|
||||||||
ஐந்தாம் திருமுறை-77 |
||||||||
5.077.திருச்சேறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர்.
தேவியார் - ஞானவல்லியம்மை.
1839 பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாம நவிலவே. 5.077.1
சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும்; பொய்கெடும்; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும்.
1840 என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே. 5.077.2
நெஞ்சமே! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும், வேதவிழுப்பொருளும், செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க, நீ என்ன மாதவம் செய்தாய்!.
1841 பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. 5.077.3
திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால், பிறப்பு, மூப்பு, மிக்கபசி, மிக்கபிணி, இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும்.
1842 மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே. 5.077.4
ஊமைகளே! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக.
1843 எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.077.5
நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால், அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன்; திண்மை உடையவரும், சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1844 தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.077.6
வானம் முறை தவறி (வறண்டு) உலகம் நடுங்கினால் என்ன? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1845 வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.7
தேடிவைத்த செல்வமும், பெண்களும், ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார்? சித்தரும், சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1846 குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.8
நெஞ்சமே! குலங்கள் என்னசெய்யும் திறத்தன? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன? மனம் அசைந்து நீ நின்றுசோராதே; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்காக?
1847 பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.9
பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?
1848 பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. 5.077.10
பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும், திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை.
திருச்சிற்றம்பலம்
5.077.திருச்சேறை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சென்னெறியப்பர். தேவியார் - ஞானவல்லியம்மை.
1839 பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும் கூரி தாய அறிவுகை கூடிடும் சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன்றன் நாம நவிலவே. 5.077.1
சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும்; பொய்கெடும்; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும்.
1840 என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே. 5.077.2
நெஞ்சமே! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும், வேதவிழுப்பொருளும், செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க, நீ என்ன மாதவம் செய்தாய்!.
1841 பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. 5.077.3
திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால், பிறப்பு, மூப்பு, மிக்கபசி, மிக்கபிணி, இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும்.
1842 மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே. 5.077.4
ஊமைகளே! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக.
1843 எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன் திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.077.5
நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால், அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன்; திண்மை உடையவரும், சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1844 தப்பி வானந் தரணிகம் பிக்கிலென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.077.6
வானம் முறை தவறி (வறண்டு) உலகம் நடுங்கினால் என்ன? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1845 வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.7
தேடிவைத்த செல்வமும், பெண்களும், ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார்? சித்தரும், சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
1846 குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.8
நெஞ்சமே! குலங்கள் என்னசெய்யும் திறத்தன? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன? மனம் அசைந்து நீ நின்றுசோராதே; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்காக?
1847 பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் விழவிடா விடில் வேண்டிய எய்தொணா திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே. 5.077.9
பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?
1848 பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் வருந்த வூன்றி மலரடி வாங்கினான் திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. 5.077.10
பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும், திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|