|
||||||||
உருளைக்கிழங்கு கபாப் (potato kabab) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு-அரைக்கிலோ துருவிய தேங்காய்-இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காயம்-ஒன்று தக்காளி-ஒன்று இஞ்சி,பூண்டு விழுது-தலா அரைத்டீஸ்பூன் ரொட்டிதுண்டு-இரண்டு மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள்-அரைடீஸ்பூன் பச்சைமிளகாய்-இரண்டு கொத்தமல்லி-ஒரு கட்டு கரம்மசாலா-ஒருடீஸ்பூன் உப்புத்தூள்-இரண்டு டீஸ்பூன் முட்டை-இரண்டு ரொட்டித்தூள்-ஒரு கப் எண்ணெய்-இரண்டு கப் செய்முறை: 1.முதலில் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து வேகவைத்து தோலை நீக்கிவிட்டு கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். 2.பிறகு ரொட்டியை தண்ணீரில் முக்கிஎடுத்து நன்கு பிழிந்துகொண்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 3.ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காயவைத்து முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு இஞ்சிபூண்டு பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். 4.பிறகு ஒரு கப் தண்ணீரை சேர்த்து வேகவைக்கவும். அதில்தக்காளி,மிளகாய்த்தூள்,மஞ்சத்தூள்,கரம்மசாலாவை போட்டு நன்கு கிளறவும். 5.பிறகு தேங்காய்,ரொட்டித்துண்டு,கொத்தமல்லியைப்போட்டு பச்சைவாசனை நீங்குவரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைத்து நன்கு ஆறவைக்கவும். 6.பிறகு மசித்த உருளைகிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி பிறகு தட்டையாக செய்யாவும். 7.அதில் அடித்துவைதுள்ள முட்டையில் தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 8.கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|