|
||||||||
ஐந்தாம் திருமுறை-45 |
||||||||
5.045.திருத்தோணிபுரம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
1517 மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனும்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே. 5.045.1
சிவபெருமான்மேற் காதல் மிகுந்து, 'மனைக் கண் இரு' என்று நான் கூறியபோது, "எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை?" என்று சொல்வதோடு, "ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன்" என்றும் கூறுகின்றனள் என் மகள்.
1518 நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே. 5.045.2
நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து 'பலி இடுக' என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று.
1519 கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வுண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறுகின்றனள் கன்னியே. 5.045.3
கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள்.
1520 பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே. 5.045.4
பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும்,விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப்பெண்.
1521 பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணிபு ரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே. 5.045.5
சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ?
1522 முல்லை வெண்நகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே. 5.045.6
முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை.
1523 ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தம்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே. 5.045.7
தலைவிக்குற்ற நோயின் காரணம் நேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார்; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள்; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும்.
1524 உறவு பேய்க்கண முண்பது வெண்தலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே. 5.045.8
உறவு பேய்க்கூட்டங்கள்; உண்பதோ வெண்தலையில்; வாழ்வதோ சுடுகாட்டில்; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள்?
1525 மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவண்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே. 5.045.9
மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன்.
1526 இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கியதோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே. 5.045.10
என் பெண்கொடியாகிய மகள், தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள்.
திருச்சிற்றம்பலம்
5.045.திருத்தோணிபுரம் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தோணியப்பர். தேவியார் - திருநிலைநாயகியம்மை.
1517 மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால் நீதி தான்சொல நீயெனக் காரெனும் சோதி யார்தரு தோணி புரவர்க்குத் தாதி யாவன்நா னென்னுமென் தையலே. 5.045.1
சிவபெருமான்மேற் காதல் மிகுந்து, 'மனைக் கண் இரு' என்று நான் கூறியபோது, "எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை?" என்று சொல்வதோடு, "ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன்" என்றும் கூறுகின்றனள் என் மகள்.
1518 நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட மிக்க தையலை வெள்வளை கொள்வது தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத் தக்க தன்று தமது பெருமைக்கே. 5.045.2
நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து 'பலி இடுக' என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று.
1519 கெண்டை போல்நய னத்திம வான்மகள் வுண்டு வார்குழ லாளுட னாகவே துண்ட வான்பிறைத் தோணி புரவரைக் கண்டு காமுறுகின்றனள் கன்னியே. 5.045.3
கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள்.
1520 பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை மேல ளாவது கண்டனள் விண்ணுறச் சோலை யார்தரு தோணி புரவர்க்குச் சால நல்லளா கின்றனள் தையலே. 5.045.4
பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும்,விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப்பெண்.
1521 பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப் பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது சுண்ண மாடிய தோணிபு ரத்துறை அண்ண லாருக்குச் சால அழகிதே. 5.045.5
சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ?
1522 முல்லை வெண்நகை மொய்குழ லாயுனக் கல்ல னாவ தறிந்திலை நீகனித் தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே நல்லை யாயிடு கின்றனை நங்கையே. 5.045.6
முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை.
1523 ஒன்று தானறி யாருல கத்தவர் நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர் துன்று வார்பொழில் தோணி புரவர்தம் கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே. 5.045.7
தலைவிக்குற்ற நோயின் காரணம் நேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார்; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள்; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும்.
1524 உறவு பேய்க்கண முண்பது வெண்தலை உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி துறைக ளார்கடல் தோணி புரத்துறை இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே. 5.045.8
உறவு பேய்க்கூட்டங்கள்; உண்பதோ வெண்தலையில்; வாழ்வதோ சுடுகாட்டில்; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள்?
1525 மாக யானை மருப்பேர் முலையினர் போக யானு மவண்புக்க தேபுகத் தோகை சேர்தரு தோணி புரவர்க்கே ஆக யானு மவர்க்கினி யாளதே. 5.045.9
மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன்.
1526 இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி கட்டம் பேசிய காரரக் கன்றனைத் துட்ட டக்கியதோணி புரத்துறை அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே. 5.045.10
என் பெண்கொடியாகிய மகள், தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|