LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-58

 

 

4.058.திருப்பருப்பதம் 
திருநேரிசை : பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் வடநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர். 
தேவியார் - மனோன்மணியம்மை. 
558 கன்றினார் புரங்கண் மூன்றுங்
கனலெரி யாகச்சீறி
நின்றதோ ருருவந் தன்னா
னீர்மையு நிறையுங்கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு
மூர்பலி தேர்ந்துபின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
பருப்பத நோக்கினாரே.
4.058.1
தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து, தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும்அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார்.அப்பெருமான் திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக்கொண்டார்.
559 கற்றமா மறைகள் பாடிக்
கடைதொறும்பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
வானவர் வணங்கிவாழ்த்த
முற்றவோர் சடையி னீரை
யேற்றமுக்கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கினாரே.
4.058.2
முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி, வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய், மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி, தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார். (காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது.)
560 கரவிலா மனத்த ராகிக்
கைதொழுவார்கட் கென்றும்
இரவுநின் றெரிய தாடி
யின்னருள் செய்யுமெந்தை
மருவலார் புரங்கண் மூன்று
மாட்டியவகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கினாரே.
4.058.3
இரவிலே தீயில் நின்று ஆடுபவராய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய், வஞ்சனையில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப்பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.
561 கட்டிட்ட தலைகை யேந்திக்
கனலெரி யாடிச்சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிக்
சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
வேறிருந்தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்
பருப்பத நோக்கினாரே.
4.058.4
பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி, ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி, சாம்பலைப்பூசி, சுடுகாட்டில் தங்குபவராகி, உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையைஅணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே.
562 கையராய்க்கபால மேந்திக்
காமனைக்கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
விளங்கு வெண் ணீறுபூசி
உய்வரா யுள்கு வார்கட்
குவகைகள் பலவுஞ் செய்து
பையரா வரையி லார்த்துப்
பருப்பத நோக்கி னாரே.
4.058.5
மண்டையோட்டை ஏந்திய கையினராய், மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி, வடிவை எடுத்துக் கொண்டவராய், உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி, தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செயல்களைச் செய்து, படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார்.
563 வேடராய் வெய்ய ராகி
வேழத்தி னுரிவைபோர்த்து
ஓடரா யுலக மெல்லா
முழிதர்வருமையுந் தாமும்
காடராய்க் கனல்கை யேந்திக்
கடியதோர்விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்
பருப்பத நோக்கினாரே.
4.058.6
பெருமான், அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய், கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து, மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய், உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து, கையில் தீயை ஏந்தி, விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார்.
564 மேகம்போன் மிடற்ற ராகி
வேழத்தினுரிவை போர்த்து
ஏகம்ப மேவி னார்தா
மிமையவர்பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்
கடியதோர்விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்
பருப்பத நோக்கினாரே.
4.058.7
கார்மேகம் போன்ற நீலகண்டராய், யானையின் தோலைப் போர்த்து, ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய், தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ, அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார்.
565 பேரிடர்ப் பிணிக டீர்க்கும்
பிஞ்ஞக னெந்தைபெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
கபாலமோர்கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
றேறிய செல்வர்நல்ல
பாரிடம் பாணி செய்யப்
பருப்பத நோக்கி னாரே.
4.058.8
பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும், தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான், நீலகண்டராய், ஒரு கையில்மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்தகண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார்.
566 அங்கண்மா லுடைய ராய
வைவரா லாட்டுணாதே
உங்கண்மால் தீர வேண்டி
லுள்ளத்தாலுள்கி யேத்தும்
செங்கண்மால் பரவி யேத்திச்
சிவனென நின்றசெல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
பருப்பத நோக்கினாரே.
4.058.9
சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப்புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார். உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்குதலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள்.
567 அடல்விடை யூர்தி யாகி
யரக்கன்றோளடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
கறையணி கண்டனார்தாம்
சுடர்விடு மேனி தன்மேற்
சுண்ணவெண்ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
பருப்பத நோக்கினாரே.
4.058.10
வலிய காளையை வாகனமாகக் கொண்டு, இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி, கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திருமேனியின் மீது திருநீற்றை அணிந்து, பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார்.
திருச்சிற்றம்பலம

4.058.திருப்பருப்பதம் 

திருநேரிசை : பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் வடநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - பருப்பதேசுவரர். 

தேவியார் - மனோன்மணியம்மை. 

 

 

558 கன்றினார் புரங்கண் மூன்றுங்

கனலெரி யாகச்சீறி

நின்றதோ ருருவந் தன்னா

னீர்மையு நிறையுங்கொண்டு

ஒன்றியாங் குமையுந் தாமு

மூர்பலி தேர்ந்துபின்னும்

பன்றிப்பின் வேட ராகிப்

பருப்பத நோக்கினாரே.

