|
||||||||
நான்காம் திருமுறை-50 |
||||||||
4.050.திருக்குறுக்கை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
486 நெடியமால் பிரம னோடு
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணா
ரருச்சுனற் கம்பும் வில்லும்
துடியுடை வேட ராகித்
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
4.050.1
உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில், சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற, பிரமனும், நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர். அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து. அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார்.
487 ஆத்தமா மயனு மாலு
மன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமா னென்று
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமா மட்ட மீமுன்
சீருடை யேழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
4.050.2
குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் 'எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம்' என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர்.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. 4.050.3-10
திருச்சிற்றம்பலம்
4.050.திருக்குறுக்கை திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டேசுவரர். தேவியார் - ஞானாம்பிகையம்மை.
486 நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள அடியொடு முடியுங் காணா ரருச்சுனற் கம்பும் வில்லும் துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.(4.050.1)
உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில், சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற, பிரமனும், நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர். அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து. அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார்.
487 ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர் சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத் தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.(4.050.2)
குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் 'எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம்' என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர்.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.(4.050.3-10)
திருச்சிற்றம்பலம் |
||||||||
by Swathi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|