LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-7

 

6.007.திருவீரட்டானம் 
காப்புத்திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
2149 செல்வப் புனற்கெடில வீரட்டமும் 
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும் 
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும் 
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக் 
கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.
6.007.1
நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம், சிற்றேமம், மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம், தில்லைச் சிற்றம்பலம், தெற்கில் உள்ள மதுரை, அழகிய ஆனைக்கா, சிராப்பள்ளி, நல்லூர், தேவன்குடி, மருகல், சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும், நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினை யும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.
2150 தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே.
6.007.2
அதிகை வீரட்டம், கோவலூர் வீரட்டம், வெண்ணெய்நல்லூர், அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை, அறையணி நல்லூர், அரநெறி, இடைமருது, இன்னம்பர், ஏகம்பம், மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள்.
2151 சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்த நின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த் தானமும்
அறையார் புனலொழுகு காவி ரிசூழ்
ஐயாற் றமுதர் பழனம் நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்
கழுக்குன்றும் தம்முடைய காப்புக் களே.
6.007.3
பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், பாதிரிப்புலியூர், ஆமாத்தூர், நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தானம், இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர், கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான்.
2152 திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக் களே.
6.007.4
கெடிலக் கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம்.
2153 செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே.
6.007.5
கெடிலக்கரை அதிகை வீரட்டம், திரிபுராந்தகம், அழகிய தேவீச்சரம், வெள்ளம் சூழும் கோட்டுக்கா, குடமூக்கு, கோகரணம், கோலக்கா, இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர், பனையூர், பயற்றூர், பராய்த்துறை, கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.
2154 தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக் களே.
6.007.6
கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.
2155 தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக் களே.
6.007.7
அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.
2156 தௌளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தௌளியா ருள்கி யேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக் களே.
6.007.8
பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும்.
2157 சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக் களே.
6.007.9
அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல் வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.
2158 சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே.
6.007.10
அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும்கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம்.
2159 தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே.
6.007.11
அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம்.
2160 திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக் களே.
6.007.12
அதிகை வீரட்டம், அளப்பூர், அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம், நீர் வளம் மிக்க மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம், நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி, கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.
திருச்சிற்றம்பலம்

 

6.007.திருவீரட்டானம் 

காப்புத்திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

2149 செல்வப் புனற்கெடில வீரட்டமும் 

சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்

தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும் 

தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்

நல்லூரும் தேவன் குடிமருகலும் 

நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்

கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக் 

கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.

6.007.1

 

  நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம், சிற்றேமம், மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம், தில்லைச் சிற்றம்பலம், தெற்கில் உள்ள மதுரை, அழகிய ஆனைக்கா, சிராப்பள்ளி, நல்லூர், தேவன்குடி, மருகல், சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும், நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினை யும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.

 

 

2150 தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்

திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்

ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை

அறையணிநல் லூரும் அரநெ றியும்

ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்

இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்

கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்

கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே.

6.007.2

 

  அதிகை வீரட்டம், கோவலூர் வீரட்டம், வெண்ணெய்நல்லூர், அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை, அறையணி நல்லூர், அரநெறி, இடைமருது, இன்னம்பர், ஏகம்பம், மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள்.

 

 

2151 சிறையார் புனற்கெடில வீரட்டமும்

திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர்

துறையார் வனமுனிக ளேத்த நின்ற

சோற்றுத் துறைதுருத்தி நெய்த் தானமும்

அறையார் புனலொழுகு காவி ரிசூழ்

ஐயாற் றமுதர் பழனம் நல்ல

கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்

கழுக்குன்றும் தம்முடைய காப்புக் களே.

6.007.3

 

  பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், பாதிரிப்புலியூர், ஆமாத்தூர், நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தானம், இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர், கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான்.

 

 

2152 திரையார் புனற்கெடில வீரட்டமும்

திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா

உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்

ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்

வரையா ரருவிசூழ் மாந தியும்

மாகாளம் கேதாரம் மாமேருவும்

கரையார் புனலொழுகு காவி ரிசூழ்

கடம்பந் துறையுறைவார் காப்புக் களே.

6.007.4

 

  கெடிலக் கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம்.

 

 

2153 செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்

திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்

கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்

குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்

பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்

பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்

கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்

கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே.

6.007.5

 

  கெடிலக்கரை அதிகை வீரட்டம், திரிபுராந்தகம், அழகிய தேவீச்சரம், வெள்ளம் சூழும் கோட்டுக்கா, குடமூக்கு, கோகரணம், கோலக்கா, இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர், பனையூர், பயற்றூர், பராய்த்துறை, கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.

 

 

2154 தெய்வப் புனற்கெடில வீரட்டமும்

செழுந்தண் பிடவூரும் சென்று நின்று

பவ்வந் திரியும் பருப்ப தமும்

பறியலூர் வீரட்டம் பாவ நாசம்

மவ்வந் திரையு மணிமுத்த மும்

மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்

கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்

கழிப்பாலை தம்முடைய காப்புக் களே.

6.007.6

 

  கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.

 

 

2155 தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்

சீர்காழி வல்லந் திருவேட்டியும்

உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்

உறையூர் நறையூர் அரண நல்லூர்

விண்ணார் விடையார் விளமர் வெண்ணி

மீயச்சூர் வீழி மிழலை மிக்க

கண்ணார் நுதலார் கரபு ரமுங்

காபாலி யாரவர்தங் காப்புக் களே.

6.007.7

 

  அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.

 

 

2156 தௌளும் புனற்கெடில வீரட்டமுந்

திண்டீச் சரமுந் திருப்பு கலூர்

எள்ளும் படையான் இடைத்தா னமும்

ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்

கொள்ளு மிலயத்தார் கோடி காவும்

குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்

கள்ளருந்தத் தௌளியா ருள்கி யேத்துங்

காரோணந் தம்முடைய காப்புக் களே.

6.007.8

 

  பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும்.

 

 

2157 சீரார் புனற்கெடில வீரட்டமும்

திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்

பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்

பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்

நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்

நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்

காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்

கடவூரில் வீரட்டங் காப்புக் களே.

6.007.9

 

  அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல் வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.

 

 

2158 சிந்தும் புனற்கெடில வீரட்டமும்

திருவாஞ் சியமும் திருநள் ளாறும்

அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்

ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்

எந்தம் பெருமாற் கிடமாவதாம்

இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்

கந்தங் கமழுங் கரவீரமும்

கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே.

6.007.10

 

  அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும்கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம்.

 

 

2159 தேனார் புனற்கெடில வீரட்டமும்

திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்

வானோர் வணங்கும் மணஞ்சேரியும்

மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி

ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்

இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்

கானார் மயிலார் கருமாரியும்

கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே.

6.007.11

 

  அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம்.

 

 

2160 திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்

திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்

வருநீர் வளம்பெருகு மாநிருபமும்

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்

பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற

பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்

கருநீல வண்டரற்றுங் காளத்தியும்

கயிலாயந் தம்முடைய காப்புக் களே.

6.007.12

 

  அதிகை வீரட்டம், அளப்பூர், அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம், நீர் வளம் மிக்க மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம், நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி, கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.