|
||||||||
ஐந்தாம் திருமுறை-41 |
||||||||
5.041.திருப்பைஞ்ஞீலி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்.
தேவியார் - விசாலாட்சியம்மை.
1476 உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே. 5.041.1
கோவண உடையினரும், ஒன்றும் குறைவில்லாதவரும், படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை.
1477 மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. 5.041.2
ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும், சித்தராகத் திரிபவரும், அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும், தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப்பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர்.
1478 விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தமவினை தூளியே. 5.041.3
நிணம் பொருந்திய சூலத்தையும், வெண் மழுவாளையும் படைக்கலமாக உடையவனும், பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும், பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும்.
1479 ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடம்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே. 5.041.4
திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம், பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும். இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது.
1480 வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே. 5.041.5
வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும், செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும், தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர்.
1481 குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாண னடியடைந் துய்ந்தனே. 5.041.6
உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண்மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான், கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்.
1482 வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திர்ப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள் போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே. 5.041.7
வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர்.
1483 கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாக மசைத்த அடிகளே. 5.041.8
செங்கோடலும், வெண்கோடலும், கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால், வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர், ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர்.
1484 காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையொர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே. 5.041.9
கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும், கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும், பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக.
1485 தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. 5.041.10
அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத்தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும், நெருக்கித் திருவிரலால் ஊன்ற, சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை.
திருச்சிற்றம்பலம்
5.041.திருப்பைஞ்ஞீலி திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர். தேவியார் - விசாலாட்சியம்மை.
1476 உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க் கில்லை அவலமே. 5.041.1
கோவண உடையினரும், ஒன்றும் குறைவில்லாதவரும், படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை.
1477 மத்த மாமலர் சூடிய மைந்தனார் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம் அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. 5.041.2
ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும், சித்தராகத் திரிபவரும், அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும், தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப்பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர்.
1478 விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான் பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர் தமவினை தூளியே. 5.041.3
நிணம் பொருந்திய சூலத்தையும், வெண் மழுவாளையும் படைக்கலமாக உடையவனும், பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும், பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும்.
1479 ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே நின்ற சூழ லறிவரி யானிடம் சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள் என்றும் மேவி யிருந்த அடிகளே. 5.041.4
திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம், பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும். இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது.
1480 வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர் தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார் யாழின் பாட்டை யுகந்த அடிகளே. 5.041.5
வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும், செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும், தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர்.
1481 குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான் கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் அண்ட வாண னடியடைந் துய்ந்தனே. 5.041.6
உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண்மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான், கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்.
1482 வரிப்பை யாடர வாட்டி மதகரி உரிப்பை மூடிய வுத்தம னாருறை திர்ப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள் போய் இருப்பர் வானவ ரோடினி தாகவே. 5.041.7
வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர்.
1483 கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார் பேடு மாணும் பிறரறி யாததோர் ஆடு நாக மசைத்த அடிகளே. 5.041.8
செங்கோடலும், வெண்கோடலும், கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால், வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர், ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர்.
1484 காரு லாமலர்க் கொன்றையந் தாரினான் வாரு லாமுலை மங்கையொர் பங்கினன் தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே. 5.041.9
கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும், கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும், பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக.
1485 தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளுமெம் மானிடம் இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. 5.041.10
அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத்தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும், நெருக்கித் திருவிரலால் ஊன்ற, சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|