|
||||||||
ஆறாம் திருமுறை-22 |
||||||||
6.022.திருநாகைக்காரோணம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
2306 பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.1
உலகத்தார் போற்றும் திருப்பழனம், சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய், எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரியகடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான்.
2307 விண்ணோர் பெருமானை வீரட் டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் போடி யானைப்
பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.2
விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய், வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண்ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம்.
2308 சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக் காட்டெந்தை சிவலோகனை
மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் தன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.3
சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு, வேதம் முழங்கும் திருவாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய், எந்தையாகிய சிவலோகனாய், ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2309 அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.4
அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர், பாச்சிலாச்சிராமம்,ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய், மூவுலகும் தான்பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2310 நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் தன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.5
நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய், ஞானப் பெருங்கடலாய், நல்லூரை விரும்பியவனாய், மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய், மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2311 புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கை
யவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.6
வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய், பூம்புகாரில் உள்ள கற்பகமாய், அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய், தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2312 பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோகனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.7
பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய், வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய், அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2313 வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
எண்டிசையும் எரியாட வல்லான் தன்னை
யேகம்பம் மேயானை யெம்மான் தன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.8
கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய், வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய், ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2314 சொல்லார்ந்த் சோற்றுத் துறையான் தன்னைத்
தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்
பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.9
வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை, மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய், ஒளியுடையவனாய், வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2315 மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்
கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.10
நெஞ்சே! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல், யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள்செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது.
2316 நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச்
செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக்
கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
6.022.11
திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய், பாம்புரத்தை விரும்பியவனாய், பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய், முடைநாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய், நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
6.022.திருநாகைக்காரோணம் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். தேவியார் - நீலாயதாட்சியம்மை.
2306 பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச் சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப் பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக் காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.1
உலகத்தார் போற்றும் திருப்பழனம், சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய், எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரியகடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான்.
2307 விண்ணோர் பெருமானை வீரட் டனை வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப் பெண்ணானை ஆணானைப் போடி யானைப் பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை அண்ணா மலையானை ஆனைந் தாடும் அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக் கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.2
விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய், வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண்ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம்.
2308 சிறையார் வரிவண்டு தேனே பாடுந் திருமறைக் காட்டெந்தை சிவலோகனை மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற் பற்றியாள் கின்ற பரமன் தன்னைக் கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.3
சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு, வேதம் முழங்கும் திருவாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய், எந்தையாகிய சிவலோகனாய், ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2309 அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும் முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச் சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக் கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.4
அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர், பாச்சிலாச்சிராமம்,ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய், மூவுலகும் தான்பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2310 நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னை ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப் பன்மையே பேசும் படிறன் தன்னை மடையிடையே வாளை யுகளும் பொய்கை மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக் கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.5
நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய், ஞானப் பெருங்கடலாய், நல்லூரை விரும்பியவனாய், மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய், மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2311 புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனைப் பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கை யவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே ஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக் கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.6
வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய், பூம்புகாரில் உள்ள கற்பகமாய், அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய், தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2312 பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப் புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச் சின்மணிய மூவிலைய சூலத் தானைத் தென்சிராப் பள்ளிச் சிவலோகனை மன்மணியை வான்சுடலை யூராப் பேணி வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக் கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.7
பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய், வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய், அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2313 வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப் புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை எண்டிசையும் எரியாட வல்லான் தன்னை யேகம்பம் மேயானை யெம்மான் தன்னைக் கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.8
கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய், வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய், ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2314 சொல்லார்ந்த் சோற்றுத் துறையான் தன்னைத் தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை வில்லானை மீயச்சூர் மேவி னானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப் பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக் கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.9
வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை, மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய், ஒளியுடையவனாய், வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
2315 மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும் மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும் சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும் மெய்யென்று கருதாதே போத நெஞ்சே பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால் கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.10
நெஞ்சே! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல், யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள்செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது.
2316 நெடியானும் மலரவனும் நேடி யாங்கே நேருருவங் காணாமே சென்று நின்ற படியானைப் பாம்புரமே காத லானைப் பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச் செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்று சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக் கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.11
திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய், பாம்புரத்தை விரும்பியவனாய், பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய், முடைநாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய், நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|