|
||||||||
ஐந்தாம் திருமுறை-71 |
||||||||
5.071.திருவிசயமங்கை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசயநாதேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
1780 குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. 5.071.1
விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான், தம் அங்கையில் தருப்பையும், மலர்களும் கொண்ட அழகிய, குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான்.
1781 ஆதி நாத னடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. 5.071.2
ஆதிக்கண் தோன்றியநாதனும், வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும், புலித்தோலாடையனும், வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான்; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை.
1782 கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. 5.071.3
கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும்,விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன், கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது.
1783 திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே. 5.071.4
விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான், திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன்; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன்.
1784 பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே. 5.071.5
ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே, அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான்.
1785 கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை
எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே. 5.071.6
முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும், மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசயமங்கையின் அருட்செல்வ! போற்றி! என்று உரைப்பார்க்குத் தென்திசையில் ஏறுதலும், இனிய புகழும் உளதாகும்.
1786 கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே. 5.071.7
கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும், வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும்.
1787 பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே. 5.071.8
பாண்டுவின் மகனாகிய பார்த்தன் (அருச்சுனன்) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசயமங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன்.
1788 வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே. 5.071.9
மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்; காண்பீராக.
1789 இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே. 5.071.10
இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும், வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர்.
திருச்சிற்றம்பலம்
5.071.திருவிசயமங்கை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - விசயநாதேசுவரர். தேவியார் - மங்கைநாயகியம்மை.
1780 குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. 5.071.1
விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான், தம் அங்கையில் தருப்பையும், மலர்களும் கொண்ட அழகிய, குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான்.
1781 ஆதி நாத னடல்விடை மேலமர் பூத நாதன் புலியத ளாடையன் வேத நாதன் விசயமங் கையுளான் பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. 5.071.2
ஆதிக்கண் தோன்றியநாதனும், வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும், புலித்தோலாடையனும், வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான்; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை.
1782 கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன் கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. 5.071.3
கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும்,விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன், கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது.
1783 திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான் விசைய மங்கை விருத்தன் புறத்தடி விசையின் மங்கி விழுந்தனன் காலனே. 5.071.4
விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான், திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன்; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன்.
1784 பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள் கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே. 5.071.5
ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே, அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான்.
1785 கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே. 5.071.6
முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும், மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசயமங்கையின் அருட்செல்வ! போற்றி! என்று உரைப்பார்க்குத் தென்திசையில் ஏறுதலும், இனிய புகழும் உளதாகும்.
1786 கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே. 5.071.7
கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும், வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும்.
1787 பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால் காண்ட லேகருத் தாகி யிருப்பனே. 5.071.8
பாண்டுவின் மகனாகிய பார்த்தன் (அருச்சுனன்) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசயமங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன்.
1788 வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே. 5.071.9
மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்; காண்பீராக.
1789 இலங்கை வேந்த னிருபது தோளிற விலங்கல் சேர்விர லான்விச யமங்கை வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே. 5.071.10
இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும், வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|