|
||||||||
சேமியா உப்புமா (semiya upma) |
||||||||
தேவையானவை: சேமியா – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 2 குடமிளகாய் – 1 பச்சைப் பட்டாணி – 100 கிராம் பச்சை மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை எண்ணை – 1 டேபிள்ஸ்பூன் பனீர் – 150 கிராம் உப்பு – தேவையான அளவு எண்ணை-சிறிது, கடுகு-சிறிது, உளுத்தம் பருப்பு-சிறிது, கடலைப் பருப்பு-சிறிது, முந்திரிப் பருப்பு-சிறிது, பெருங்காயம்-சிறிது, கறிவேப்பிலை-சிறிது, செய்முறை: 1.சேமியாவை ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும். 2.கடாயை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். 3.அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும். 4.நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். 5.மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். 6.எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|