிடம் எதற்காக இவ்வளவு பேச்சுக் கொடுத்தோம் என்று தோன்றியது.அந்தச் சமயத்தில் வாசலில் 'பாம்' 'பாம்' என்று மோட்டாரின் சத்தம் கேட்டது. அது அந்த வீட்டுமோட்டார்க் குழலின் சத்தந்தான். "அவர் வந்துவிட்டார்; நீங்கள் சீக்கிரம் அறைக்கு உள்ளேபோங்கள்!" என்றாள் சீதா. "ஜாக்கிரதை! ஞாபக மறதியாகக் கூட என்னைப்பற்றிப் பேச்சுஎடுக்காதே!" என்று சொல்லிக் கொண்டே ரஸியாபேகம் சாமான் அறைக்குள்ளே பிரவேசித்தாள். சீதா அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். பிறகு வாசற்கதவைத் திறக்க விரைந்து சென்றாள்.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.