|
||||||||
ஐந்தாம் திருமுறை-32 |
||||||||
5.032.திருப்பூந்துருத்தி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்.
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
1386 கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.1
பல கொடிகள் எடுக்கப்பெற்றதும், திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும், மணமிக்க பூம்பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1387 ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.2
தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேடவடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும், பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1388 மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.3
உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும், சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும், பூதங்களுக்குத் தலைவனும், பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1389 மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.4
முப்பெருங்கடவுளராயும், அவருள் முதல்வனாயும், இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும், கடிய காலனைக் காய்ந்தவனாயும், அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1390 செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.5
நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும், பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும், செம்பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1391 வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.6
வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம்.
1392 ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.7
ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று, பெரிய பாம்பும், மதியும், கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1393 அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.8
அதிரர், தேவர் இயக்கர், விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும், நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும், சரியை முதலிவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக்கீழ் நாம் இருக்கப் பெற்றோம்.
1394 செதுக றாமனத் தார்புறங் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.9
குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம்.
1395 துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.10
தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும், அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும், கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
திருச்சிற்றம்பலம்
5.032.திருப்பூந்துருத்தி திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புஷ்பவனநாதர். தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
1386 கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக் கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார் பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர் அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.1
பல கொடிகள் எடுக்கப்பெற்றதும், திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும், மணமிக்க பூம்பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1387 ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் பார்த்த னோடு படைதொடு மாகிலும் பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த் தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.2
தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேடவடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும், பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1388 மாதி னைமதித் தானொரு பாகமாக் காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப் பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க் காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.3
உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும், சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும், பூதங்களுக்குத் தலைவனும், பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1389 மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம் காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன் பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த் தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.4
முப்பெருங்கடவுளராயும், அவருள் முதல்வனாயும், இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும், கடிய காலனைக் காய்ந்தவனாயும், அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1390 செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில் உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும் பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர் நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.5
நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும், பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும், செம்பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1391 வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச் செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.6
வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம்.
1392 ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும் பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த் திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.7
ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று, பெரிய பாம்பும், மதியும், கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1393 அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.8
அதிரர், தேவர் இயக்கர், விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும், நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும், சரியை முதலிவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக்கீழ் நாம் இருக்கப் பெற்றோம்.
1394 செதுக றாமனத் தார்புறங் கூறினும் கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும் பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க் கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.9
குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம்.
1395 துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப் பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம் பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப் படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 5.032.10
தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும், அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும், கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|