LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

குறுந்தொகை பகுதி -2

 

26. குறிஞ்சி - தோழி கூற்று
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே 5
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.  
- கொல்லனழிசி.  
27. பாலை - தலைவி கூற்று
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே. 5
- வெள்ளிவீதியார்.  
28. பாலை - தலைவி கூற்று
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. 5
- அவ்வையார்.  
29. குறிஞ்சி - தலைன் கூற்று
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு 5
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.  
- அவ்வையார்.  
30. பாலை - தலைவி கூற்று
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த் 5
தமியேன் மன்ற அளியேன் யானே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  
31. மருதம் - தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 5
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.  
- ஆதிமந்தியார்.  
32. குறிஞ்சி - தலைவன் கூற்று
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே 5
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  
33. மருதம் - தலைவி கூற்று
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.  
- படுமரத்து மோசிகீரனார்.  
34. மருதம் - தோழி கூற்று
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் 5
குட்டுவன் மாந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.  
- கொல்லிக் கண்ணனார்.  
35. மருதம் - தலைவி கூற்று
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 5
- கழார்க்கீரனெயிற்றி.  
36. குறிஞ்சி - தலைவி கூற்று
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது 5
நோயோ தோழி நின்வயி னானே.  
- பரணர்.  
37. பாலை - தோழி கூற்று
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  
38. குறிஞ்சி - தலைவி கூற்று
கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப 5
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.  
- கபிலர்.  
39. பாலை - தலைவி கூற்று
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.  
- அவ்வையார்.  
40. குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 5
- செம்புலப் பெயனீரார்.  
41. பாலை - தலைவி கூற்று
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று 5
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.  
- அணிலாடு முன்றிலார்.  
42. குறிஞ்சி - தோழி கூற்று
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.  
- கபிலர்.  
43. பாலை - தலைவி கூற்று
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. 5
- அவ்வையார்.  
44. பாலை - செவிலித்தாய் கூற்று
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.  
- வெள்ளிவீதியார்.  
45. மருதம் - தோழி கூற்று
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 5
- ஆலங்குடி வங்கனார்.  
46. மருதம் - தலைவி கூற்று
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.  
- மாமலாடனார்.  
47. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.  
- நெடுவெண்ணிலவினார்.  
48. பாலை - தோழி கூற்று
தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன 5
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.  
- பூங்கணுத்திரையார்.  
49. நெய்தல் - தலைவி கூற்று
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5
- அம்மூவனார்.  
50. மருதம் - தலைவி கூற்று
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 5
- குன்றியனார்.  

26. குறிஞ்சி - தோழி கூற்று
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைமேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகைபூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்தகாஅன் போலத் தான்றீது மொழியினும்தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே 5தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்வரையாடு வன்பறழ்த் தந்தைக்கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.  - கொல்லனழிசி.  


27. பாலை - தலைவி கூற்று
கன்று முண்ணாது கலத்தினும் படாதுநல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கெனக்கு மாகா தென்னைக்கு முதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குலென் மாமைக் கவினே. 5- வெள்ளிவீதியார்.  


28. பாலை - தலைவி கூற்று
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. 5- அவ்வையார்.  


29. குறிஞ்சி - தலைன் கூற்று
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போலஉள்ளம் தாங்கா வெள்ளம் நீந்திஅரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு 5மகவுடை மந்தி போலஅகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.  - அவ்வையார்.  


30. பாலை - தலைவி கூற்று
கேட்டிசின் வாழி தோழி அல்கற்பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇயவாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்துஅமளி தைவந் தனனே குவளைவண்டுபடு மலரிற் சாஅய்த் 5தமியேன் மன்ற அளியேன் யானே.  - கச்சிப்பேட்டு நன்னாகையார்.  



31. மருதம் - தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்மகளிர் தழீஇய துணங்கை யானும்யாண்டுங் காணேன் மாண்தக் கோனையானுமோர் ஆடுகள மகளே என்கைக்கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 5பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.  - ஆதிமந்தியார்.  


