|
||||||||
ஐந்தாம் திருமுறை-23 |
||||||||
5.023.திருநின்றியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர்.
தேவியார் - உலகநாயகியம்மை.
1295 கொடுங்கண் வெண்தலை கொண்டு குவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே. 5.023.1
நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில், கடிய கையுடைய கூற்றுவனை உதைத்திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர், கொடிய கண்களை உடைய. வெள்ளிய கபாலம் கொண்டு, குறைகொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர்.
1296 வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளற் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே. 5.023.2
வேதங்களை ஓதுபவரும், விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய (அர்த்தநாரீசுவரரும்) எமது கள்வரே! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ? உரைத்தருள்வீராக.
1297 புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 5.023.3
புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித்தோலின்மேல் சுற்றியவரும், திருநீற்றைப் பூசிய மேனியினரும், சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை, வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா.
1298 பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் மல்கி யயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே. 5.023.4
பறையின் ஓசையும், தெய்வப்பாடல்களின் ஓசையும், வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.
1299 சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இணைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே. 5.023.5
நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில். பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள்! இத்தன்மை உடையவன், என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை?
1300 உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே. 5.023.6
உரைப்பக் கேட்பீராக; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை, வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில்மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின், அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர்.
1301 கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு
இன்றி ஏறல னாலிது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே. 5.023.7
திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும், வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன், கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ?
1302 நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயி லெய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னால்தொழு வார்வினை யோயுமே. 5.023.8
நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும். நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும், நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர்இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும்.
1303 அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. 5.023.9
நெஞ்சமே! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து. தேவர்கள் தொழ, தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை. நீ, அஞ்சியாயினும். அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக.
1304 எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நௌய வூன்றவல் லானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே. 5.023.10
எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நௌயுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும்.
திருச்சிற்றம்பலம்
5.023.திருநின்றியூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர். தேவியார் - உலகநாயகியம்மை.
1295 கொடுங்கண் வெண்தலை கொண்டு குவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர் நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க் கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே. 5.023.1
நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில், கடிய கையுடைய கூற்றுவனை உதைத்திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர், கொடிய கண்களை உடைய. வெள்ளிய கபாலம் கொண்டு, குறைகொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர்.
1296 வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை நீதி யேகொளற் பாலது நின்றியூர் வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க் காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே. 5.023.2
வேதங்களை ஓதுபவரும், விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய (அர்த்தநாரீசுவரரும்) எமது கள்வரே! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ? உரைத்தருள்வீராக.
1297 புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச் சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர் நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர் பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 5.023.3
புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித்தோலின்மேல் சுற்றியவரும், திருநீற்றைப் பூசிய மேனியினரும், சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை, வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா.
1298 பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் மல்கி யயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே. 5.023.4
பறையின் ஓசையும், தெய்வப்பாடல்களின் ஓசையும், வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.
1299 சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள் இணைய னென்றென்று மேசுவ தென்கொலோ நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப் பனையின் ஈருரி போர்த்த பரமரே. 5.023.5
நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில். பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள்! இத்தன்மை உடையவன், என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை?
1300 உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர் உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில் திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே. 5.023.6
உரைப்பக் கேட்பீராக; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை, வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில்மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின், அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர்.
1301 கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு இன்றி ஏறல னாலிது என்கொலோ நின்றி யூர்பதி யாக நிலாயவன் வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே. 5.023.7
திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும், வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன், கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ?
1302 நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர் கொலைவி லாலெயி லெய்த கொடியவன் நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர் உரையி னால்தொழு வார்வினை யோயுமே. 5.023.8
நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும். நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும், நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர்இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும்.
1303 அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும் நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. 5.023.9
நெஞ்சமே! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து. தேவர்கள் தொழ, தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை. நீ, அஞ்சியாயினும். அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக.
1304 எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை களியி னாற்கயி லாய மெடுத்தவன் நௌய வூன்றவல் லானமர் நின்றியூர் அளியி னாற்றொழு வார்வினை யல்குமே. 5.023.10
எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நௌயுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|