|
||||||||
வாத நோய்கள் - நில ஆவாரை, பன்னீர் மொட்டு, இந்துப்பு மற்றும் கடுக்காய் தோல்.(Rheumatic Disease- Paneer buds and rock salt medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வாத நோய்கள்.
தேவையானவை:
நில ஆவாரை = 60கிராம்
பன்னீர் மொட்டு = 30கிராம்
இந்துப்பு = 20 கிராம்
சிறு நாகப்பூ = 10 கிராம்
சீரகம் = 10 கிராம்
அதிமதுரம் = 10 கிராம்
ஏலக்காய் = 10 கிராம்
கிராம்பு = 10 கிராம்
இலவங்கப்பட்டை = 10 கிராம்
கடுக்காய் தோல் = 10 கிராம்
சுக்கு = 20 கிராம்
வாய்விளங்கம் = 20 கிராம்
மிளகு = 20 கிராம்
ஓமம் = 20 கிராம்
திப்பிலி = 10 கிராம்
சோம்பு = 10 கிராம்
அதிவிடயம் = 10 கிராம்
கடுகு ரோகிணி = 10 கிராம்
அருநெல்லிக்காய் = 10 கிராம்
தான்றிக்காய் = 10 கிராம்
பனை வெல்லம் = 10 கிராம்
இளநீர் = 400 மி.லி
பசும்பால் = 850 மி.லி
செய்முறை:
நில ஆவாரைகளை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு சுத்தமான நீர் விட்டு நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி பிறகு இளம் வறுவலாக வறுத்து நன்கு இடித்து கொள்ள வேண்டும்.பன்னீர் பூவின் மொட்டை புதிதாக பறித்து வந்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.இந்துப்பை இடித்து வைத்து கொள்ளவும்.கடுக்காயை தட்டி அதன் தோலை எடுத்து மண்பானையில் போட்டு 250 மி.லி பசும்பால் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும்.வாய்விளங்கத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பானையில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.மிளகை தூய நீரில் கழுவி ஒன்றிரண்டாக இடித்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.ஓமத்தை தூய நீரில் கழுவி ஒரு மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி மூன்று மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.திப்பிலியை தூய நீரில் கழுவி ஒன்றிரண்டாக இடித்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி மூன்று மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.சோம்பை தூய நீரில கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சிறுநாகப்பூவை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சீரகத்தை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.அதிமதுரத்தை எடுத்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி பால் நன்கு கொதிக்கும் வரை வைத்து ஒரு மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.ஏலக்காயை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.கிராம்புவை மேல் இருக்கும் பூவை நீக்கி விட்டு ஒரு மண் பானையில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.இலவங்கப்பட்டையை இடித்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பாலை கொதிக்க வைத்து ஊற்றி மூன்று மணி நேரம் மூடி வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.அதிவிடயத்தை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.கடுகு ரோஹிணியை ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தி பிறகு இடித்து கொள்ளவும்.அருநெல்லிக்காயை பச்சையாக கொண்டு வந்து அதன் கொட்டையை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் துணியில் போட்டு நிழலில் உலர்த்தி இடித்து வைத்து கொள்ள வேண்டும்.தான்றிக்காயை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரண்டு மணி நேரம் மூடி வைத்து பின் நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து கொள்ள வேண்டும்.பிறகு இடித்து வைத்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து சிறுக சிறுக மாவு போல இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு மண்பானையில் போட்டு அதில் பனை வெல்லத்தை சுத்தம் செய்து நன்றாக இடித்து போட்டு நன்றாக கலந்து பானையின் வாயை துணியால் மூடி கட்டி மூன்று நாட்கள் வைத்திருந்து பிறகு எடுத்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். பகல் 12 மணி அளவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும்.
சாப்பிட கூடாதவை:
இளநீர், குளிர்ந்த பானங்கள். பரங்கிக்காய், பூசணி, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, கடலை வகைகல், மொச்சைக்கொட்டை, எண்ணெய் பண்டங்கள், பச்சரிசி சோறு, பழஞ்சோறு, மாமிச உணவு, பழங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட கூடியவை:
புழுங்கலரிசி சோறு, மிளகு,சீரகம், பூண்டு, வெந்தயம்,கடுகு, நல்லெண்ணெய், நெய், இளங்காய்கள், சோற்றுப்பு, கீரைகள், மலைப்பழம், மாதுளம் பழம், பால், தேன், துவரம் பருப்பு, மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல், இடியாப்பம், இட்லி, கோதுமைச்சோறு, கோதுமை பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வரலாம். மேலும் வெந்நீர் குளியல், வெந்நீரில் தலைமுழுக்கு மற்றும் வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் சுகபேதி சாப்பிட வேண்டும். அப்போது மோரும், சாதமும் அல்லது பாலும், சாதம், மிளகு பொங்கல் மட்டும் சாப்பிட்டு அடுத்த நாளிலிருந்து மருந்தை சாப்பிட வேண்டும்.மருந்து சாப்பிடும் போது வயிற்ரு வலி ஏற்பட்டால் மருந்தை அன்று மட்டும் நிறுத்தி விட்டு அடுத்த நாள் காலை, மாலை இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.பக்கவாதம், மூட்டு வலி,மூட்டு பிடிப்பு, கை,கால் அசதி உடையவர்களும் இந்த மருந்தை சாப்பிட்டு வரலாம்.
