|
||||||||
பாசாண துவளை - வெள்ளை பாசாணம் மற்றும் கௌரி பாசாணத்தின் மருத்துவ குணங்கள்.(Paasaana thuvalai-White Paasanam and Gowri paasanam medical properties.) |
||||||||
தேவையானவை:
வெள்ளை பாசாணம் = 50 கிராம் கௌரி பாசாணம் = 50 குதிரைப்பல் பாசாணம் =50 கிராம் கெந்தகம் = 50 கிராம் தேங்காய் எண்ணெய் = 500 மி.லி வேப்ப எண்ணெய்= 500 மி.லி சிற்றாமணக்கு எண்ணெய் = 500 மி.லி பச்சைக் கற்பூரம் = 5 கிராம் துருசு = 50 கிராம் தாளகம் = 50 கிராம் சாதிலிங்கம் = 50 கிராம் கொடிவேலி வேர் = 150 கிராம் தும்பை வேர் = 150 கிராம் சிவப்பு அலரி வேர் = 150 கிராம் நல்லெண்ணெய் = 500 மி.லி
செய்முறை:
வெள்ளைப் பாசாணம், குதிரைப் பல், கௌரி ஆகியவற்றை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் முள்ளுக் கீரை சாற்றில் கரைத்து அடை தட்டி ஒரு அகலில் வைத்து மூடி எழு சீலை மண் செய்து இரண்டு சதுர அடி அகலம் மூன்று அடி உயரம் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
கெந்தகம், துருசு, தாளகம் இவைகளை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் தும்பைச் சாற்றால் அரைத்து முன்போல் புடமிட்டு எடுத்து 250 கிராம் எடை கருந்துளசி இலையை வைத்து மருந்துடன் அரைத்து முன்போல் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
சாதி லிங்கத்தையும் கொடிவேலி வேரையும் நன்றாக அரைத்து வில்லை தட்டி, முன்போல் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
தும்பை வேரையும் சிகப்பு அலரி வேரையும் அரைத்து உருண்டை செய்து கொள்ளவும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை ஒரு மண் பானையில் ஊற்றி தும்பை வோ் சிவப்பு அலரி வேரை சேர்த்து கரைத்த உருண்டையை போட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்துக் கொண்டு மற்ற மருந்துகளைப் போட்டு மூடி மெல்லிய தீயாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் எரித்து மூடி வைத்திருந்து மூன்று நாட்கள் இப்படி எரித்து பானையை இறக்கி வைக்கவும்.
குறிப்பு: எரிக்கும் போது பானைக்கு 3 அடி தூரம் எட்டி இருந்து எரிக்கவும்.பானையிலிருந்து கிளம்பும் ஆவி, புகை, இவைகள் எரிப்பவர் முகத்தில் படக் கூடாது.பானையை திறந்து முகரக்கூடாது. வீட்டிற்கு 500 மீ தூரத்தில் பானைய வைத்து எரிக்க வேண்டும்.
உபயோகிக்கும் முறை: பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் 50 மி.லிட்டர் மருந்தை இரும்புக் கரண்டி எடுத்து மயிலிறகால் தடவி, கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து நோயாளியை தலை நீங்கலாக மற்ற பகுதியை போர்த்தி கயிற்றுக் கட்டிலின் கீழ் கரி நெருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையைப் போட்டு புகையுண்டாக்கவும் புகை வெளியில் போகாத அளவுக்கு போர்வை தரையில் தவழ வேண்டும். 15 நிமிடங்களில் நோயாளியை வெந்நீரில் தலை முழுக்காட்டவேண்டும். இலுப்பைக் கட்டியை அரைத்து உடம்பில் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏழு முறை, இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏழு முறைகள் வீதமும், 4 நாளைக்கு ஒரு முறை 7 முறைகள் வீதமும், 5 நாளைக்கு ஒரு முறை 7 முறைகள் வீதமும், 7 நாளைக்கு ஒரு முறை 3 முறைகள் வீதமும் குளிப்பாட்டவேண்டும்.
