LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-28

 

2.028.திருக்கருவூரானிலை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பசுபதீசுவரர். 
தேவியார் - கிருபாநாயகியம்மை. 
1764 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் 
சுண்ட லாருயி ராய தன்மையர் 
கண்ட னார்கரு வூரு ளானிலை 
அண்ட னாரரு ளீயு மன்பரே. 2.028. 1
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்டவரும், அரிய உயிர் போன்றவரும், கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர், கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார். அருள் வழங்கும் அன்புடையவர் அவர். 
1765 நீதி யார்நினைந் தாய நான்மறை 
ஓதி யாரொடுங் கூட லார்குழைக் 
காதி னார்கரு வூரு ளானிலை 
ஆதி யாரடி யார்த மன்பரே. 2.028.2
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார் களுக்கு அன்பர். 
1766 விண்ணு லாமதி சூடி வேதமே 
பண்ணு ளார்பர மாய பண்பினர் 
கண்ணு ளார்கரு வூரு ளானிலை 
அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 2.028. 3
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர். 
1767 முடியர் மும்மத யானை யீருரி 
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் 
கடியுளார் கரு வூரு ளானிலை 
அடிகள் யாவையு மாய ஈசரே. 2.028.4
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்ற வர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார். 
1768 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் 
மங்கை யர்மணி நீல கண்டர்வான் 
கங்கை யார்கரு வூரு ளானிலை 
அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 2.028. 5
தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியில் பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர். ஆகாய கங்கையைத் தாங்கியவர். அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார். 
1769 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 2.028. 6
தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்த வில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?. 
1770 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் 
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் 
கண்ணி னார்கரு வூரு ளானிலை 
நண்ணி னார்நமை யாளு நாதரே. 2.028. 7
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர. நீறணிந்தவர். திருமேனியில் உமை அம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழுந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர். 
1771 கடுத்த வாளரக் கன்க யிலையை 
எடுத்த வன்றலை தோளுந் தாளினால் 
அடர்த்த வன்கரு வூரு ளானிலை 
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 2.028. 8
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன். 
1772 உழுது மாநிலத் தேன மாகிமால் 
தொழுது மாமல ரோனுங் காண்கிலார் 
கழுதி னான்கரு வூரு ளானிலை 
முழுது மாகிய மூர்த்தி பாதமே. 2.028. 9
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான். 
1773 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் 
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் 
பத்தர் சேர்கரு வூரு ளானிலை 
அத்தர் பாத மடைந்து வாழ்மினே. 2.028. 10
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.
1774 கந்த மார்பொழிற் காழி ஞானசம் 
பந்தன் சேர்கரு வூரு ளானிலை 
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் 
சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 2.028. 11
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர். 
திருச்சிற்றம்பலம்

2.028.திருக்கருவூரானிலை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பசுபதீசுவரர். தேவியார் - கிருபாநாயகியம்மை. 

1764 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர் கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயு மன்பரே. 2.028. 1
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்டவரும், அரிய உயிர் போன்றவரும், கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர், கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார். அருள் வழங்கும் அன்புடையவர் அவர். 

1765 நீதி யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார்குழைக் காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்த மன்பரே. 2.028.2
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார் களுக்கு அன்பர். 

1766 விண்ணு லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர் கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 2.028. 3
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர். 

1767 முடியர் மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் கடியுளார் கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே. 2.028.4
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்ற வர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார். 

1768 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யார்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 2.028. 5
தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியில் பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர். ஆகாய கங்கையைத் தாங்கியவர். அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார். 

1769 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 2.028. 6
தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்த வில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?. 

1770 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளு நாதரே. 2.028. 7
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர. நீறணிந்தவர். திருமேனியில் உமை அம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழுந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர். 

1771 கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 2.028. 8
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன். 

1772 உழுது மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார் கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே. 2.028. 9
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான். 

1773 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாத மடைந்து வாழ்மினே. 2.028. 10
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

1774 கந்த மார்பொழிற் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 2.028. 11
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.