|
||||||||
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றிய குறிப்பு |
||||||||
குறிப்பு: 1.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர். 2.1960-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர். 3.ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். பிறகு நோபல் பரிசு பெற்ற ’டோம்னிக் பையர்’ என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார். 4.ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். 5.நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர். 6.இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 7.டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார். 8.தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர். 9.இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார். இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது.
நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
அவர் எழுதிய நூல்கள்:
நம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள்
நம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள் 1."உழவுக்கும் உண்டு வரலாறு" விகடன் வெளியீடு 2."தாய் மண்ணே வணக்கம்" நவீன வேளாண்மை வெளியீடு 3."நெல்லைக் காப்போம்" 4."வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்" 5."இனி விதைகளே பேராயுதம் " இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080 6."நோயினைக் கொண்டாடுவோம் " இயல்வாகை வெளியீடு 7."எந்நாடுடையே இயற்கையே போற்றி" விகடன் வெளியீடு 8."பூமித்தாயே"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம் படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு 9."மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்" (நூல்) வாகை வெளியீடு 10."களை எடு " கிழக்கு பதிப்பகம்
|
||||||||
by Swathi on 31 Dec 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|