|
||||||||
ஐந்தாம் திருமுறை-31 |
||||||||
5.031.திருவானைக்கா
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
1376 கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே. 5.031.1
தௌவற்ற சிலர், உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத் தேனை உண்ணாதவராயுள்ளனர்; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணே சுமந்து திரிவர்!
1377 திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.2
மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு, அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன்.
1378 துன்ப மின்றித் துயரின்றி யென்று நீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.3
என் பொன்போல்வான் என்றும், ஈசன் என்றும், இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால், துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின். இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக.
1379 நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.4
நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும், "வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக" என்று கைதொழுவார்களுக்கும், ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன்.
1380 வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.5
ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் "அஞ்சேல்" என்று அருள்பவன் அப்பெருமானேயாவன்.
1381 நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.6
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
1382 ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே. 5.031.7
ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன்.
1383 உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்தநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.8
உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே! தௌவடைவீர்களாக; தீவினையைச் சேராமல் விரைந்து, இருள் அறுத்து நின்று "ஈசனே" என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன்.
1384 நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.9
அறியாமை உடைய நெஞ்சமே! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம், நலம், சுற்றம், பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று, ஆனைக்காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக.
1385 ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.10
ஆனைக்காவின் அண்ணல், அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர்.
திருச்சிற்றம்பலம்
5.031.திருவானைக்கா திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சம்புகேசுவரர். தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
1376 கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள் ஆனைக் காவிலம் மானை யணைகிலார் ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே. 5.031.1
தௌவற்ற சிலர், உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத் தேனை உண்ணாதவராயுள்ளனர்; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணே சுமந்து திரிவர்!
1377 திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து பருகி யூறலைப் பற்றிப் பதமறிந் துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.2
மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு, அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன்.
1378 துன்ப மின்றித் துயரின்றி யென்று நீர் இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின் என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க் கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.3
என் பொன்போல்வான் என்றும், ஈசன் என்றும், இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால், துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின். இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக.
1379 நாவால்நன்று நறுமலர்ச் சேவடி ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம் ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.4
நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும், "வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக" என்று கைதொழுவார்களுக்கும், ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன்.
1380 வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும் வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம் அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.5
ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் "அஞ்சேல்" என்று அருள்பவன் அப்பெருமானேயாவன்.
1381 நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள் தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.6
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
1382 ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங் கழுக ரிப்பதன் முன்னங் கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவிநின் றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே. 5.031.7
ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன்.
1383 உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர் தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே இருள றுத்தநின் றீசனென் பார்க்கெலாம் அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.8
உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே! தௌவடைவீர்களாக; தீவினையைச் சேராமல் விரைந்து, இருள் அறுத்து நின்று "ஈசனே" என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன்.
1384 நேச மாகி நினைமட நெஞ்சமே நாச மாய குலநலஞ் சுற்றங்கள் பாச மற்றுப் பராபர வானந்த ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.9
அறியாமை உடைய நெஞ்சமே! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம், நலம், சுற்றம், பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று, ஆனைக்காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக.
1385 ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை கீதங் கின்னரம் பாடக் கெழுவினான் பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர் ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே. 5.031.10
ஆனைக்காவின் அண்ணல், அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|