|
||||||||
ஆறாம் திருமுறை-44 |
||||||||
6.044.திருச்சோற்றுத்துறை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
2523 மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.1
காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே! ஏழுலகும் தாங்குகின்றவனே! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்குகின்றவனே! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2524 தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.2
உலகத் தலைவனே! தத்துவனே! அடியார்க்கு அமுதே! நிலைபேறுடையவனே! ஒப்பற்றவனே! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2525 முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.3
வெள்ளிய பிறை மதி சூடியே! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே! உலகைப் பாதுகாக்கும் சுடரே! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2526 கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்க ளூழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.4
பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே! பல ஊழிகளையும் கண்ட, காலம் கடந்த பெருமானே! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள்செய்பவனே! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! யான் உன் அடைக்கலம்.
2527 நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.5
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நால் வேத வடிவினனே! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே! கச்சி ஏகம்பனே! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! அடியவர்களுக்குக்கிட்டுதற்கரிய அமுதமானவனே! காளையை இவரும் பொன்னார் மேனியனே! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2528 ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.6
உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2529 வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.7
தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே! கொடிய மும்மதில்களை அழித்தவனே! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2530 தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.8
சுதந்திரனாய், எல்லா உலகங்களும் தானே ஆனவனாய், மெய்ப்பொருளாய், அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய், என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2531 எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம்
ஆதியும் அந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.9
எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய், முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று, பின் அவற்றை அழித்தவனே! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறுபட்டவனே! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2532 மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
6.044.10
நீலகண்டனே! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்!
திருச்சிற்றம்பலம்
6.044.திருச்சோற்றுத்துறை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தொலையாச்செல்வர். தேவியார் - ஒப்பிலாம்பிகை.
2523 மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே இன்பனாய்த் துன்பங் களைகின் றானே காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.1
காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே! ஏழுலகும் தாங்குகின்றவனே! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்குகின்றவனே! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2524 தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.2
உலகத் தலைவனே! தத்துவனே! அடியார்க்கு அமுதே! நிலைபேறுடையவனே! ஒப்பற்றவனே! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2525 முற்றாத பான்மதியஞ் சூடி னானே முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே உற்றாரென் றொருவரையு மில்லா தானே உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங் கற்றானே யெல்லாக் கலைஞா னமுங் கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச் செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.3
வெள்ளிய பிறை மதி சூடியே! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே! உலகைப் பாதுகாக்கும் சுடரே! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2526 கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே காலங்க ளூழிகண் டிருக்கின் றானே விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே வேதனாய் வேதம் விரித்திட் டானே எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.4
பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே! பல ஊழிகளையும் கண்ட, காலம் கடந்த பெருமானே! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள்செய்பவனே! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! யான் உன் அடைக்கலம்.
2527 நம்பனே நான்மறைக ளாயி னானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா கம்பனே கச்சிமா நகரு ளானே கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே அளவிலாப் பெருமை யானே அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ் செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.5
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நால் வேத வடிவினனே! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே! கச்சி ஏகம்பனே! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! அடியவர்களுக்குக்கிட்டுதற்கரிய அமுதமானவனே! காளையை இவரும் பொன்னார் மேனியனே! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2528 ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடுமூ விலையதோர் சூல மேந்திப் பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.6
உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே! எல்லையற்ற பெருமை உடையவனே! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2529 வானவனாய் வண்மை மனத்தி னானே மாமணிசேர் வானோர் பெருமான் நீயே கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே கடிய அரணங்கள் மூன்றட் டானே தானவனாய்த் தண்கயிலை மேவி னானே தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந் தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.7
தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே! கொடிய மும்மதில்களை அழித்தவனே! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2530 தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே என்னவனா யென்னிதயம் மேவி னானே யீசனே பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.8
சுதந்திரனாய், எல்லா உலகங்களும் தானே ஆனவனாய், மெய்ப்பொருளாய், அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய், என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2531 எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம் ஆதியும் அந்தமு மாகி யங்கே பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம் பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற் செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.9
எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய், முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று, பின் அவற்றை அழித்தவனே! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறுபட்டவனே! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.
2532 மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக் கையவனே கடியிலங்கைக் கோனை யன்று கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும் விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.044.10
நீலகண்டனே! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்!
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|