32. குறிஞ்சி - தலைவன் கூற்று
காலையும் பகலும் கையறு மாலையும்ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்மாவென மடலோடு மறுகில் தோன்றித்தெற்றெனத் தூற்றலும் பழியே 5வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.  - அள்ளூர் நன்முல்லையார்.  


33. மருதம் - தலைவி கூற்று
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோஇரந்தூ ணிரம்பா மேனியொடுவிருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.  - படுமரத்து மோசிகீரனார்.  


34. மருதம் - தோழி கூற்று
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்தமியர் உறங்கும் கௌவை யின்றாய்இனியது கேட்டின் புறுகவிவ் வூரேமுனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடுஅட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் 5குட்டுவன் மாந்தை யன்னவெம்குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.  - கொல்லிக் கண்ணனார்.  


35. மருதம் - தலைவி கூற்று
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புசினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்னகனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழநுண்ணுறை யழிதுளி தலைஇயதண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 5- கழார்க்கீரனெயிற்றி.  


36. குறிஞ்சி - தலைவி கூற்று
துறுக லயலது மாணை மாக்கொடிதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்நெஞ்சுகள னாக நீயலென் யானெனநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்தாவா வஞ்சின முரைத்தது 5நோயோ தோழி நின்வயி னானே.  - பரணர்.  


37. பாலை - தோழி கூற்று
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழியவர் சென்ற வாறே.  - பாலைபாடிய பெருங்கடுங்கோ.  


38. குறிஞ்சி - தலைவி கூற்று
கான மஞ்ஞை யறையீன் முட்டைவெயிலாடு முசுவின் குருளை உருட்டும்குன்ற நாடன் கேண்மை என்றும்நன்றுமன் வாழி தோழி உண்கண்நீரொ டொராங்குத் தணப்ப 5உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.  - கபிலர்.  


39. பாலை - தலைவி கூற்று
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தெனநெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்மலையுடை அருஞ்சுரம் என்பநம்முலையிடை முனிநர் சென்ற ஆறே.  - அவ்வையார்.  


40. குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 5- செம்புலப் பெயனீரார்.  


41. பாலை - தலைவி கூற்று
காதலர் உழைய ராகப் பெரிதுவந்துசாறுகொ ளூரிற் புகல்வேன் மன்றஅத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணிலாடு முன்றிற்புலம்பில் போலப் புல்லென்று 5அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.  - அணிலாடு முன்றிலார்.  


42. குறிஞ்சி - தோழி கூற்று
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடரகத் தியம்பு நாடவெம்தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.  - கபிலர்.  


43. பாலை - தலைவி கூற்று
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனேஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரேஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்நல்லராக் கதுவி யாங்கென்அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. 5- அவ்வையார்.  


44. பாலை - செவிலித்தாய் கூற்று
காலே பரிதப் பினவே கண்ணேநோக்கி நோக்கி வாளிழந் தனவேஅகலிரு விசும்பின் மீனினும்பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.  - வெள்ளிவீதியார்.  


45. மருதம் - தோழி கூற்று
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிவாலிழை மகளிர்த் தழீஇய சென்றமல்ல லூரன் எல்லினன் பெரிதெனமறுவருஞ் சிறுவன் தாயேதெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 5- ஆலங்குடி வங்கனார்.  


46. மருதம் - தலைவி கூற்று
ஆம்பற் பூவின் சாம்ப லன்னகூம்பிய சிறகர் மனையுறை குரீஇமுன்றில் உணங்கல் மாந்தி மன்றத்துஎருவினுண் தாது குடைவன ஆடிஇல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் 5புன்கண் மாலையும் புலம்பும்இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.  - மாமலாடனார்.  


47. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடைஎல்லி வருநர் களவிற்குநல்லை யல்லை நெடுவெண் ணிலவே.  - நெடுவெண்ணிலவினார்.  


48. பாலை - தோழி கூற்று
தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்ன 5நசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே.  - பூங்கணுத்திரையார்.  


49. நெய்தல் - தலைவி கூற்று
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துமணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பஇம்மை மாறி மறுமை யாயினும்நீயா கியரென் கணவனையானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5- அம்மூவனார்.  


50. மருதம் - தலைவி கூற்று
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 5- குன்றியனார்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.