|
||||||||
ஐந்தாம் திருமுறை-8 |
||||||||
5.008.திருஅன்னியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1144 பாற லைத்த படுவெண் தலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடையன்னி யூரனே. 5.008.1
பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டைஓட்டைக் கையிற் கொண்டவனும், திருநீறு பூசிய சிவந்த மேனியனும், உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும், அரவு ஆட்டி ஆறலைக் குஞ் சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே.
1145 பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தானன்னி யூரனே. 5.008.2
பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும், இண்டையணிந்தசடையனும், இருளார்கண்டனும், யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும், அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே.
1146 பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போலன்னி யூரரே. 5.008.3
நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல்வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும், தம்மிடப்பாகத்தில் குரவு நறுமணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டு பவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1147 வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றாரன்னி யூரரே. 5.008.4
வேதங்களை இசையோடு ஓதுவோரும், விண்ணோர்க்கும் உயர்ந்தவரும், ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும், நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1148 எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி யிருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றாரன்னி யூரரே. 5.008.5
தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும், எம் தலைவரும், துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1149 வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே. 5.008.6
வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்தவரும், நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும், சிவந்த தீயின் வண்ணம் உடையவரும், அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே, காண்பீராக.
1150 ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையொர் பாகமா
ஆனை யீருரி யாரன்னி யூரரே. 5.008.7
தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு, உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1151 காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தாரன்னி யூரரே. 5.008.8
நெற்றிக்கண் உடையவரும், காலையே போய்ப் பலி ஏற்பவரும், வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டுவரும், ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே.
1152 எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றாரன்னி யூரரே. 5.008.9
தீவண்ண மேனியரும், எலும்பணிந்து இன்புறுவாரும்,திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும், மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1153 வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்ச மஞ்சுரமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே. 5.008.10
வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச, " ஆயிழையே! அஞ்சல்! அஞ்சல்!" என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
திருச்சிற்றம்பலம்
5.008.திருஅன்னியூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆபத்சகாயர். தேவியார் - பெரியநாயகியம்மை.
1144 பாற லைத்த படுவெண் தலையினன் நீற லைத்தசெம் மேனியன் நேரிழை கூற லைத்தமெய் கோளர வாட்டிய ஆற லைத்த சடையன்னி யூரனே. 5.008.1
பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டைஓட்டைக் கையிற் கொண்டவனும், திருநீறு பூசிய சிவந்த மேனியனும், உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும், அரவு ஆட்டி ஆறலைக் குஞ் சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே.
1145 பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய் இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர் கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன் அண்டத் தப்புறத் தானன்னி யூரனே. 5.008.2
பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும், இண்டையணிந்தசடையனும், இருளார்கண்டனும், யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும், அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே.
1146 பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம் குரவம் நாறுங் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போலன்னி யூரரே. 5.008.3
நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல்வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும், தம்மிடப்பாகத்தில் குரவு நறுமணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டு பவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1147 வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர் சோதி வெண்பிறை துன்று சடைக்கணி நாதர் நீதியி னாலடி யார்தமக் காதி யாகிநின் றாரன்னி யூரரே. 5.008.4
வேதங்களை இசையோடு ஓதுவோரும், விண்ணோர்க்கும் உயர்ந்தவரும், ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும், நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1148 எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம் இன்ப ராகி யிருந்தவெம் மீசனார் துன்ப வல்வினை போகத் தொழுமவர்க் கன்ப ராகிநின் றாரன்னி யூரரே. 5.008.5
தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும், எம் தலைவரும், துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1149 வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே. 5.008.6
வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்தவரும், நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும், சிவந்த தீயின் வண்ணம் உடையவரும், அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே, காண்பீராக.
1150 ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை யார்குழ லாளையொர் பாகமா ஆனை யீருரி யாரன்னி யூரரே. 5.008.7
தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு, உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1151 காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி மேலை வானவர் வந்து விரும்பிய சோலை சூழ்புறங் காடரங் காகவே ஆலின் கீழறத் தாரன்னி யூரரே. 5.008.8
நெற்றிக்கண் உடையவரும், காலையே போய்ப் பலி ஏற்பவரும், வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டுவரும், ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே.
1152 எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த் திரியு மூவெயில் தீயெழச் செற்றவர் கரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரிய ராகிநின் றாரன்னி யூரரே. 5.008.9
தீவண்ண மேனியரும், எலும்பணிந்து இன்புறுவாரும்,திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும், மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1153 வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும் அஞ்ச மஞ்சுரமோ ராறுநான் கும்மிறப் பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே. 5.008.10
வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச, " ஆயிழையே! அஞ்சல்! அஞ்சல்!" என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|