தீரும் நோய்கள்: பக்கவாதம், மூட்டு வலிகள், சூலை பிடிப்பு ஆகிய நோய்கள் குறையும்.
குறிப்பு: நோயாளிக்கு துவளை முழுக்காட்டும் நாட்களில் உடம்பில் எரிச்சல் ஏற்பட்டால் உணவில் பசு நெய், பசும் பால் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசும் மோரும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உடம்பின் எரிச்சல் நீங்காதிருந்தால் துவளை 500 மி.லி பசு நெய்யை கொதிக்க வைத்துக் கலந்துக் கொள்ள வேண்டும். மலக்கட்டு ஏற்பட்டால் காலை உணவில் முளைக்கீரை சேர்த்துச் சாப்பிடவேண்டும். மூன்று வேளை உணவிலும் பசு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பேதி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்பட்டால் பேதியால் களைப்பும், சோர்வும் ஏற்பட்டால் உணவுக்குப் பின் 2 தேக்கரண்டி தேனில் 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து கொடுக்கவேண்டும்.
தலைவலி அல்லது மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளை முழுக்கை 7 நாட்கள் நிறுத்தித் தொடரவேண்டும். மீண்டும் தலைவலி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளையைப் பயன்படுத்த வேண்டாம்.
தேவையானவை:
வெள்ளை பாசாணம் = 50 கிராம்
கௌரி பாசாணம் = 50
குதிரைப்பல் பாசாணம் =50 கிராம்
கெந்தகம் = 50 கிராம்
தேங்காய் எண்ணெய் = 500 மி.லி
வேப்ப எண்ணெய்= 500 மி.லி
சிற்றாமணக்கு எண்ணெய் = 500 மி.லி
பச்சைக் கற்பூரம் = 5 கிராம்
துருசு = 50 கிராம்
தாளகம் = 50 கிராம்
சாதிலிங்கம் = 50 கிராம்
கொடிவேலி வேர் = 150 கிராம்
தும்பை வேர் = 150 கிராம்
சிவப்பு அலரி வேர் = 150 கிராம்
நல்லெண்ணெய் = 500 மி.லி
செய்முறை:
வெள்ளைப் பாசாணம், குதிரைப் பல், கௌரி ஆகியவற்றை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் முள்ளுக் கீரை
சாற்றில் கரைத்து அடை தட்டி ஒரு அகலில் வைத்து மூடி எழு சீலை மண் செய்து இரண்டு சதுர அடி அகலம்
மூன்று அடி உயரம் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
கெந்தகம், துருசு, தாளகம் இவைகளை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் தும்பைச் சாற்றால் அரைத்து முன்போல்
புடமிட்டு எடுத்து 250 கிராம் எடை கருந்துளசி இலையை வைத்து மருந்துடன் அரைத்து முன்போல் புடம் போட்டு
எடுத்துக்கொள்ளவும்.
சாதி லிங்கத்தையும் கொடிவேலி வேரையும் நன்றாக அரைத்து வில்லை தட்டி, முன்போல் புடம் போட்டு
எடுத்துக்கொள்ளவும்.
தும்பை வேரையும் சிகப்பு அலரி வேரையும் அரைத்து உருண்டை செய்து கொள்ளவும். நல்லெண்ணெய், தேங்காய்
எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை ஒரு மண் பானையில் ஊற்றி தும்பை வோ் சிவப்பு அலரி வேரை
சேர்த்து கரைத்த உருண்டையை போட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்துக் கொண்டு மற்ற மருந்துகளைப்
போட்டு மூடி மெல்லிய தீயாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் எரித்து மூடி வைத்திருந்து மூன்று நாட்கள் இப்படி
எரித்து பானையை இறக்கி வைக்கவும்.
குறிப்பு
எரிக்கும் போது பானைக்கு 3 அடி தூரம் எட்டி இருந்து எரிக்கவும்.
பானையிலிருந்து கிளம்பும் ஆவி, புகை, இவைகள் எரிப்பவர் முகத்தில் படக் கூடாது.