4.058.1

 

  தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து, தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும்அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார்.அப்பெருமான் திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக்கொண்டார்.

 

 

559 கற்றமா மறைகள் பாடிக்

கடைதொறும்பலியுந் தேர்வார்

வற்றலோர் தலைகை யேந்தி

வானவர் வணங்கிவாழ்த்த

முற்றவோர் சடையி னீரை

யேற்றமுக்கண்ணர் தம்மைப்

பற்றினார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கினாரே.

4.058.2

 

  முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி, வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய், மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி, தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார். (காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது.)

 

 

560 கரவிலா மனத்த ராகிக்

கைதொழுவார்கட் கென்றும்

இரவுநின் றெரிய தாடி

யின்னருள் செய்யுமெந்தை

மருவலார் புரங்கண் மூன்று

மாட்டியவகைய ராகிப்

பரவுவார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கினாரே.

4.058.3

 

  இரவிலே தீயில் நின்று ஆடுபவராய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய், வஞ்சனையில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப்பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.

 

 

561 கட்டிட்ட தலைகை யேந்திக்

கனலெரி யாடிச்சீறிச்

சுட்டிட்ட நீறு பூசிக்

சுடுபிணக் காட ராகி

விட்டிட்ட வேட்கை யார்க்கு

வேறிருந்தருள்கள் செய்து

பட்டிட்ட வுடைய ராகிப்

பருப்பத நோக்கினாரே.

4.058.4

 

  பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி, ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி, சாம்பலைப்பூசி, சுடுகாட்டில் தங்குபவராகி, உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையைஅணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே.

 

 

562 கையராய்க்கபால மேந்திக்

காமனைக்கண்ணாற் காய்ந்து

மெய்யராய் மேனி தன்மேல்

விளங்கு வெண் ணீறுபூசி

உய்வரா யுள்கு வார்கட்

குவகைகள் பலவுஞ் செய்து

பையரா வரையி லார்த்துப்

பருப்பத நோக்கி னாரே.

4.058.5

 

  மண்டையோட்டை ஏந்திய கையினராய், மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி, வடிவை எடுத்துக் கொண்டவராய், உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி, தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செயல்களைச் செய்து, படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார்.

 

 

563 வேடராய் வெய்ய ராகி

வேழத்தி னுரிவைபோர்த்து

ஓடரா யுலக மெல்லா

முழிதர்வருமையுந் தாமும்

காடராய்க் கனல்கை யேந்திக்

கடியதோர்விடைமேல் கொண்டு

பாடராய்ப் பூதஞ் சூழப்

பருப்பத நோக்கினாரே.

4.058.6

 

  பெருமான், அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய், கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து, மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய், உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து, கையில் தீயை ஏந்தி, விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார்.

 

 

564 மேகம்போன் மிடற்ற ராகி

வேழத்தினுரிவை போர்த்து

ஏகம்ப மேவி னார்தா

மிமையவர்பரவி யேத்தக்

காகம்பர் கழற ராகிக்

கடியதோர்விடையொன் றேறிப்

பாகம்பெண் ணுருவ மானார்

பருப்பத நோக்கினாரே.

4.058.7

 

  கார்மேகம் போன்ற நீலகண்டராய், யானையின் தோலைப் போர்த்து, ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய், தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ, அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார்.

 

 

565 பேரிடர்ப் பிணிக டீர்க்கும்

பிஞ்ஞக னெந்தைபெம்மான்

காருடைக் கண்ட ராகிக்

கபாலமோர்கையி லேந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளே

றேறிய செல்வர்நல்ல

பாரிடம் பாணி செய்யப்

பருப்பத நோக்கி னாரே.

4.058.8

 

  பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும், தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான், நீலகண்டராய், ஒரு கையில்மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்தகண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார்.

 

 

566 அங்கண்மா லுடைய ராய

வைவரா லாட்டுணாதே

உங்கண்மால் தீர வேண்டி

லுள்ளத்தாலுள்கி யேத்தும்

செங்கண்மால் பரவி யேத்திச்

சிவனென நின்றசெல்வர்

பைங்கண்வெள் ளேற தேறிப்

பருப்பத நோக்கினாரே.

4.058.9

 

  சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப்புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார். உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்குதலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள்.

 

 

567 அடல்விடை யூர்தி யாகி

யரக்கன்றோளடர வூன்றிக்

கடலிடை நஞ்ச முண்ட

கறையணி கண்டனார்தாம்

சுடர்விடு மேனி தன்மேற்

சுண்ணவெண்ணீறு பூசிப்

படர்சடை மதியஞ் சேர்த்திப்

பருப்பத நோக்கினாரே.

4.058.10

 

  வலிய காளையை வாகனமாகக் கொண்டு, இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி, கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திருமேனியின் மீது திருநீற்றை அணிந்து, பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார்.

 

 

திருச்சிற்றம்பலம்

 

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.