LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-69

 

5.069.திருக்கருவிலி 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சற்குணநாதர். 
தேவியார் - சர்வாங்கநாயகியம்மை. 
1760 மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. 5.069.1
தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக.
1761 ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.2
உலகில் நிறைந்த மனிதர்களே! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர்உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1762 பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.3
குற்றமுடையவற்றைப் பேசுதலால், நீர் மங்குமாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு, கங்கை சேர்ந்த சடையானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1763 வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.4
மனிதர்களே! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1764 உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.5
உலகத்தில் உள்ளவர்களே! இதுவே உய்யும்வழி; கேட்பீராக; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும்,மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற, கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1765 ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.6
நீர், மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
1766 நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.7
நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச் செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
1767 பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. 5.069.8
உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும், எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1768 நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. 5.069.9
மனிதர்களே! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக; நாள்தோறும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும், பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1769 பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.10
உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
திருச்சிற்றம்பலம்

 

5.069.திருக்கருவிலி 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சற்குணநாதர். 

தேவியார் - சர்வாங்கநாயகியம்மை. 

 

 

1760 மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்

பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்

கட்டிட் டவினை போகக் கருவிலிக்

கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. 5.069.1

 

  தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக.

 

 

1761 ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்

ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்

கால னார்வரு தன்முன் கருவிலிக்

கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.2

 

  உலகில் நிறைந்த மனிதர்களே! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர்உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1762 பங்க மாயின பேசப் பறைந்துநீர்

மங்கு மாநினை யாதே மலர்கொடு

கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்

கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.3

 

  குற்றமுடையவற்றைப் பேசுதலால், நீர் மங்குமாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு, கங்கை சேர்ந்த சடையானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1763 வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்

வேட னாய்விச யற்கருள் செய்தவெண்

காட னாருறை கின்ற கருவிலிக்

கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.4

 

  மனிதர்களே! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1764 உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்

பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்

கையி னானுறை கின்ற கருவிலிக்

கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.069.5

 

  உலகத்தில் உள்ளவர்களே! இதுவே உய்யும்வழி; கேட்பீராக; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும்,மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற, கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1765 ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்

தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி

காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்

கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.6

 

  நீர், மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1766 நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்

பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்

கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்

கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.7

 

  நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச் செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1767 பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா

றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர

கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்

குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. 5.069.8

 

  உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும், எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1768 நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்

எம்பி ரானென் றிமையவ ரேத்துமே

கம்ப னாருறை கின்ற கருவிலிக்

கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. 5.069.9

 

  மனிதர்களே! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக; நாள்தோறும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும், பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

1769 பாரு ளீரிது கேண்மின் பருவரை

பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்

கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்

கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. 5.069.10

 

  உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.