|
||||||||
ஆறாம் திருமுறை-20 |
||||||||
6.020.திருநள்ளாறு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
2286 ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.1
ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய், விரும்பத்தக்க பார்வதி பாகனாய், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந்தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம்செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும்.
2287 படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.2
பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய், முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய், அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்க ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய்,காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2288 படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
யமுதாக வுண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.3
படமெடுக்கு பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய, மேலும் கீழுமாய் நிற்பவனை, பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை, வலிய பாம்பினைக்கொண்டு கடைந்தபோது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை, எல்லோருக்கும் முற்பட்டவனை, இதழ்களிலே வண்டுகளின் ஒலிநிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை, சிறந்த இரத்தினம் போன்றுகண்ணுக்கு இனியவனை. மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை, நள்ளாற்றில் உகந்தருளியிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2289 கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.4
கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து, காதில்தோடு அணிந்து, உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2290 உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளி யெஞ்சிவ லோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.5
இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய், அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப்பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2291 குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையி னானைச்
சலங்கெடுத்துத் தாயமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.6
அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய், பார்வதியை இடப்பாகனாய், உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளை நீக்கித்தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய், வேதத்தை ஓதுபவனாய், பிறை சூடிய சடையினனாய், நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப் பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2292 பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.7
பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய், மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய், ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய், அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய், நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2293 சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.8
வேதங்களை ஓதுபவனாய், ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய், எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்தேவதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும், கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2294 குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.9
மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை, வன்னி, ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2295 இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்நெஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
6.020.10
தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் 'சிவபெருமானே எம் இறைவன்' என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
திருச்சிற்றம்பலம்
6.020.திருநள்ளாறு திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று. சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர். தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
2286 ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.1
ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய், விரும்பத்தக்க பார்வதி பாகனாய், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந்தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம்செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும்.
2287 படையானைப் பாசுபத வேடத் தானைப் பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம் அடையாமைக் காப்பானை யடியார் தங்கள் அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச் சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச் சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின் நடையானை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.2
பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய், முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய், அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்க ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய்,காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2288 படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை யமுதாக வுண்டானை ஆதி யானை மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.3
படமெடுக்கு பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய, மேலும் கீழுமாய் நிற்பவனை, பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை, வலிய பாம்பினைக்கொண்டு கடைந்தபோது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை, எல்லோருக்கும் முற்பட்டவனை, இதழ்களிலே வண்டுகளின் ஒலிநிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை, சிறந்த இரத்தினம் போன்றுகண்ணுக்கு இனியவனை. மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை, நள்ளாற்றில் உகந்தருளியிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2289 கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக் கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச் சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச் சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப் பட்டங்க மாலை நிறையச் சூடிப் பல்கணமுந் தாமும் பரந்த காட்டில் நட்டங்க மாடியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.4
கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து, காதில்தோடு அணிந்து, உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2290 உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம் சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத் திருச்சிராப் பள்ளி யெஞ்சிவ லோகனைக் கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக் கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.5
இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய், அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப்பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2291 குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக் குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையி னானைச் சலங்கெடுத்துத் தாயமூல தன்ம மென்னுந் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.6
அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய், பார்வதியை இடப்பாகனாய், உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளை நீக்கித்தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய், வேதத்தை ஓதுபவனாய், பிறை சூடிய சடையினனாய், நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப் பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2292 பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப் புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத் தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ் சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண்டானை நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.7
பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய், மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய், ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய், அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய், நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2293 சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக் காளத்தி யானைக் கயிலை மேய நல்லானை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.8
வேதங்களை ஓதுபவனாய், ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய், எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்தேவதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும், கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2294 குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச் சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச் சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும் நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.9
மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை, வன்னி, ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2295 இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம் நறவார்நெஞ் சடையானை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.10
தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் 'சிவபெருமானே எம் இறைவன்' என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|