|
||||||||
ஐந்தாம் திருமுறை-11 |
||||||||
5.011.திருமீயச்சூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர்.
தேவியார் - சுந்தரநாயகியம்மை.
1174 தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. 5.011.1
இந்நாள்வரை தோன்றிய கோயில்களும், இனித்தோன்றும் கோயில்களும், வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும், கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்; காண்பீராக.
1175 வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.011.2
திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத்தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்கநின்றவனும், எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும்.
1176 பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.011.3
நெஞ்சமே! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும்,ஆனை அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்நினைப்பால் வாழ்வாய்.
1177 நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. 5.011.4
மணம் வீசும் மல்லிகை, கூவிளம், செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடுகொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற்கொண்டு உகந்த பெருமானே! (அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து)
1178 வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. 5.011.5
வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார், திருமீயச்சூர் இளங்கோயில் செவ்வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை!
1179 பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அக லாரிளங் கோயிலே. 5.011.6
திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிகொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது, பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் (கொடுக்கும்) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம்.
1180 படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. 5.011.7
பூதங்களைப் படையாகக் கொண்டவனும், கொன்றைமாலையனும், சடையில் வெள்ளம் உடையவனும், சாந்த வெண்ணீற்றனும், விடையூர்தியானும், திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செல்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன்.
1181 ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. 5.011.8
சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும், வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும். கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர்.
1182 வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.011.9
புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும், வேள்வியுளான் என்றும், பூதத்தான் என்றும் கூறுவர்; கீதம் கிளரும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர்.
1183 கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.011.10
விடமுண்டகண்டனும், கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன்.
திருச்சிற்றம்பலம்
5.011.திருமீயச்சூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர். தேவியார் - சுந்தரநாயகியம்மை.
1174 தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற் கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. 5.011.1
இந்நாள்வரை தோன்றிய கோயில்களும், இனித்தோன்றும் கோயில்களும், வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும், கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்; காண்பீராக.
1175 வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பந்த னைசெய்து பாவிக்க நின்றவன் சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.011.2
திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத்தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்கநின்றவனும், எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும்.
1176 பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.011.3
நெஞ்சமே! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும்,ஆனை அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்நினைப்பால் வாழ்வாய்.
1177 நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. 5.011.4
மணம் வீசும் மல்லிகை, கூவிளம், செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடுகொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற்கொண்டு உகந்த பெருமானே! (அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து)
1178 வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர் செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. 5.011.5
வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார், திருமீயச்சூர் இளங்கோயில் செவ்வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை!
1179 பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள் அக லாரிளங் கோயிலே. 5.011.6
திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிகொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது, பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் (கொடுக்கும்) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம்.
1180 படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன் விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. 5.011.7
பூதங்களைப் படையாகக் கொண்டவனும், கொன்றைமாலையனும், சடையில் வெள்ளம் உடையவனும், சாந்த வெண்ணீற்றனும், விடையூர்தியானும், திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செல்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன்.
1181 ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும் கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. 5.011.8
சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும், வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும். கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர்.
1182 வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர் ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.011.9
புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும், வேள்வியுளான் என்றும், பூதத்தான் என்றும் கூறுவர்; கீதம் கிளரும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர்.
1183 கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.011.10
விடமுண்டகண்டனும், கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|