பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில்
பதரென்று சொல்லுக,
இது மக்கட் பண்பிலனென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பயன் இல பல்லார்முன் சொல்லல் -ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல் ; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம்.
நயத்தல் விரும்புதல். நயம் விருப்பம். 'நயன்' போலி. அறிவுடையோர்க்குப் பயனில் சொல்லின் மீதுள்ள வெறுப்பின் அளவைக் கூறியவாறு.
கலைஞர் உரை:
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச்
செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.