பானையை திறந்து முகரக்கூடாது. வீட்டிற்கு 500 மீ தூரத்தில் பானைய வைத்து எரிக்க வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் 50 மி.லிட்டர் மருந்தை இரும்புக் கரண்டி எடுத்து
மயிலிறகால் தடவி, கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து நோயாளியை தலை நீங்கலாக மற்ற பகுதியை போர்த்தி
கயிற்றுக் கட்டிலின் கீழ் கரி நெருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையைப்
போட்டு புகையுண்டாக்கவும் புகை வெளியில் போகாத அளவுக்கு போர்வை தரையில் தவழ வேண்டும். 15
நிமிடங்களில் நோயாளியை வெந்நீரில் தலை முழுக்காட்டவேண்டும். இலுப்பைக் கட்டியை அரைத்து உடம்பில்
தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏழு முறை, இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏழு முறைகள் வீதமும், 4 நாளைக்கு ஒரு
முறை 7 முறைகள் வீதமும், 5 நாளைக்கு ஒரு முறை 7 முறைகள் வீதமும், 7 நாளைக்கு ஒரு முறை 3 முறைகள்
வீதமும் குளிப்பாட்டவேண்டும்.
தீரும் நோய்கள்:
பக்கவாதம், மூட்டு வலிகள், சூலை பிடிப்பு ஆகிய நோய்கள் குறையும்.
குறிப்பு
நோயாளிக்கு துவளை முழுக்காட்டும் நாட்களில் உடம்பில் எரிச்சல் ஏற்பட்டால் உணவில் பசு நெய், பசும் பால்
சேர்த்துக் கொள்ளவேண்டும். பசும் மோரும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உடம்பின் எரிச்சல் நீங்காதிருந்தால் துவளை 500 மி.லி பசு நெய்யை கொதிக்க வைத்துக் கலந்துக்
கொள்ளவேண்டும். மலக்கட்டு ஏற்பட்டால் காலை உணவில் முளைக்கீரை சேர்த்துச் சாப்பிடவேண்டும். மூன்று
வேளை உணவிலும் பசு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பேதி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்பட்டால்
பேதியால் களைப்பும், சோர்வும் ஏற்பட்டால் உணவுக்குப் பின் 2 தேக்கரண்டி தேனில் 1 தேக்கரண்டி எலுமிச்சம்
பழச்சாற்றைக் கலந்து கொடுக்கவேண்டும்.
தலைவலி அல்லது மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளை முழுக்கை 7 நாட்கள் நிறுத்தித் தொடரவேண்டும்.
மீண்டும் தலைவலி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளையைப் பயன்படுத்த வேண்டாம்.
தேவையானவை:
வெள்ளை பாசாணம் = 50 கிராம்
கௌரி பாசாணம் = 50
குதிரைப்பல் பாசாணம் =50 கிராம்
கெந்தகம் = 50 கிராம்
தேங்காய் எண்ணெய் = 500 மி.லி
வேப்ப எண்ணெய்= 500 மி.லி
சிற்றாமணக்கு எண்ணெய் = 500 மி.லி
பச்சைக் கற்பூரம் = 5 கிராம்
துருசு = 50 கிராம்
தாளகம் = 50 கிராம்
சாதிலிங்கம் = 50 கிராம்
கொடிவேலி வேர் = 150 கிராம்
தும்பை வேர் = 150 கிராம்
சிவப்பு அலரி வேர் = 150 கிராம்
நல்லெண்ணெய் = 500 மி.லி
செய்முறை:
வெள்ளைப் பாசாணம், குதிரைப் பல், கௌரி ஆகியவற்றை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் முள்ளுக் கீரை
சாற்றில் கரைத்து அடை தட்டி ஒரு அகலில் வைத்து மூடி எழு சீலை மண் செய்து இரண்டு சதுர அடி அகலம்
மூன்று அடி உயரம் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
கெந்தகம், துருசு, தாளகம் இவைகளை கல் உரலில் இடித்து 500 மி.லிட்டர் தும்பைச் சாற்றால் அரைத்து முன்போல்
புடமிட்டு எடுத்து 250 கிராம் எடை கருந்துளசி இலையை வைத்து மருந்துடன் அரைத்து முன்போல் புடம் போட்டு
எடுத்துக்கொள்ளவும்.
