|
||||||||
உரப்படை (urapadai) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப் பச்சை அரிசி - 1/4 கப் துவரம்பருப்பு - 1 கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 தேங்காய்த்துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிது நல்லெண்ணை - தேவையான அளவு செய்முறை: 1.அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். 2.ஊறியபின்னர், அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 3.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை,உப்பு ஆகியவற்றையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 4.தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய ஸ்பூன் மாவை நடுவில் ஊற்றி பரப்பி அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|