|
||||||||
ஐந்தாம் திருமுறை-46 |
||||||||
5.046.திருப்புகலூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1527 துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே. 5.046.1
கோவண ஆடையையும், வெண்ணீற்றுப் பொடியணிந்த மேனியையும், பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர்?
1528 இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே. 5.046.2
இப்பெண்,நெட்டுயிர்க்கும் பாம்பையும், அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும், நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள்.
1529 ஊச லாம்அர வல்குவென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்பு லூரர்க்கே. 5.046.3
அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர். ஆதலால், 'ஓ, மகளே ! சொல்வாயாக ! முறையோ ' என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக.
1530 மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே. 5.046.4
மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும், தன்னை நிகர்க்கு மொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன்.
1531 விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே. 5.046.5
விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை, நாமங்கள் கூறியும், திருவைந்ழுத்தால் தியானித்தும், கண்ணினாற் காழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிரும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம்.
1532 அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே. 5.046.6
புகலூர்த் தலத்து இறைவர், தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர்; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர்; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர்.
1533 தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வனலன் தண்புக லூரனே. 5.046.7
தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர்; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர்; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான்.
1534 பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே. 5.046.8
புகலூர்த்தலத்து இறைவர், பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர்; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர்.
1535 பொன்னொத் தனிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானு மறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே. 5.046.9
பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும், அளைவீசும் கடைலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப்படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை "என் தந்தையே" என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும்.
1536 மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்பு லூரைத் தொழுமினே. 5.046.10
மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும், முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் எத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
திருச்சிற்றம்பலம்
5.046.திருப்புகலூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர். தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1527 துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன் என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே. 5.046.1
கோவண ஆடையையும், வெண்ணீற்றுப் பொடியணிந்த மேனியையும், பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர்?
1528 இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும் நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப் புரைப்பி லாத பொழிற்புக லூரரை உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே. 5.046.2
இப்பெண்,நெட்டுயிர்க்கும் பாம்பையும், அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும், நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள்.
1529 ஊச லாம்அர வல்குவென் சோர்குழல் ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர் ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று பூசல் நாமிடு தும்பு லூரர்க்கே. 5.046.3
அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர். ஆதலால், 'ஓ, மகளே ! சொல்வாயாக ! முறையோ ' என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக.
1530 மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத் தன்னை நேரொப் பிலாத தலைவனைப் புன்னைக் கானற் பொழிற்புக லூரனை என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே. 5.046.4
மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும், தன்னை நிகர்க்கு மொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன்.
1531 விண்ணி னார்மதி சூடிய வேந்தனை எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங் கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில் புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே. 5.046.5
விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை, நாமங்கள் கூறியும், திருவைந்ழுத்தால் தியானித்தும், கண்ணினாற் காழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிரும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம்.
1532 அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு பண்டு நான்மறை யோதிய பாடலன் தொண்ட ராகித் தொழுது மதிப்பவர் புண்ட ரீகத்து ளார்புக லூரரே. 5.046.6
புகலூர்த் தலத்து இறைவர், தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர்; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர்; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர்.
1533 தத்து வந்தலை கண்டறி வாரிலைத் தத்து வந்தலை கண்டவர் கண்டிலர் தத்து வந்தலை நின்றவர்க் கல்லது தத்து வனலன் தண்புக லூரனே. 5.046.7
தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர்; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர்; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான்.
1534 பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர் கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர் வருங்கை யானை மதகளி றஞ்சினைப் பொருங்கை யானைகண் டீர்புக லூரரே. 5.046.8
புகலூர்த்தலத்து இறைவர், பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர்; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர்.
1535 பொன்னொத் தனிறத் தானும் பொருகடல் தன்னொத் தநிறத் தானு மறிகிலாப் புன்னைத் தாது பொழிற்புக லூரரை என்னத் தாவென என்னிடர் தீருமே. 5.046.9
பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும், அளைவீசும் கடைலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப்படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை "என் தந்தையே" என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும்.
1536 மத்த னாய்மதி யாது மலைதனை எத்தி னான்திரள் தோண்முடி பத்திற ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும் பொத்தி னான்பு லூரைத் தொழுமினே. 5.046.10
மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும், முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் எத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|