சாதி லிங்கத்தையும் கொடிவேலி வேரையும் நன்றாக அரைத்து வில்லை தட்டி, முன்போல் புடம் போட்டு
எடுத்துக்கொள்ளவும்.
தும்பை வேரையும் சிகப்பு அலரி வேரையும் அரைத்து உருண்டை செய்து கொள்ளவும். நல்லெண்ணெய், தேங்காய்
எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை ஒரு மண் பானையில் ஊற்றி தும்பை வோ் சிவப்பு அலரி வேரை
சேர்த்து கரைத்த உருண்டையை போட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்துக் கொண்டு மற்ற மருந்துகளைப்
போட்டு மூடி மெல்லிய தீயாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் எரித்து மூடி வைத்திருந்து மூன்று நாட்கள் இப்படி
எரித்து பானையை இறக்கி வைக்கவும்.
குறிப்பு
எரிக்கும் போது பானைக்கு 3 அடி தூரம் எட்டி இருந்து எரிக்கவும்.
பானையிலிருந்து கிளம்பும் ஆவி, புகை, இவைகள் எரிப்பவர் முகத்தில் படக் கூடாது.
பானையை திறந்து முகரக்கூடாது. வீட்டிற்கு 500 மீ தூரத்தில் பானைய வைத்து எரிக்க வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் 50 மி.லிட்டர் மருந்தை இரும்புக் கரண்டி எடுத்து
மயிலிறகால் தடவி, கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து நோயாளியை தலை நீங்கலாக மற்ற பகுதியை போர்த்தி
கயிற்றுக் கட்டிலின் கீழ் கரி நெருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையைப்
போட்டு புகையுண்டாக்கவும் புகை வெளியில் போகாத அளவுக்கு போர்வை தரையில் தவழ வேண்டும். 15
நிமிடங்களில் நோயாளியை வெந்நீரில் தலை முழுக்காட்டவேண்டும். இலுப்பைக் கட்டியை அரைத்து உடம்பில்
தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏழு முறை, இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏழு முறைகள் வீதமும், 4 நாளைக்கு ஒரு
முறை 7 முறைகள் வீதமும், 5 நாளைக்கு ஒரு முறை 7 முறைகள் வீதமும், 7 நாளைக்கு ஒரு முறை 3 முறைகள்
வீதமும் குளிப்பாட்டவேண்டும்.
தீரும் நோய்கள்:
பக்கவாதம், மூட்டு வலிகள், சூலை பிடிப்பு ஆகிய நோய்கள் குறையும்.
குறிப்பு
நோயாளிக்கு துவளை முழுக்காட்டும் நாட்களில் உடம்பில் எரிச்சல் ஏற்பட்டால் உணவில் பசு நெய், பசும் பால்
சேர்த்துக் கொள்ளவேண்டும். பசும் மோரும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உடம்பின் எரிச்சல் நீங்காதிருந்தால் துவளை 500 மி.லி பசு நெய்யை கொதிக்க வைத்துக் கலந்துக்
கொள்ளவேண்டும். மலக்கட்டு ஏற்பட்டால் காலை உணவில் முளைக்கீரை சேர்த்துச் சாப்பிடவேண்டும். மூன்று
வேளை உணவிலும் பசு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பேதி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்பட்டால்
பேதியால் களைப்பும், சோர்வும் ஏற்பட்டால் உணவுக்குப் பின் 2 தேக்கரண்டி தேனில் 1 தேக்கரண்டி எலுமிச்சம்
பழச்சாற்றைக் கலந்து கொடுக்கவேண்டும்.
தலைவலி அல்லது மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளை முழுக்கை 7 நாட்கள் நிறுத்தித் தொடரவேண்டும்.
மீண்டும் தலைவலி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டால் துவளையைப் பயன்படுத்த வேண்டாம்.
|
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|