|
||||||||
ஐந்தாம் திருமுறை-21 |
||||||||
5.021.திருவின்னம்பர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
1275 என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே. 5.021.1
என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான்; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.
1276 மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணா
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே. 5.021.2
கள்ளுண்பவர்களும், பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை? தட்டி முட்டித் தள்ளாடிவிழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ?
1277 கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.3
கண்ணியும் கொன்றையும், தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர், அனல், சூலம், மான் மறி கூடிய கையை உடையவர், என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும்.
1278 மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.4
மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின்அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன்.
1279 தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே. 5.021.5
தென்னவனும், எனையாளும் சிவனும், மன்னவனும், மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகத்தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும், ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான்.
1280 விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.6
அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும், தன்னடியார் மனத்து அன்பினைஅளப்பவனும். தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொளவேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன்.
1281 சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே. 5.021.7
கங்கையாள் சடைக்கண் உள்ளாள்; அவன் கையது அனல். அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க, இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன்; நமக்கு துன்பக் காலத்துப் பற்றக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன்.
1282 தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே. 5.021.8
தூமலர்களைத் தூவித் தொழுது, துதித்து, நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும், வாளாபொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன்.
1283 விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே. 5.021.9
வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இளவேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன்,நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே.
1284 சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே. 5.021.10
நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே! சனியும், ஞாயிறும், வெள்ளியும், திங்களுமாகிய கோள்களைமுனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ?
திருச்சிற்றம்பலம்
5.021.திருவின்னம்பர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
1275 என்னி லாரு மெனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே. 5.021.1
என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான்; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.
1276 மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணா கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே. 5.021.2
கள்ளுண்பவர்களும், பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை? தட்டி முட்டித் தள்ளாடிவிழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ?
1277 கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.3
கண்ணியும் கொன்றையும், தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர், அனல், சூலம், மான் மறி கூடிய கையை உடையவர், என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும்.
1278 மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.4
மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின்அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன்.
1279 தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேர்வன பூழியான் இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே. 5.021.5
தென்னவனும், எனையாளும் சிவனும், மன்னவனும், மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகத்தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும், ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான்.
1280 விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. 5.021.6
அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும், தன்னடியார் மனத்து அன்பினைஅளப்பவனும். தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொளவேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன்.
1281 சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணால்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே. 5.021.7
கங்கையாள் சடைக்கண் உள்ளாள்; அவன் கையது அனல். அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க, இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன்; நமக்கு துன்பக் காலத்துப் பற்றக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன்.
1282 தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே. 5.021.8
தூமலர்களைத் தூவித் தொழுது, துதித்து, நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும், வாளாபொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன்.
1283 விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமும் திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே. 5.021.9
வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இளவேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன்,நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே.
1284 சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே. 5.021.10
நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே! சனியும், ஞாயிறும், வெள்ளியும், திங்களுமாகிய கோள்களைமுனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ?
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|