அறிகுறிகள்:
வாத நோய்கள்.
தேவையானவை:
நில ஆவாரை = 60கிராம் பன்னீர் மொட்டு = 30கிராம் இந்துப்பு = 20 கிராம் சிறு நாகப்பூ = 10 கிராம் சீரகம் = 10 கிராம் அதிமதுரம் = 10 கிராம் ஏலக்காய் = 10 கிராம் கிராம்பு = 10 கிராம் இலவங்கப்பட்டை = 10 கிராம் கடுக்காய் தோல் = 10 கிராம் சுக்கு = 20 கிராம் வாய்விளங்கம் = 20 கிராம் மிளகு = 20 கிராம் ஓமம் = 20 கிராம் திப்பிலி = 10 கிராம் சோம்பு = 10 கிராம் அதிவிடயம் = 10 கிராம் கடுகு ரோகிணி = 10 கிராம் அருநெல்லிக்காய் = 10 கிராம் தான்றிக்காய் = 10 கிராம் பனை வெல்லம் = 10 கிராம் இளநீர் = 400 மி.லி பசும்பால் = 850 மி.லி
செய்முறை: நில ஆவாரைகளை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு சுத்தமான நீர் விட்டு நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி பிறகு இளம் வறுவலாக வறுத்து நன்கு இடித்து கொள்ள வேண்டும்.பன்னீர் பூவின் மொட்டை புதிதாக பறித்து வந்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.இந்துப்பை இடித்து வைத்து கொள்ளவும்.கடுக்காயை தட்டி அதன் தோலை எடுத்து மண்பானையில் போட்டு 250 மி.லி பசும்பால் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும்.வாய்விளங்கத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பானையில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.மிளகை தூய நீரில் கழுவி ஒன்றிரண்டாக இடித்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.ஓமத்தை தூய நீரில் கழுவி ஒரு மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி மூன்று மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.திப்பிலியை தூய நீரில் கழுவி ஒன்றிரண்டாக இடித்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி மூன்று மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.சோம்பை தூய நீரில கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சிறுநாகப்பூவை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.சீரகத்தை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.அதிமதுரத்தை எடுத்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பால் ஊற்றி பால் நன்கு கொதிக்கும் வரை வைத்து ஒரு மணி நேரம் மூடி ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும். ஏலக்காயை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.கிராம்புவை மேல் இருக்கும் பூவை நீக்கி விட்டு ஒரு மண் பானையில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.இலவங்கப்பட்டையை இடித்து மண் பானையில் போட்டு 150 மி.லி பசும்பாலை கொதிக்க வைத்து ஊற்றி மூன்று மணி நேரம் மூடி வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.அதிவிடயத்தை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.கடுகு ரோஹிணியை ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தி பிறகு இடித்து கொள்ளவும்.அருநெல்லிக்காயை பச்சையாக கொண்டு வந்து அதன் கொட்டையை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் துணியில் போட்டு நிழலில் உலர்த்தி இடித்து வைத்து கொள்ள வேண்டும்.தான்றிக்காயை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரண்டு மணி நேரம் மூடி வைத்து பின் நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து கொள்ள வேண்டும்.பிறகு இடித்து வைத்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து சிறுக சிறுக மாவு போல இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு மண்பானையில் போட்டு அதில் பனை வெல்லத்தை சுத்தம் செய்து நன்றாக இடித்து போட்டு நன்றாக கலந்து பானையின் வாயை துணியால் மூடி கட்டி மூன்று நாட்கள் வைத்திருந்து பிறகு எடுத்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். பகல் 12 மணி அளவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும்.
சாப்பிட கூடாதவை:
இளநீர், குளிர்ந்த பானங்கள். பரங்கிக்காய், பூசணி, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, கடலை வகைகல், மொச்சைக்கொட்டை, எண்ணெய் பண்டங்கள், பச்சரிசி சோறு, பழஞ்சோறு, மாமிச உணவு, பழங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட கூடியவை:
புழுங்கலரிசி சோறு, மிளகு,சீரகம், பூண்டு, வெந்தயம்,கடுகு, நல்லெண்ணெய், நெய், இளங்காய்கள், சோற்றுப்பு, கீரைகள், மலைப்பழம், மாதுளம் பழம், பால், தேன், துவரம் பருப்பு, மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல், இடியாப்பம், இட்லி, கோதுமைச்சோறு, கோதுமை பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வரலாம். மேலும் வெந்நீர் குளியல், வெந்நீரில் தலைமுழுக்கு மற்றும் வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் சுகபேதி சாப்பிட வேண்டும். அப்போது மோரும், சாதமும் அல்லது பாலும், சாதம், மிளகு பொங்கல் மட்டும் சாப்பிட்டு அடுத்த நாளிலிருந்து மருந்தை சாப்பிட வேண்டும்.மருந்து சாப்பிடும் போது வயிற்ரு வலி ஏற்பட்டால் மருந்தை அன்று மட்டும் நிறுத்தி விட்டு அடுத்த நாள் காலை, மாலை இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.பக்கவாதம், மூட்டு வலி,மூட்டு பிடிப்பு, கை,கால் அசதி உடையவர்களும் இந்த மருந்தை சாப்பிட்டு வரலாம். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|