|
||||||||
ஆறாம் திருமுறை-14 |
||||||||
6.014.திருநல்லூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2222 நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.1
நல்லூரிலுள்ள எம்பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களைமேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம்போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப்போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர்கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி,அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில்செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தனபோலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார்.இஃது அவர் பேரருளின் தன்மையாம்.
2223 பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் னதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.2
நல்லூர் எம்பெருமானார்சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை,பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து,மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத்தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திருவடிகளை, என்தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.
2224 தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்.
சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.3
இதழ்கள் மிக்ககொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு,தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக்கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக் கொண்டு,கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
2225 வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.4
நல்லூர் எம்பெருமானார்,வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக் கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம்திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2226 விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.5
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளைஎன் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2227 உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.6
நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்தபாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்லதவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2228 மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.7
பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர்.அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர்.நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர்.தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
2229 குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளிவிடம்வைத்தார் எண்டோள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.8
இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர்.இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்தவிடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர்.எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2230 சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.9
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம்,மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர்.தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன்புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர்.வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2231 பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.10
நல்லூர் எம்பெருமானார்,பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க,கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர்.சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர்.நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும்திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.
2232 குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
6.014.11
நல்லூர் எம்பெருமானார்,கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர்.இராவணன் 'தலைவனே' என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.
திருச்சிற்றம்பலம்
6.014.திருநல்லூர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர். தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2222 நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.1
நல்லூரிலுள்ள எம்பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களைமேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம்போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப்போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர்கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி,அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில்செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தனபோலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார்.இஃது அவர் பேரருளின் தன்மையாம்.
2223 பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார் புலியுரியின் னதள்வைத்தார் புனலும் வைத்தார் மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார் வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார் மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார் வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார் நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.2
நல்லூர் எம்பெருமானார்சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை,பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து,மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத்தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திருவடிகளை, என்தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.
2224 தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார் துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப் பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார் பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார். சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார் சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார் நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.3
இதழ்கள் மிக்ககொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு,தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக்கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக் கொண்டு,கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
2225 வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம் பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார் கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக் கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார் சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார் சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார் நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.4
நல்லூர் எம்பெருமானார்,வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக் கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம்திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2226 விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார் வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார் கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார் கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார் திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார் திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.5
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளைஎன் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2227 உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார் உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார் மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார் செற்றமலி யார்வமொடு காம லோபஞ் சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார் நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.6
நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்தபாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்லதவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2228 மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார் மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார் நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார் ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார் ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார் நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.7
பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர்.அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர்.நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர்.தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
2229 குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார் குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார் உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டருளிவிடம்வைத்தார் எண்டோள் வைத்தார் நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார் நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள் நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.8
இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர்.இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்தவிடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர்.எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2230 சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார் திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார் நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார் நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார் கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக் குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார் நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.9
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம்,மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர்.தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன்புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர்.வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
2231 பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப் பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர் ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார் அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார் ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார் உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர் நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.10
நல்லூர் எம்பெருமானார்,பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க,கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர்.சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர்.நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும்திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.
2232 குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார் குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால் உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ ஒருவிரலா லுறவைத்தார் இறைவா என்று புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார் புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார் நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6.014.11
நல்லூர் எம்பெருமானார்,கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர்.இராவணன் 'தலைவனே' என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|